![](pmdr0.gif)
கச்சியப்ப சிவாச்சாரியார் அருளிய
கந்த புராணம் - பகுதி 9c
4. யுத்த காண்டம் / படலம் 12 (2398 - 2967)
kantapurANam of kAcciyappa civAccAriyAr
part 9c /canto 4 (verses 2398 - 2967) )
In tamil script, Unicode format
Acknowledgements:
Our Sincere thanks go to Dr. Thomas Malten & colleagues of the Univ. of Koeln, Germany for providing with a transliterated/romanized version of this work and for permissions to release the Tamil script version as part of Project Madurai collections.
Our thanks also go to Shaivam.org for the help in the proof-reading of this work in the Tamil Script format.
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.
© Project Madurai, 1998-2008.
to preparation
of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
are
http://www.projectmadurai.org/
கச்சியப்ப சிவாச்சாரியார் அருளிய கந்த புராணம்
பாகம் 9c /4. யுத்த காண்டம் / படலம் 13- (2398 - 2967)
உ
செந்திலாண்டவன் துணை
திருச்சிற்றம்பலம்
13. சூரபன்மன் வதைப் படலம் (2398 - 2904) *
சூரபன்மன் இறுதியாகச் சண்முகக்கடவுளோடு நான்குநாள் போர்புரிந்து மடிந்தான் என்பதை
“ஸ..ஈரிரு, நாள்வரைத் துன்னலன் தொலையாது அமராற்றியே” எனவரும் இந்நூல்
இப்படலத்தின் 409-ம் செய்யுள் அடிகளால் அறியலாம். மகேந்திரபுரியில் சூரபன்மனாதியோர்
சண்முகப்பெருமானுடன் எதிர்த்துப் போர்புரிந்தது பத்துநாட்கள் ஆகும்.
இதனை “சொல்லும் ஐந்திருவைகலின் அவுணர்தம் தொகையும், அல்லல்
ஆற்றய சூரனும் முடிந்திட அடுதும்” எனவரும் கந்தபுராணம் - மகேந்திரகாண்டம்
- சயந்தன் கனவுகாண் படலம் 11-ம் செய்யுளின் அடிகளால் அறியலாம்.)
2398 - கொற்ற வேற்படை பரித்திடும் ஆயிர கோடி
ஒற்றர் தங்களை நோக்கியே சூரனாம் உரவோன்
மற்றென் ஆட்சியாம் அண்டங்கள் எங்கணும் வைகிச்
சுற்று தானையைத் தம்மினோ கடிதெனச் சொன்னான். - 1
2399 - சொன்ன காலையின் நன்றென வணங்கியே தூதர்
பன்ன ருங்கதி கொண்டனர் விண்டனர் படர்ந்து
பொன்னின் மேதகும் அண்டங்கள் இடைதொறும் புகுந்து
மன்னர் மன்னவன் தன்பணி முறையினை வகுத்தார். - 2
2400 - வகுத்த காலையில் ஆண்டுறை அவுணமன் னவர்கள்
தொகுத்த நாற்பெருந் தானையங் கடலொடுந் துவன்றி
மிகுத்த அண்டத்தின் புடைதொறும் புடைதொறும் மேனாட்
பகுத்து வைத்திடும் வாயிலின் நெறிகளாற் படர்ந்தார். - 3
2401 - முந்தை அண்டத்தின் நெறிதனில் முழங்கிருஞ சேனை
வந்து வந்திவட் செறிவன விதியொடு மாறாய்ச்
சுந்த ரங்கெழு மாயன்இவ் வுலகுயிர் துய்ப்ப
உந்தி யின்வழி அங்கவை தோன்றுமா றொப்ப. - 4
2402 - பூதம் யாவையும் உயிர்களும் புவனமுள் ளனவும்
பேதம் நீங்கிய சுருதியா கமங்களும் பிறவும்
ஆதி காலத்தின் அநாதியாம் எம்பிரான் அளப்பில்
பாத பங்கயத் துதிப்பவும் போன்றன பகரின். - 5
2403 - இனைய தன்மையால் அண்டத்தின் நெறிதனில் ஏகும்
வனைக ருங்கழல் அவுணர்தம் படையிவண் வரலுங்
கனலி தன்சுடர் மறைந்தன நடுங்கினன் கனலும்
அனிலன் தானுமெய் வியர்த்தனன் நெருக்கமுற் றயர்வான். - 6
2404 - ஆ£¢த்த ஓசையால் அகிலமுந் துளங்கிய அவுணர்
கார்த்த மெய்யொளி கதுவலால் இருண்டன ககனந்
தூர்த்த பூழியால் ஆழிகள் வறந்தன துணைத்தாள்
பேர்த்து வைத்திடு தன்மையால் அண்டமும் பிளந்த. - 7
2405 - கூடும் இப்பெருந் தானையை நோக்கிமெய் குலைவுற்
றோடு தற்கிடம் இன்றிநின் றிரங்கினர் உம்பர்
வீடி னானென வாசவன் மருண்டனன் விதியும்
நீடு மாயனும் முடிவதென் னோவென நினைந்தார். - 8
2406 - பூத லந்தனில் அம்பர நெறிதனில் புடைசூழ்
மாதி ரங்களில் அளக்கரின் வரைகளில் வழியில்
பாத லங்களில் பிறவினில் அவுணர்தம் படைகள்
ஏதும் வௌ¢ளிடை இன்றியே சென்றன ஈண்டி. - 9
2407 - மலர யன்பதம் மால்பதம் முனிவர்கள் வைகும்
உலகம் வாசவன் தொன்னகர் ஏனையோர் உறையுள்
அலரி யாதியர் செல்கதி பிலங்களில் அனிகம்
பலவும் நின்றன செல்லிடம் பெறாதபான் மையினால். - 10
2408 - மாறி லாதன தொல்லையண் டங்களின் வந்த
வீறி லாததோர் தூசிகள் படர்ந்திடும் எல்லை
நூறு கோடியோ சனைகளென் றறிஞர்கள் நுவன்றார்
வேறு பின்வருந் தானையின் பெருமையார் விதிப்பார். - 11
2409 - குறுமை யாமுயிர் வாழ்க்கையர் கொண்டதொல் வளம்போற்
சிறுமை யோவிது விரித்திட அவுணர்கோன் சேனை
அறிஞர் கூறிய பெருந்தொகை தன்னினும் அடங்கா
பிறிது மற்றிதற் குவமையும் ஒன்றிலை பேசின். - 12
2410 - அஞ்சு பட்டிடு பூதங்கள் பல்லுரு வமைந்து
நெஞ்சு பட்டிடும் உயிர்கொடு நேருமேல் நிகரும்
அஞ்சு பட்டிடு பொருப்பெலாஞ் சூறைமுன் மயங்கும்
பஞ்சு பட்டிட நடந்திடு தூசிமுற் படையே. - 13
2411 - அந்த மின்றியே அகன்புவி கொண்டஅண் டத்தில்
வந்தி டுந்திறற் படைகளின் பெருமையா£¢ வகுப்பார்
முந்து தூசிகள் மகேந்திரப் பெருநகர் மூடி
இந்த வண்டத்தின் இடமெலாம் நிறைந்தன இமைப்பில். - 14
2412 - ஆன காலையில் ஒற்றர்போய்ச் சூரனை யடைந்து
பானல் மெல்லடி கைதொழு தையநீ படைத்த
சேனை வந்தயல் நின்றன தூசிமுற் சென்று
வானு லாவுபேர் அண்டத்தை நெருக்கின மன்னோ. - 15
2413 - என்னும் எல்லையில் நன்றென அவுணர்கோன் எழுந்து
தன்ன தாகிய உறையுள் போய்த் தடம்புன லாடித்
துன்னும் ஐவகை உணவுடன் அறுசுவை தொடர்ந்த
அன்னம் உண்டனன் நஞ்சுகொல் மருந்துகொல் அதுவே. - 16
2414 - நீற ணிந்தனன் நெற்றிமெய்ந் நிரைவிரை களபச்
சேற ணிந்தனன் பூந்தொடை பங்கியிற் செறித்தான்
மாறில் பொற்சுடர்க் கலையுடன் அணிகலன் மாற்றி
வேறு வேறுநன் கினியன புனைந்தனன் விரைவில். - 17
2415 - ஈசன் மாப்படை ஏனையோர் பெரும்படை யாவும்
மாசில் ஆயிர கோடிதேர் செலுத்தியே அவையுங்
கேச ரித்திறல் யானமுங் கேடில்பொற் றேரும்
பாச னத்திறல் அவுணர்கொண் டேகுவான் பணித்தான். - 18
2416 - ஆங்க வெல்லையிற் சூரபன் மாவெனும் அவுணன்
பாங்கர் வந்திடு வலவர்தந் தொகையினைப் பாரா
ஓங்கு மோ£¢தடந் தேரினைக் கொணர்திரென் றுரைப்பப்
பூங்க ழற்றுணை வணங்கியே நன்றெனப் போனார். - 19
2417 - வாட்டு கேசரி எழுதி னாயிரம் வயமாக்
கூடடம் அங்கணோ ரெழுபதி னாயிரங் கூளி
ஈட்ட மாகிய தெழுபதி னாயிரம் ஈர்ப்பப்
பூட்டி நன்குறப் பண்ணினார் ஆங்கொரு பொலன்தேர். 20 - 20
2418 - மண்ட லத்தினும் ஆன்றபேர் இடத்தது மருங்கில்
தெண்டி ரைக்கட லாமென ஆர்ப்பது செறிந்த
அண்ட மாயிர கோடியுந் தன்னிடத தாற்றிக்
கொண்டு நின்றிடும் வலியது மடங்கலங் கொடித்தேர். - 21
2419 - முடியும் எல்லையில் எழுதரு மருத்தினும் உந்திக்
கடிது செல்வது சென்றிடு விசையினால் ககுபத்
தடநெ டுங்கிரி அலமரத் தபனருங் குளிர
வடவை யங்கிகள் விளிந்திடப் புரிவதம் மான்தேர். - 22
2420 - ஏழு நேமியும் இடைப்படு தீபமும் யாவுஞ்
சூழு கின்றபேர் அடுக்கலும் ஒன்றிய தொடர்பின்
கேழில்¢ பன்மணி ஓவியப் பத்திகள் கெழுவும்
ஆழி தாங்கிய அண்டமொத் திலங்கிய தகன்தேர். - 23
2421 - தொழுத குந்திறல் அவுணர்கோன் வேள்வியில் துஞ்சி
எழுவ தாகிய எல்லையில் தோன்றிய தெதிர்ந்தார்
குழுவி ரிந்திடத் துரப்பது நான்முகக் குரிசில்
அழியும் நாளினும் அழிந்திடா திருப்பதவ் வகல்தேர். - 24
2422 - கண்ண கன்படை அளப்பில பரித்தது காமர்
விண்ண வர்க்குள வலியெலாங் கொண்டது மேனாள்
அண்ணல் நல்கிய இந்திர ஞாலமும் அனைய
தெண்ணின் மேற்படு மியாணர்பெற் றுடையதவ் விரதம். - 25
2423 - அனைய தாகிய தேரினை வலவர்கொண் டணைந்து
தினக ரன்தனை வெகுண்டவன் தாதைமுன் செலுத்தத்
துணை மற்றதில் இவர்ந்தனன் இவர்தலுந் தொழுது
புனைதி வாகையென் றவுணர்கள் பூமழை பொழிந்தார். - 26
2424 - பொழிந்த காலையில் வலவர்கள் அங்கதிற் புக்குக்
கழிந்த சீர்த்தியான் ஆணையால் தேரினைக் கடவத்
தழிந்த ழீமெனப் பல்லியம் இயம்பின சகங்கள்
அழிந்த நாளெழு கடலென அவுணர்கள் ஆர்த்தார். - 27
2425 - அங்கி யன்னபொற் படியகங் கோடிகம் அடைப்பை
திங்கள் வெண்குடை கவரிகொண் டொழுகினர் சிலதர்
துங்க மிக்கவன் சீர்த்தியும் ஆணையுந் தொடர்ந்து
மங்க லந்திகழ் உருக்கொடு சூழ்ந்திடும் வகைபோல். - 28
2426 - அண்ணல் மேவரு கோநகர் எல்லையுள் அடைந்த
எண்ணில் மாப்பெருஞ் சிகரியின் வாயில்கள் இகந்தே
கண்ண கன்ஞௌ¢ளல் ஆயிர கோடியுங் கடந்து
வண்ண மாமணிக் கோபுர முதற்கடை வந்தான். - 29
2427 - வேறு
தானவர் கோமகன் தடம்பொற் றேரொடு
மாநகர் முதற்கடை வாயில் போதலும்
ஆனது நோக்கியே அங்கட் சூழ்தரு
சேனைகள் ஆர்த்தன உடுக்கள் சிந்தவே. - 30
2428 - ஞெலிததிடு பரவையின் நீல வெவ்விடம்
ஒலித்தெழுந் தாலென உலப்பில் தானைகள்
கலித்தன படர்ந்தன கண்ண கன்புவி
சலித்தது கொடியரைத் தரிக்கொ ணாமையால். - 31
2429 - நேரியம் பரியதோர் நிசாளஞ் சல்லிகை
பேரியம் பணைவயிர் பிறங்கு தண்ணுமை
தூரியம் காகளந் துடிமு தற்படு
சீரியம் பலவுடன் இயம்பிச் சென்றவே. - 32
2430 - சேயின குஞ்சிகள் செறிந்த தானவர்
பாயின தானையில் படர்ந்த பூழிகள்
வாயின பரவைமேல் வடவைத் தீவிராய்ப்
போயின நாளெழு புகையைப் போன்றவே. - 33
2431 - வானினும் மண்ணினும் மாதி ரத்தினுந்
தானிறை கடலினுந் தணப்பின் றாகியே
மேனிறை பூழிகள் மிடைய எங்கணுஞ்
சோனைகொள் பின்பனித் தூவல் போன்றவே. - 34
2432 - சூரனி கரத்தெழு தூளி அந்நகர்
ஆரகில் ஆவியும் யாரும் ஆடிய
பூரிகொள் சுண்ணமும் பொருந்திப் போவது
காரின மின்னொடு கடலுண் டேகல்போல். - 35
2433 - திண்டிறற் கரிகளில் தேரில் வெண்கொடி
மண்டுறு பூழிதோய் வானிற் செல்வன
கொண்டலின் இருதுவிற் கொக்கின் மாலைகள்
தண்டுளி யுறைப்புழிப் படருந் தன்மைபோல். - 36
2434 - படைவகை திசையெலாம் படரப் பாயிருள்
அடைவது சூரறிந் தண்டம் யாவினும்
மிடைதரு கதிர்களை விளிக்க வந்தெனக்
குடைநிரை எங்கணுங் குழுமு கின்றவே. - 37
2435 - வெம்பரி கரியுமிழ் விலாழி மாமதம்
இம்பரின் நகரெலாம் யாற்றின் ஏகலால்
உம்பர்மற் றல்லதை ஒருவன் தானைகள்
அம்புவி சென்றிடற் கரிய தானதே. - 38
2436 - இவ்வகை தானைகள் ஈண்டிச் சென்றிடத்
தெவ்வலி அவுணர்கோன் செம்பொற் றேரின்மேல்
மைவரை மேருவின் வருவ தாமெனக்
கவ்வையின் அமர்புரி களரி ஏகினான். - 39
2437 - பூசலின் எல்லையில் புரவ லன்செலத்
தூசிய தாகியே தொடர்ந்த தானைகள்
ஈசன தருள்மகன் இனிது வைகிய
பாசறை சூழ்ந்தன படியும் வானுமாய். - 40
2438 - உரற்றிய கணமழை உம்பர் சூழ்ந்தென
விரற்றொடு சூழ்படை ஈட்டம் நோக்கியே
மரற்றுறு பலங்களில வாரி கண்வர
அரற்றினர் வெருவினர் அமரர் யாவரும். - 41
2439 - அழுங்கினன் புரந்தரன் அகிலம் யாவையும்
விழுங்குறும் இருவரும் விம்மி னாருளம்
புழுங்கினர் வீரர்கள் பூதர் ஏங்கினார்
கொழுங்கனல் இடைப்படு விலங்கின் கொள்கைபோல். - 42
2440 - ஆவதோர் காலையில் அரியும் நான்முகத்
தேவனும் ஏனைய திசையி னோர்களும்
மூவிரு முகமுடை முதல்வன் தன்னிரு
பூவடி பணிந்திவை புகறல் மேயினார். - 43
2441 - வேறு
அந்தமி லாத அண்டம் ஆயிரத் தெட்டுத் தன்னில்
வந்திடு தானை யோடு மாபெருஞ் சூர பன்மன்
உந்திய தேரின் மேலான் உறுசமர் புரிவான் போந்தான்
முந்திய தூசி நந்தம் பாசறை மொய்த்த தென்றார். - 44
2442 - என்னலும் முறுவல் செய்தாங் கிலங்கெழில் தவிசின் வைகும்
பன்னிரு கரத்து வள்ளல் பவனனைக் குறிப்பின் நோக்க
முன்னம துணர்ந்து வல்லே முளவுகோல் கயிறு பற்றிப்
பொன்னவிர் மனவே கப்பேர்ப் புரவிமான் தேர்முன் உய்த்தான். - 45
2443 - உய்த்திடு கின்ற காலத் தொய்யென எழுந்து காமர்
புத்தலர் நீபத் தாரான் புகர்மழுக் குலிசஞ் சூலஞ்
சத்திவாள் பலகை நேமி தண்டெழுச் சிலைகோல் கைவேல்
கைத்தலங் கொண்டான் என்னின் அவன்தவங் கணிக்கற் பாற்றோ. - 46
2444 - மாறிலா அருக்கன் நாப்பண் வைகிய பரம னேபோல்
ஆறுமா முகத்து வள்ளல் அலங்குளைப் புரவி மான்தேர்
ஏறினான் வீர வாகு இலக்கரோ டெண்ம ராகும்
பாறுலாங் குருதி வேலார் பாங்கராய்ப் பரசி வந்தார். - 47
2445 - இராயிர வௌ¢ள மாகும் எண்டொகைப் பூதர் யாரும்
மராமரம் பிறங்கல் ஈட்டம் வரம்பறு படைகள் பற்றி
விராவினர் சூழ்ந்து சென்றார் விரிஞ்சனே முதலோர் யாரும்
பராவொடு புடையின் நின்று பனிமலர் மாரி தூர்த்தார். - 48
2446 - தூர்த்திடு கின்ற காலைச் சுருதியின் தொகைக்கும் எட்டாத்
தீர்த்தன்மான் றேர்மே லாகித் திண்புவி அண்டந் தன்னில்
பேர்த்திடும் உயிர்கள் மாற்றப் பின்னறு முன்னோன் போல
ஆர்த்திடு தானை வௌ¢ளத் தவுணர்கள் மீது போனான். - 49
2447 - ஆங்கது காலை தன்னில் ஆறிரு தடந்தோள் ஐயன்
பாங்குறு பூதர் யாரும் பாரொடு திசையும் வானும்
நீங்குத லின்றிச் சூழும் நேரலன் படையை நோக்கி
ஏங்கினர் தொல்லை வன்மை இழந்தனா¢ இனைய சொற்றார். - 50
2448 - தீயன புரியுஞ் சூரன் செய்திடு தவத்தாற் பெற்ற
ஆயிர விருநான் கண்டத் தவுணரும் போந்தார் அன்றே
ஏயதோ ரண்டம் ஒன்றில் இருந்தனர் இவர்மற் றன்றால்
மாயிருந் திசையும் விண்ணும் வையமுஞ் செறிந்து நின்றார். - 51
2449 - வரத்தினிற் பெரியர் மாய வன்மையிற் பெரியர் மொய்ம்பின்
உரத்தினிற் பெரியர் வெம்போர் ஊக்கத்திற் பெரியர் எண்ணில்
சிரத்தினிற் பெரியர் சீற்றச் செய்கையிற் பெரியர் தாங்குங்
கரத்தினிற் பெரியர் யாருங் காலனிற் பெரியர் அம்மா. - 52
2450 - மாகத்தின் வதிந்த வானோர் வன்மையும் வளனும் வவ்விச்
சோகத்தை விளைத்து வெம்போ£¢ தொடங்கியே தொலைவு செய்தோர்
மோகத்தின் வரம்பாய் நின்றோ£¢ முழுதுயிர்க் கடலுள் வேட்கை
மேகத்தின் வலிந்த தீயோர் விரிஞ்சன்ஏற் றிடினும் வெல்வோர். - 53
2451 - கூற்றெனும் நாமத் தண்ணல் கொண்டிடும் அரசுஞ் செங்கேழ்
நூற்றிதழ்க் கமல மேலான் நுனித்தனன் விதிக்கு மாறு
மாற்றிடுஞ் செய்கை வல்லோர் மாநில முழுதுண் டாலும்
மாற்றரும் பசிநோய் மிக்கோ ரண்டங்கள் அலைக்குங் கையோர். - 54
2452 - வெங்கனல் சொ£¤யுங் கண்ணார் விரிகடற் புரைபேழ் வாயார்
பங்கமில் வயமேற் கொண்டோ£¢ பவத்தினுக் குறையு ளானோர்
செங்கதிர் மதியந் தோயுஞ் சென்னியர் செயிர்தீர் ஆற்றல்
அங்கத விறையும் பேர அடிபெயர்த் துலவும் வெய்யோர். - 55
2453 - அங்கிமா முகத்தி னான்போல் அடைந்தனர் பல்லோர் யாளித்
துங்கமா முகத்தி னான்போல் தோன்றினர் பல்லோர் சூழி
வெங்கைமா முகத்தி னான்போல் மேயினர் பல்லோர் மேலாஞ்
சிங்கமா முகத்தி னான்போல் திகழ்ந்தனர் பல்லோர் அன்றே. - 56
2454 - மதுவொடு ஆடை பன்போல் வந்தனர் பல்லோர் யாருந்
துதியுறு புகழச்சுந் தோப சுந்தரிற் செறிந்தோர் பல்லோர்
அதிர்கழற் சலந்த ரன்போல் ஆர்த்தனர் பல்லோர் ஆற்ற
முதிர்சின மகிடன் போல மொய்த்தனர் பல்லோர் அம்மா. - 57
2455 - அரன்படை பரித்தோர் பல்லோர் அப்புயத் தவிசின் மேவும்
வரன்படை பரித்தோர் பல்லோர் மழுவொடு தண்டந் தாங்குங்
கரன்படை பரித்தோர் பல்லோர் கால்படை பரித்தோர் பல்லோர்
முரன்படை படுத்த கொண்டல் முதுபடை பரித்தோர் பல்லோ£¢. - 58
2456 - ஆனதொ ரவுண வௌ¢ளம் அநந்தகோ டியதாம் என்றே
தானுரை செய்வ தல்லாற் சாற்றவோ ரளவும் உண்டோ
வானமும் நிலனும் ஏனை மாதிர வரைப்பும் எங்குஞ்
சேனைக ளாகிச் சூழின் யாமென்கொல் செய்வ தம்மா. - 59
2457 - ஒரண்டத் தவுணர் போரால் உலைந்தயாம் ஒருங்கே யெல்லாப்
பேரண்டத் தோருந் தாக்கிற் பிழைப்புறு பரிசும் உண்டோ
காரண்ட அளக்கர் சாடிக் கனவரை எறியுங் கால்கள்
ஏரண்டச் சூழல் புக்கால் அவைபின்னும் இரக்க வற்றோ. - 60
2458 - ஒருவரே எம்மை எல்லாம் உரப்பியே துரப்பர் பின்னை
இருவரே சென்று தாக்கின் யார்இவண் உய்ய வல்லார்
துருவரே யனைய துப்பிற் சூழுறும் அவுணர் யாரும்
பொருவரே என்னில் நேர்போய்ப் பூசலார் தொடங்கற் பாலார். - 61
2459 - எல்லையில் ஆற்றல் கொண்ட எம்முடைத் தலைவர் யாரும்
அல்லன வீரர் தாமும் அவுணரை எதிர்க்க லாற்றா£¢
கல்லொடு மரத்தால் யாமோ அவர்திறல் கடக்க வல்லேம்
ஒல்லைநம் உயிரும் இன்றே ஒழிந்தன போலும் அன்றே. - 62
2460 - நாற்படை அவுணர் தாக்கின் நாமெலாம் விளிதும் வீரர்
காற்படு பூளை யேபோற் கதுமென இரிவர் வாகைப்
பாற்படு திறலோன் நிற்கிற் பழிபடும் இனைய ரோடும்
வேற்படை யொருவன் அன்றி வேறியார் எதி£¢க்க வல்லார். - 63
2461 - நீடுறு திசையும் வானும் நிலனும்வௌ¢ ளிடைய தின்றிப்
பாடுற வளைந்து கொண்டார் பற்றலர் அதனால் யாமும்
ஓடியும் உயய லாகா ஒல்லுமா றவரைத் தாக்கி
வீடுதல் உறுதி யென்றே விளம்பிமேற் சேற லுற்றா£¢. - 64
2462 - மற்றத காலை தன்னில் மாபெரும் பூத சேனைக்
கொற்றவர் பலரும் ஏனை வீரர்தங் குழுவி னோரும்
வெற்றிகொள் மொய்ம்பன் தானும் மிடைந்துசூழ் படையை நோக்கி
இற்றன கொல்லோ நந்தம் வன்மையென் றெண்ண முற்றார். - 65
2463 - அண்டர்கள் முதல்வன் தானும் அமரரும் அகில மெங்கு
தண்டுத லின்றிச் சூழுந் தானவர் அனிக மெல்லாங்
கண்டனர் துளங்கி அஞ்சிக் கவன்றனர் அவருட் காரி
வண்டுள அலங்கற் சென்நி வானவற் கினைய சொல்வான். - 66
2464 - ஆண்டகை முருகன் தன்மேல் ஆயிர விருநா லண்டத்
தீண்டிய தானை யெல்லாம் இறுத்தன இவற்றி னோடு
மூண்டமர் இயற்றி வெல்ல வூழிநாள் முடியும் என்றான்
மாண்டிடு கின்ற தெங்ஙன் அவுணா¢கள் மன்னன் மன்னோ. - 67
2465 - அடுதிறல் வலிபெற் றுள்ள அவுணராம் பானாட் கங்குல்
விடிவதும் அமரர் தங்கள் வெஞ்சிறை வீடு மாறும்
நெடியதொல் வெறுக்கை தன்னை நீங்கிய நமது துன்பம்
முடிவது மில்லை கொல்லோ மொழிந்தருள் முதல்வ என்றான். - 68
2466 - இந்திரன் இனைய தன்மை இசைத்தலும் இலங்கை காத்த
ஐந்திரு சென்னி யானை அடுதிறல் கொண்டு நின்ற
செந்திரு மருமத் தண்ணல் தேவரை அளிக்குந் தொல்லோன்
புந்திகொள் கவலை நாடி இனையன புகலா நின்றான். - 69
2467 - காலமாய்க் காலம் இன்றிக் கருமமாய்க் கரும மின்றிக்
கோலமாய்க் கோலம் இன்றிக் குணங்களாய்க் குணங்கள் இன்றி
ஞாலமாய் ஞாலம் இன்றி அநாதியாய் நங்கட் கெல்லாம்
மூலமாய் இருந்த வள்ளல் மூவிரு முகங்கொண் டுற்றான். - 70
2468 - குன்றுதொ றாடல் செய்யுங் குமரவேள் மேரு வென்னும்
பொன்றிகழ் வெற்பின் வந்து புவனங்கள் முழுதும் அங்கட்
சென்றுறை உயிர்கள் முற்றுந் தேவருந் தன்பாற் காட்டி
அன்றொரு வடிவங் கொண்ட தயர்த்தியோ அறிந்த நீதான். - 71
2469 - பொன்னுரு வமைந்த கஞ்சப் புங்கவ னாகி நல்கும்
என்னுரு வாகிக் காக்கும் ஈசன்போல் இறுதி செய்யும்
மின்னுரு வென்ன யார்க்கும் வௌ¤ப்படை போலும் அன்னான்
தன்னுரு மறைக ளாலுஞ் சாற்றுதற் கரிய தன்றே. - 72
2470 - பாயிருங் கடலிற் சூழ்ந்த பற்றலர் படையை எல்லாம்
ஏயெனும் முன்னம் வீட்டுஞ் சிறுவனென் றெண்ணல் ஐய
ஆயிர கோடி கொண்ட அண்டத்தின் உயிர்கட் கெல்லாம்
நாயகன் அவன்காண் நாஞ்செய் நல்வினைப் பயனால் வந்தான். - 73
2471 - சூரனே முதலோர் தம்மை இமைப்பினில் தொலைக்க உன்னின்
மூரலால் அடுவன் கொண்ட முனிவினால் அடுவன் வாய்மைச்
சீரினால் அடுவன் நாட்டச் செய்கையால் அடுவன் என்றால்
நேரிலா முதல்வன் வன்மை யாவரே நிகழ்த்தற் பாலார். - 74
2472 - பாரிடர் சேனை யோடு படர்ந்ததும் இலக்கத் தொன்பான்
வீரர்கள் புடையில் போற்ற மேயதும் படைகள் பற்றிச்
சூரனை அடுவான் வந்த சூழ்ச்சியுந் தூக்கின் மாதோ
வாரண முதலா மேலோற் கனைத்துமோ ராட லேகாண். - 75
2473 - துய்யதோர் குமர னேபோல் தோன்றிய முதல்வன் சூழ்ந்த
வெய்யதா னவரை யெல்லாம் விரைந்துடன் அறுத்து நீக்கிக்
கையில்வேல் அதனாற் சூரன் ஆற்றலுங் கடக்கும் யாதும்
ஐயுறேல் காண்டி யென்றான் அறிதுயில் அமா¢ந்த பெம்மான். - 76
2474 - மாலிவை பலவுங் கூறி மகபதி உளத்தைத் தேற்றி
ஓலமொ டவுண வௌ¢ளம் உம்பருஞ் செறிந்த செவ்வேள்
பாலுற நின்று போரின் பரிசினைப் பார்த்து மென்றே
வேலைடை முதல்வன் பாங்கா விண்ணவ ரோடும் போந்தான். - 77
2475 - வேறு
அன்ன தன்மைகண் டறுமுகன் முறுவல்செய் தடுபோர்
உன்னி யேகலும் வானமும் வையமும் ஒன்றாத்
துன்னு தானவப் பெருங்கடல் ஆர்த்தமர் தொடங்க
முன்ன மேகிய பாரிடர் யாவரும் முரிந்தார். - 78
2476 - முரிந்த காலையில் பூதரின் முதல்வர்கள் முரட்போர்
புரிந்து சாய்ந்தனர் இலக்கரோ டெண்மரும் பொருதே
இரிந்து நீங்கினர் இன்னதோர் தன்மைகள் எல்லாந்
தெரிந்து திண்டிறல் மொய்ம்பினோன் சிலைகொடு சேர்ந்தான். - 79
2477 - சோ¢பு தன்சிலை வாங்கியே சரமழை சிதறி
நேர்பு குந்திடும் அவுணர்கள் நெடுந்தலை புயங்கள்
மார்பு வெங்கரங் கழலடி வரைகளாய் வீழ
ஈர்பு நின்றமர் இயற்றினன் சிறுவரை இகலி. - 80
2478 - மாக மேல்நிமிர் ஆயிர கோடிமா கடலுள்
நாக மொன்றுசென் றலைத்தென நண்ணலர் எதிர்போய்
ஆக வம்புரிந் துலப்புறாத் தன்மைகண் டழுங்கி
ஏக நாயகன் தனதுபால் வந்தனன் இளவல். - 81
2479 - காலை யங்கதில் அவுணர்தந் தானையோர் கனத்தின்
சாலம் ஓடின பூதரில் தலைவருஞ் சாய்ந்தார்
கோல வெஞ்சிலை வீரரும் முரிந்தனர் குழவிப்
பால னேயிவண் வருமெனச் சூழ்ந்தனர் பலரும். - 82
2480 - தண்டு நேமியுங் குலிசமுஞ் சூலமுந் தனுக்கள்
உண்டு மிழ்ந்திடு வாளியும் உடம்பிடித் தொகையும்
பிண்டி பாலமுங் கணிச்சியும் பாசமும் பிறவும்
அண்டர் தந்திடு படைகளுஞ் சொரிந்துநின் றார்த்தார். - 83
2481 - பாரி டங்களின் படையெலாம் நெக்கதும் பாங்கர்
வீர மொய்ம்பனும் இளைஞரும் வருந்திமீண் டதுவுங்
காரி னம்புரை அவுணர்தஞ் செய்கையுங் காணா
மூரல் செய்தனன் எவ்வகைத் தேவா¢க்கு முதல்வன் - 84
2482 - நாட்டம் மூன்றுடைத் தாதைபோற் சிறிதிறை நகைத்து
நீட்ட மிக்கதோர் சிலையினை நெடுங்கரம் பற்றிக்
கோட்டி நாணொலி கொண்டிட அண்டருங் குலைந்தார்
ஈட்ட மிக்கபல் லுயிர்களுந் துளக்கமெய் தினவே. - 85
2483 - வேறு
முக்கணன் உதவிய திருமுருகன் முரணுறு வரிசிலை முதிரொலிபோய்த்
தொக்கன செவிதொறும் நுழைதலுமே தொலைவறும் அவுணர்கள் தொகைமுழுதும்
நெக்கன பகிர்வன இரதமெலாம் நிரைபட வருபரி புரள்வனவே
மைக்கரி தரைமிசை விழுவனவான் மதிதொடுநெடுவரை மறிவனபோல். - 86
2484 - மாசறு மறைகளின் மறையதனை மலைமுனி யுணர்வகை யருள்புரியந்
தேசிக முதலவன் வரிசிலையிற் செறிமுகில் உறைவகை சிதறுவபோல்
ஆசுகம் அளவில கடவினனால் அடங்கெழும் அவுணர்கள் புடைவளையும்
காசினி அகலமும் விரிகடலுங் ககனமும் மிடைவன கணையெனவே. - 87
2485 - கொடிகளை அடுவன அளவிலவே குடைகளை அடுவன அளவிலவே
படைகளை அடுவன அளவிலவே பரிகளை அடுவன அளவிலவே
கடகரி அடுவன அளவிலவே கனையொலி இரதமொ டவுணர்கள் தம்
முடிகளை அடுவன அளவிலவே முழுதுல குடையவன் விடுசரமே. - 88
2486 - பரவிய தருவினம் என அவுணப் படைநிரை விழுவன தொடுகடலில்
திரையென விழுவன புரவிஇனந் திருநெடு வரைகளின் விழுவனதேர்
கருமைகொள் மணிமுகில் இனமெனவே கடகரி விழுவன கனவரைசூழ்
இரவியும் மதியமும் விழுவனபோல் எழுவன கவிகையும் விழுவனவே. - 89
2487 - செல்லுறு தாள்களும் அடுபடைகள் சிந்திய செங்கைகளுந் திறலே
சொல்லிய வாய்களும் விம்மலுறுந் தோள்களும் நோக்குறு துணைவிழியுங்
கல்லென ஆர்த்திடு கந்தரமுங் கவசமும் வீரர்கள் துவசமுடன்
எல்லையி லாதமர் தனிமுதல்வன் எய்திடும் வாளிகள் கொய்திடுமே. - 90
2488 - வேறு
வட்டணை கொண்டிடு மால்வரையும்,
எட்டெனும் ஓங்கலும் யானைகளும்
பட்டுரு விக்கணை பாறினவால்,
ஒட்டலர் எங்ஙனம் உய்குவதே. - 91
2489 - பொன்னுல கெல்லைபு குந்துலவும்
அன்னமு யர்த்திடும் அண்ணல்பதந்
துன்னுறும் அச்சுதர் தொல்லுலகின்,
மின்னென வேசெலும் வேள்கணையே. - 92
2490 - மேதினி கீண்டு விரைந்துபுகும்,
பாதல மூல பரந்துசெலும்
மூதகும் அண்ட முகட்டுருவும்,
மாதிரம் ஏகுறும் வள்ளல்சரம். - 93
2491 - மூவிரு செய்ய முகத்தொருவன்,
ஏவிய செஞ்சரம் எங்குமுறா
மேவலர் தங்களை வீட்டிடும்வே,
றேவர்கள் கண்ணும் இறுத்திலவே. - 94
2492 - ஆனனம் ஆறுள அண்ணல்சரம்,
தானவர் சென்னிகள் தள்ளுதலும்
வானிடை போயின மாண்கதிர்கள்
மேனிம றைப்புறும் வெய்யவர்போல். - 95
2493 - வாளெழு வேல்பிற வாங்கினர்தந்,
தோள்களை வாளி துணித்தெறிய
நீளிடை சென்று நிரந்திடுதங்,
கேளிரை அட்டன கீழ்மையர்போல். - 96
2494 - மாசகல் வானக மாதிரவாய்,
காசினி வேலைகளத தின்அகம்
பாசறை சுற்றிய பாடியெலாம்,
ஆசற அட்டனன் அற்புதனே. - 97
2495 - அட்டிடு கின்றுழி அம்புயன்மால்,
ஒட்டுறு வாசவன் உள்மகிழாக்
கெட்டனர் தானவர் கேடில்துயர்,
விட்டனம் என்று விளம்பினரே. - 9
2496 - அடைந்தனர் விம்மிதம் ஆங்கவுணர்,
மிடைந்த நோக்கினர் வேற்படையோன்
தடிந்தது காண்சிலர் தாரணிமேற்,
கிடந்தது கண்டனர் கேசரரே. - 99
2497 - அலமரு பாரிடர் அவ்வவர்தந்,
தலைவர்கள் ஏனையர் தானவர்தம்
மலிபடை சாய்த்து வயம்புனைவிற்,
புலவனை ஆர்ப்பொடு போற்றினரே. - 100
2498 - வள்ளல்ச ரம்பட வான்முகடு,
கொள்ளுறு தானை குழாந்தொலைய
வௌ¢ளிடை யாயின விண்ணவர்தம்,
உள்ளக மாற்றவு வப்புறவே. - 101
2499 - அண்டக டாகம தப்புறமாய்க்,
கொண்டிடு தானவர் கொள்கையிது
கண்டிறை வன்கழல் காணநெறி,
உண்டினி யென்றனர் உள்மகிழ்வார். - 102
2500 - காற்றென அண்ட கடாகநெறி,
தோற்றிய வாயில் தொடர்ந்துபுகா
மேற்றிகழ் தேர்கரி வெம்பரியின்,
ஏற்றமொ டொல்லென ஏகினரால். - 103
2501 - அந்நெறி ஏகியிவ் வண்டமெலாந்,
துன்னினர் வான்புவி சூழ்ந்துவௌ¤
என்னது மில்லென ஈண்டினரால்,
முன்னுறவந்து முடிந்தவர்போல். - 104
2502 - சூரன் எனப்படு தொல்லிறைவன்,
பேரமர் ஆற்றிடு பெற்றியினால்
தேரிடை வந்துறு செய்கைதெரீஇ,
ஆர்வமொ டேநெடி தார்த்தனரே. - 105
2503 - ஆர்த்தனர் தம்முன் அடைந்துளர்தாம்,
பேர்த்திடு கின்ற பிணக்கிரியாய்
ஈர்த்திடு சோரி இடைப்படுதல்,
பார்த்தனர் சிந்தை பரிந்தனரே. - 106
2504 - பரிந்தனர் நம்படை பட்டிடவே,
புரிந்திடு வானொடு போர்புரியா
விரைந்து வயங்கொடு மீடுமெனாத்,
தெரிந்தனர் சிந்தனை தேற்றினரே. - 107
2505 - தேற்றிடு கின்றுழி தேவரெலாம்,
போற்றிட வீரர் புடைக்கணுற
ஆற்றல்கொள் பூதர்கள் ஆர்த்திடவே,
தோற்றினன் ஈறொடு தோற்றமிலான். - 108
2506 - சேயுரு வாகிய சீர்முதல்வன்
மேயது கண்டு மிகச்சிறியன்
பாய்பரி யானை படைத்துமிலான்,
ஏயிவ னேநம தெண்ணலனே. - 109
2507 - ஆண்டகை மைந்தனிவ் வண்டமெலாம்,
ஈண்டியதானை இமைப்பொழுதின்
மாண்டிட அட்டனன் மற்றிதுதான்,
ஈண்டிடும் அற்புத நீர்மையதே. - 110
2508 - அன்னது நின்றிட அங்கவன்மேல்,
மன்னவர் மன்னவன் வந்துபொரு
முன்னமர் ஆற்றி முடிக்குதும்யாம்,
என்ன இயம்பினர் யாவருமே. - 111
2509 - தற்பமொ டின்னன சாற்றியவண்,
முற்படு தானவர் முக்கணுடைத்
தற்பரன் நல்கிய சண்முகனை,
வற்புடன் ஆர்த்து வளைந்தனரால். - 112
2510 - வளைந்திடு காலையில் வானவர்கள்,
உளைந்தனர் பூதர்கள் உட்கிமனந்
தளர்ந்தனர் வீரர் சலித்தனரால்,
விளைந்த பேரமர் மீட்டுமெனா. - 113
2511 - வேறு
ஐயன்ம ருத்தினை அத்துணை நோக்கிக்
கையணி நெற்றி கடைக்குழை யாகி
வெய்யவர் தானைகள் மேவுழி யெல்லாம்
வையம்வி டுக்குதி வல்லையில் என்றான். - 114
2512 - அட்டுறு நீப அலங்கல் புனைந்தோன்
கட்டுரை கொண்டு கரந்தொழு காலோன்
ஒட்டுறு நண்ணலர் உற்றுழ காணா
விட்டனன் அம்ம விறற்பரி மான்தோ¢. - 115
2513 - மண்ணிடை சென்றிடு மாதிர நீந்தும்
விண்ணிடை சூழ்தரும் வேலையின் மீதாங்
கண்ணுறும் எப்படி கைதொழும் வானோர்
எண்ணினும் நாடரி தெந்தைபி ரான்தேர். - 116
2514 - சேயது காலை திறத்திற மாகி
மூயின தானவர் மொய்ம்புறு தானை
சாய்வுற ஓர்தொடை தன்னில் அநந்தம்
ஆயிர கோடிக ளாக்கணை தொட்டான். - 117
2515 - பரிந்தன சூழ்ந்தவர் பாணிகள் மொய்ம்பு
சிரந்துணி வுற்றன செம்புன லாழி
சொரிந்த பிணக்கிரி துற்றிய வற்றால்
நெரிந்தது வையம் நௌ¤ந்தது நாகம். - 118
2516 - பொய்கொலை ஆற்றிய பூரியர் உக்கார்
செய்குவர் நன்மை செறிந்துள ரேனுங்
கைகெழு ஞாளிக ளேகறித் துண்ட
மைகெழு தானவர் மாண்டிடும் யாக்கை. - 119
2517 - ஒன்னலர் மீதின் உயிர்க்குயி ரானோன்
மின்னென வீசிய வெஞ்சர மாரி
பின்னுற முந்து பெயர்ந்திடு மென்றால்
அன்னவன் தோ¢விரை வா£¢கணிக் கின்றா£. - 120
2518 - பரத்தினு மேதகு பண்ணவன் வா£¢வில்
கரத்தினை யும்விரை வாற்கரந் தூண்டுஞ்
சரத்தினை யுந்தடந் தேரினை யுங்கால்
உரத்தினை யும்புகழ் வார்புடை யுள்ளோர். - 121
2519 - வெவ்விச யப்படை வீட்டிடும் வாளிச்
செவ்விசை தேர்விசை நாடினர் செவ்வேள்
கைவிசை யோநெடுங் கால்விசை தானோ
வெவ்விசை யோவிசை என்றனர் வானோர். - 122
2520 - துய்யவன் வாளி துணிந்திட வீரர்
கையொடு வானிடை செல்வ கணிப்பில்
ஐயிரு வட்டம ராப்புடை பற்ற
வெய்யவர் பற்பலர் விண்ணெழல் போலும். - 123
2521 - காலொரு பாங்கர் கழுத்தொரு பாங்கர்
வாலொரு பாங்கர் மருப்பொ டெருத்தம்
மேலொரு பாங்கர் வியன்கையொர் பாங்காத்
தோலினம் இவ்வகை யேதுணி கின்ற. - 124
2522 - பல்லணம் அற்றன பன்முழு தற்ற
செல்லுறு தாளொடு சென்னியும் அற்ற
ஒல்லொலி அற்ற உரந்துணி வுற்ற
வல்லமா¢ நீந்துறு மாத்தொகை முற்றும். - 125
2523 - மாழைகொள் வையம் மடிந்திட நேமி
ஆழிகொள் சோரியின் ஆழ்வன மேருச்
சூழுறும் வெய்யவர் தொல்புவி கீண்டே
கீழுறும் எல்லை கெழீஇயின போலும். - 126
2524 - ஏறிய தேர்களும் யானைகள் யாவுஞ்
சூறைகௌ¢ வாசிக ளுந்துணி வுற்றே
வீறகல் வீரர்மி சைப்பட வீழ்ந்த
மாறவை ஆற்றிடும் வல்வினை யேபோல். - 127
2525 - ஞாலமும் வானமும் நண்ணலர் ஆவி
மாலொடு வாரி மடங்கல் உலைந்தான்
சாலுமி வற்கிது தாள்வலி யாற்கொல்
கால னெனப்புகல் கட்டுரை பெற்றான். - 128
2526 - எறிபடை யாவையும் ஏமம தாகச்
செறிபடை யாவையுஞ் சேயவன் ஏவால்
முறிபடு கின்ற முனிந்துவ ணப்புட்
கறிபட மெய்துணி கட்செவி யேபோல். - 129
2527 - முன்னுறு வார்கள் முரட்படை தூவிப்
பின்னுறு வார்பெய ராதுபு டைக்கண்
துன்னுறு வார்கள் எலாந்துணி வாக
மின்னென எங்கணும் வேள்கணை தூர்த்தான். - 130
2528 - சூலம தேகொல் கணிச்சிகொல் தொல்லை
மாலெறி நேமிகொல் வச்சிர மேகொல்
காலொடு சென்ற கனற்குழு வேகொல்
வேலது கொல்லென வேள்கணை விட்டான். - 131
2529 - வேறு
மழைத்திடு மெய்யுடை மாற்றலர்கள்,
இழைத்திடு மாய இயற்கைகளும்
விழுத்தக வீசும் விற்படையும்,
பிழைத்தன தாங்கள் பிழைத்திலரால். - 132
2530 - முக்கணன் மாமகன் மொய்கணைகள்,
தொக்கவர் யாக்கை துணித்திடலும்
மெய்க்கிடு பல்கலன் மீன்விழல்போல்,
திக்குல விப்படி சிந்தினவே. - 133
2531 - அண்ணல் சரங்கள் அறுத்திடலும்,
எண்ணலர் யாக்கைகள் இற்றவைதாம்
மண்ணை யளந்தயில் மாலெனவே,
விண்ணை யளந்து விழுங்கினவே. - 134
2532 - சூழுறு தானை துணிந்தஉடல்,
ஏழெனும் நேமியும் எண்டகுபேர்
ஆழியும் விண்ணும் அடைத்திமையோர்,
வாழுல கங்களை வௌவியவே. - 135
2533 - காடி யிழந்து கவந்தமதாய்,
ஆடின வௌ¢ளமும் ஆயிரமா
கோடி யதுண்டு குகன்கணையால்,
வீடின எல்லை விதிக்குநர்யார். - 136
2534 - வீழுறு மாற்றலர் மெய்க்குருதி,
ஆழக ளாகி அகன்புவியில்
பூழைக ளோடு புகுந்துபிலம்,
ஏழுள எல்லையும் ஈண்டியதே. - 137
2535 - வேறு
பாதல எல்லை பரந்திடு சோரி
பூதல மீண்டு புகுந்து பராவி
ஓத நெடுங்கடல் ஓங்கிய வாபோல்
மாதிரம் எங்கும் மறைத்தன அன்றே. - 138
2536 - மீனுடு வாக விளங்கிய திங்கள்
பானு மலா¢ந்திடு பங்கய மாகச்
சோனைகொள் மாமுகில் தோணிய தாக
வானிமிர் செம்புனல் மாகடல் ஒக்கும். - 139
2537 - மாசறு கூற்றனும் மற்றுளர் தாமுங்
கேசர ராகிய கிங்கரர் யாரும்
பாசம லைந்திடு பல்பிணி பற்றா
வீசினர் ஆருயிர் மீன்கள் கவர்ந்தார். - 140
2538 - பாலுறு கின்ற பணிக்கிறை நாப்பண்
மாலரு ளில்துயில் மாட்சிமை யென்ன
நீலுறு திங்கள் நிணங்கெழு செந்நீர்
வேலையின் மீது விளங்கிய தம்மா. - 141
2539 - மட்டறு செம்புனல் வாரிதி நீந்தி
ஒட்டலர் யாக்கையின் ஓங்கல் அறுத்துத்
தட்டுறு செங்கதிர் சண்முக மேலோன்
விட்டிடு நேமியின் விண்மிசை செல்லும். - 142
2540 - சிறைப்புற வுக்கருள் செய்திட மெய்யூன்
அறுப்பவன் என்ன அடைந்தனர் விண்ணின்
நெறிப்படு வானவர் நேரலர் யாக்கை
உறப்படு சோரிமெய் உற்றிடு நீரால். - 143
2541 - ஆனதொ ரெல்லையில் அண்ட நிறைந்த
சேனைகள் வீழ்ந்தன செம்மல் சரத்தால்
ஊனுயிர் பூதமொ ழந்தன முக்கண்
வானவன் மூரலின் மாய்ந்திடு மாபோல். - 144
2542 - வேறு
அண்டம் ஈங்கிது முற்றொருங் கீண்டிய அவுணர்
தண்ட மாய்தலும் ஏனைய அண்டங்கள் தம்மில்
கொண்ட தானைகள் பின்னரும் வந்திடக் குமரன்
கண்டு மற்றவை தொல்லைத்தனன் செலுத்திடு கணையால். - 145
2543 - அறுத்து வெம்முமுனத் தானையை யாண்டுசெல் லனிகம்
மறித்தும் வந்துவந் தடைதரும் இவணென மனத்துட்
குறித்து வெங்கணை மாரியால் அண்டகோ ளகையின்
நெறித்த ரும்பெரு வாயிலை யடைததனன் நிமலன். - 146
2544 - ஆண்டு சென்னெறி மாற்றியே அண்ணல்வெங் கணையால்
மாண்ட தானைகள் சோரியுங் களேவர மலிவும்
நீண்ட பாதலங் கடற்புவி கொண்டுவான் நிமிர்ந்தே
ஈண்டு கின்றது கண்டனன் வரைபக எறிந்தோன். - 147
2545 - நெற்றி நாட்டத்தின் உலகெலாம் அட்டிடு நிமலன்
பெற்ற மாமகன் பன்னிரு விழிகளும் பிறங்கு
கற்றை வெஞ்சுடர் வடவைபோல் ஆக்கியக் கணத்தில்
உற்று நோக்கினன் நெரிந்தன களேவரத் தோங்கல். - 148
2546 - வெந்து நுண்டுகள் பட்டன களேவரம் விசும்பின்
உந்து சோ£¤நீர் வறந்தன மூவகை உலகு
முந்து போலவே அமைந்தன முளரியான் முகுந்தன்
இந்தி ராதியர் ஆர்த்தனர் குமரனை ஏத்தி. - 149
2547 - பாறு லாவரு களேவரத் தமலையும் படிமேல்
வீறு சோணித நீத்தமும் வேவுற விழித்து
நீற தாக்கினான் சூரனை அட்டிலன் நின்றான்
ஆறு மாமுகன் ஆடலை உன்னினன் ஆங்கொல். - 150
2548 - ஆகும் எல்லையின் ஒல்லையின் அடுகளத் தடைந்த
சேகு நெஞ்சுடைச் சூரன்இத் திறமெலாந் தெரிந்து
மாக நீடுநந் தானையை அலைத்தமாற் றலனை
நாகர் தம்மொடு முடிக்குவன் யானென நவின்றான். - 151
2549 - மாற்றம் இத்திறம் இசைத்திடும் அவுணர்கோன் மனத்தில்
சீற்ற மூண்டிட அமர்வினை குறித்தனன் திகிரிக்
காற்றின் ஒல்லைவந் தேற்றலும் மருத்துவன் கடவிப்
போற்று தேர்மிசை முருகனுஞ் சென்றெதிர் புகுந்தான். - 152
2550 - புக்க காலையில் அறுமுகன் தோற்றமும் புடையின்
மிக்க பன்னிரு கரங்களும் வியன்படைக் கலனுந்
தொக்க வீரமும் வன்மையும் நோக்கியே தொல்லைத்
தக்க னேயென அவுணர்கோன் இன்னன சாற்றும். - 153
2551 - சிறந்த வான்மதி மிலைச்சினோன் அருள்புரி செயலால்
இறந்தி டேனியான் என்றுமிப் பெற்றியாய் இருப்பேன்
மறந்தும் என்னொடு பொருதிலர் தேவரும் மலைந்தே
இறந்து ளார்பலர் உணர்ந்திலை போலுநீ இதுவே. - 154
2552 - உள்ளம் நொந்துநொந் தென்பணி ஆற்றியே உலைந்து
தள்ளு றுஞ்சுரர் மாழியினைச் சரதமென் றுன்னிப்
பிள்ளை மென்மதி யாலிவண் வந்தனை பெரிதும்
அள்ள லுற்றுழிப் புகுந்திடுங் கயமுனி யதுபோல். - 155
2553 - உடைப்பெ ரும்படை செறுத்தனை பாலனென் றுன்னை
விடுப்ப தில்லையால் வெரிநது கொடுக்கினும் விரைவில்
படுப்பன் வானவர் தொகையுடன் பாரிடர் தமையுங்
கெடுப்ப னென்றனன் தன்பெருங் கிளையுடன் கெடுவான். - 156
2554 - வெம்பு ரைத்தொழிற் கொருவனாங் கயவநீ வெறிதே
வம்பு ரைத்தனை யாவதொன் றில்லைநின் மார்பஞ்
செம்பு ரைப்பட யாம்விடு கின்றதோர் திறல்வாய்
அம்பு ரைத்திடு மாறுனக் கென்றனன் அமலன். - 157
2555 - ஆரும் நேரிலாப் புங்கவன் சேயின தறையச்
சூர னாகியே அவுணர்கோன் துண்ணெனச் செயிர்த்து
மேரு நேர்வதோர் வா¤சிலை யெடுத்துவிண் ணிழியும்
வாரிபோன் றிடு நாணினை ஏற்றியே வளைத்தான். - 158
2556 - வளைத்த டங்கிரி புரைவதோர் சிலையினை வயத்தால்
வளைத்த செய்கையைக் காண்டலும் பாரிடர் வானோர்
வளைத்த டங்கடல் வந்திடு நஞ்சொடு மலைவான்
வளைத்த தன்மைபோல் அவுணர்தம் முதல்வனை வளைத்தார். - 159
2557 - சிலையை வீசினர் கொடுமரம் வீசினர் செறிமூ
விலையை வீசினர் படையெலாம் வீசினர் எதிர்ந்தார்
உலைய வீசியே அடல்செயும் மும்மதத் துவாவை
வலையை வீசியே பிணித்திட மதித்துளார் என்ன. - 160
2558 - கண்டு மற்றதை அவுணர்கோன் வில்லுமிழ் கணையாங்
கொண்டால் நுண்துளி சிதறியே கணங்கள்கூட் டறுத்து
விண்டு லாவர அரக்கினாற் குயின்றதோ£¢ வெற்பைச்
சண்ட வெங்கனல் உடைப்பது போலவே தடிந்தான். - 161
2559 - வீடி னார்களும் புயங்கரந் துணிந்திட மெலிந்து
வாடி னார்களும் மயங்கிவீழ்ந் தார்களும் வல்லே
ஓடி னார்களும் ஓடவும் வெருவிவேற் றுருவங்
கூடி னார்களும் ஆயினர் பாரிடக் குழாத்தோர். - 162
2560 - பூதர் சாய்ந்துழி இலக்கரோ டெண்மரும் பொருவில்
வேத நாயகன் தூதனுஞ் சூழ்ந்துடன் மேவிக்
கோதை தூங்கிய கொடுமர மாயின குனித்துச்
சோதி வான்கணை மாரிகள் அவுணன்மேற் சொரிந்தார். - 163
2561 - சொரிந்த வெங்கணை எங்கணும் வருதலுஞ் சூரன்
தெரிந்து வாளிதொட் டறுக்கலன் நின்றதோர் செல்வி
விரைந்து வந்தவை ஆங்கவன் மெய்ப்பட விளிந்து
பரிந்து போயின செய்ததொன் றில்லைஅப் பகழி. - 164
2562 - பரப்பின் ஈண்டிய வீரதர்தஞ் சூழச்சியைப் பாரா
உரப்பி ஆவலங் கொட்டியே வெகுளிகொண் டொருதன்
பொருப்பு நேர்சிலை குனித்துவெஞ் சிலீமுகம் பொழிந்து
திருப்பெ ருந்தடந் தேரொடுஞ் சாரிஆகை திரிந்தான். - 165
2563 - நூறு கோடிவெஞ் சரமொரு தொடையுற நூக்கிச்
சூறை யாமென வட்டணை திரிந்துளான் சூழ்வோர்
மாறு தூண்டிய சரங்களைத் தணித்துமற் றவர்கள்
ஏறு தேருடன் பிடித்திடு சிலைகளை இறுத்தான். - 166
2564 - வையம் வில்லுடன் இற்றபின் மற்றவர் மலைவு
செய்ய உன்னுமுன் மொய்ம்பினும் உரத்தினுஞ் சிரத்துங்
கையி னுங்கணை ஆயிர மாயிரங் கடுந்தீப்
பெய்யும் மாரிபோற் செறித்தனன் செம்புனல் பெருக. - 167
2565 - புரந்த னிற்செறி கறையினா£¢ புலம்புகொள் மனத்தார்
உரந்த ளர்ந்துளார் வில்வலி இழந்துளார் ஒருங்கே
இரிந்து நீங்கினர் இலக்கரோ டெண்மரும் இளவல்
திருந்த லன்தடந் தேர்மிசைப் பாய்ந்தனன் சினத்தால். - 168
2566 - பாய்ந்து திண்டிறல் மொய்ம்பினான் பரமன்முன் னளித்த
நாந்த கந்தனை யுரீஇக்கொடு நண்ணலர்க் கிறைவன்
ஏந்து வில்லினைத் துணித்தனன் துணித்தலும் எரிபோல்
காய்ந்து வெய்யவன் புடைத்தனன் உரத்திலோர் கரத்தால். - 169
2567 - அங்கை கொண்டுசூர் ஒருபுடை புடைத்தலும் அகலம்
பொங்கு சோணிதம் அலைத்திட வாகையம் புயத்துச்
சிங்கம் வீழ்ந்தயர் வுற்றிடத தூதனைச் செகுத்தல்
இங்கெ னக்கடா தென்றெடுத் தும்பரின் எறிந்தான். - 170
2568 - எறிந்த காலையில் விண்ணிடைப் படர்ந்திடும் ஏந்தல்
அறிந்து மீண்டுசென் றாறுமா முகன்புடை அடைந்தான்
தறிந்து போகிய சிலையினைத் தரைமிசை யிட்டுச்
சிறந்த தோர்தனு எடுத்தனன் தீயரில் தீயோன். - 171
2569 - அத்த மேல்கிரி உதயமால் வரைத்துணை யான்று
நித்த லும்பிறர்க் கிடர்செய்து மேருவின் ஈண்டு
கொத்து நீடுபல் குவடுடைத் தாகியே குமரன்
சத்தி யாலட நின்றவெற் பனையதத் தனுவே. - 172
2570 - வனைக ருங்கழல் அவுணனக் கார்முகம் வளைத்துப்
புனலும் அங்கியும் காலுடன் ஒலிப்பது புரைய
எனைவ ருந்துளக் குறும்வகை நாணொலி யெடுத்தான்
அனைய பெற்றியை அறிந்தனன் அமரரை அளித்தோன். - 173
2571 - புயலின் மேனியன் புவிநுகர் காலையும் போதகன்
துயிலு மாலையுந் துஞ்சிய தொலையா
தியலு மண்டத்தின் அடிமுடி உருவிநின் றிலங்குங்
கயிலை போல்வதோர் நெடுஞ்சிலை எடுத்தனன் கந்தன். - 174
2572 - வாரி யாலுல கழிந்திடும் எல்லையின் மருங்கின்
மேரு வாதியாம் வரைகளுங் கிரிகளும் விசும்பில்
காரு மேலுள உலகமும் அமரருங் கயிலைச்
சாரல் சூழதல்போல் விரவியார்ப் புடையததத் தனுவே. - 175
2573 - நீட்ட மிக்கதோர் அப்பெருஞ் சிலையினை நிமலன்
தோட்டு ணைக்கொடு வாங்கியேழ் வகையினால் தோன்றும்
ஈட்ட மிக்கபல் லுயிர்களும் வான்உரும் ஏற்றின்
கூட்ட மாகிய மார்த்தெனக் குணத்தொலி கொண்டான். - 176
2574 - குணங்கொள் பேரொலி கோடலும் இரலையூர் கொற்றத்
தணங்கு லாவரு கார்முகங் குழைத்துளை யவதி
இணங்க வாங்கியே பத்துநூ றாயிரத் திரட்டி
கணங்கொள் வெஞ்சரம் உகைத்தனன் கூற்றினுங் கடியோன். - 177
2575 - வான்ம றைத்தன மாதிரம் மறைத்தன மதிதோய்
மீன்ம றைத்தன கதிர்வெயின் மறைத்தன வேலை
தான்ம றைத்தன வசுமதி மறைத்தன தருவார்
கான்ம றைத்தன வரைகளை மறைத்தன கணைகள். - 178
2576 - காற்றிற் செல்வன அங்கியிற் படர்வன கடுங்கட்
கூற்றிற் கொல்வன வேலைவெவ் விடத்தினுங் கொடிய
பாற்றுத் தொல்சிறை உள்ளன ப·றலை படைத்த
நாற்றிக் கும்புகழ் அவுணர்கோன் ஆணையின் நடப்ப. - 179
2577 - பருமி தத்தன மேருவைத் துளைப்பன பாங்கர்
வரைகி ழிப்பன அண்டமும் பொதுப்பன வான்தோய்
உருமி டிக்குலம் பொருவன விடத்தையுண் டுமிழ்வ
கருமை பெற்றன சேயன தீயவன் கணைகள். - 180
2578 - துண்ட வெண்பிறை வாளெயிற் றவுணர்கோன் துரப்ப
மிண்டு வெங்கணை யெங்கணுஞ் செறிந்திட விண்ணோ£¢
கண்டு கண்ணனை அணுகியே கைகுலைத் தைய
உண்டு கொல்நமக் கொளிப்பதோர் இடமென உரைத்தார். - 181
2579 - உரைத்து ளார்க்குமால் மாறுரை வழமுன் ஔ¢வேல்
கரத்தி லேந்திய குமரவேள் இன்னது கண்ணால்
தெரித்து வெங்கனல் விடுத்திடும் ஊதைபோற் சிலதன்
சரத்தி னாலவன் தூண்டிய கணையெலாந் தடிந்தான். - 182
2580 - மடிந்தி டும்படி மாற்றலன் சரங்களை வள்ளல்
தடிந்த தன்மைகண் டமரர்கள் உவகையில் தழைத்தார்
படர்ந்து நீடிய கங்குலின் பாயிருள் புலர
விடிந்த காலையின் எழுங்கதிர் கண்டமே தினிபோல். - 183
2581 - வேறு
அங்க வெல்லை அவுணர்கோன்,
எங்கள் நாதன் எதிருற
மங்குல் போல்வ ரம்பிலாச்,
செங்கண் வாளி சிதறினான். - 184
2582 - ஆய காலை அறுமுகன்,
தீயன் உந்து செறிகணை
மாய வாளி மாமழை,
ஏயெ னாமுன் ஏவினான். 185 - 185
2583 - எங்கள் நாதன் ஏவிய,
துங்க வாளி சூர்விடும்
புங்க வங்க ளைப்புரத்,
தங்கி போல றுத்தவே. - 186
2584 - அறுத்த பின்னும் அறனிலான்,
மறுத்தும் வாளி மாமழை
கறுத்த கண்டர் காளைமேல்,
செறுத்து வல்லை சிந்தினான். - 187
2585 - சிந்து கின்ற செஞ்சரம்,
வந்து றாமுன் வந்தெனக்
கந்தன் நூறு கணைதொடா,
அந்தில் பூழி ஆக்கினான். - 188
2586 - பூழி செய்து பொள்ளென,
ஊழி நாதன் ஒண்சரம்
ஏழு நூற தேவினான்,
சூழு மாயை தோன்றல்மேல். - 189
2587 - மாயை மைந்தன் மற்றதை,
ஆய வாளி யால்அறுத்
தேவி னானி ராயிரஞ்,
சேயின் முன்சி லீமுகம். - 190
2588 - வேறு
விட்டதனை அத்தொகை விறற்பகழி தன்னால்
அட்டுவிரை விற்கடவுள் ஆயிர விரட்டி
கட்டழலை யொத்துள கடுங்கணைகள் தம்மைத்
தொட்டனன் வருத்தமொடு சூர்கிளை துளங்க. - 191
2589 - முராரியுத வுஞ்சுதனை முந்துதளை இட்டாண்
டொராயிரம் அளித்தபரன் உய்த்தகணை செல்ல
இராயிர நெடும்பகழி ஏவியவை நீக்கி
அராவிறையும் வையமும் அழுங்கலுற ஆர்த்தான். - 192
2590 - ஆர்த்தவன் விடுங்கணை அனைத்தினையும் முக்கண்
மூர்த்திதரு கான்முளை செலச்செல முடித்தான்
கார்த்தெழு புகைப்படலை கான்றுநிமிர் செந்தீச்
சேர்த்தினவை யாவையும் மிசைந்திடு திறம்போல். - 193
2591 - ஐயன்விடு வாளிகளை அவ்வசுரன் நீக்கும்
வெய்யன்விடு வாளிகளை வேள்கடி தறுக்கும்
எய்யுநெடு வெம்பகழ இற்றவைகள் சிந்தி
வையமிசை போகியன வானமணித் தென்ன. - 194
2592 - முற்றிய அமர்த்தலை முனிந்திவர் செலுத்துங்
கொற்றநெடு வாளிகள் குறைந்துழ எழுந்தீப்
பற்றியது பாரிடை பகிர்ந்தவரை முற்றும்
வற்றிய அளக்கரும் வறந்துளது கங்கை. - 195
2593 - தார்கெழுவு வேற்படை தடக்கையுடை யோனுஞ்
சூரனும் இவாறமர் இயற்றுதொழில் காணா
வீரமட மாதுளம் வியந்திவர் தமக்குள்
ஆரிடை நடத்துமென ஐயமொடு நின்றான். - 196
2594 - ஆளரிதன் முன்னிளவல் ஆனைவத னத்துக்
காளைமகிழ் பின்னிளவல் கார்முகம் உகைக்கும்
வாளிமழை ஏயலது மற்றவர்கள் தம்மை
நீள்விழியி னால்தெரிகி லார்புடையின் நின்றோர். - 197
2595 - நீடுசமர் இன்னணம் நிகழ்ச்சியுறும் எல்லை
மேட்மிசை ஊர்பரன் விடுத்தகணை எல்லாம்
ஈடுபட நூறியவன் ஏறிவரு மான்தேர்
ஆடுறு பதாகையை அறுததுவிரைந் தார்த்தான். - 198
2596 - ஆ£¢த்துவிறல் வால்வளையை அம்பவள வாயில்
தேர்த்தியிசைத் தான்தனது சீர்த்தியிசைத் தென்ன
மூர்த்தமது தாழ்க்கிலன் முனிந்துகணை பின்னுந்
தூர்த்துமுரு கன்தனது தோற்றமறைத் திட்டான். - 199
2597 - மறைத்தபக ழித்தொகையை வாளிமழை தன்னாற்
குறைத்தவுணன் ஊர்ந்திடு கொடிஞ்சிநெடு மான்தேர்
விறற்கொடி தனைக்கொடிய வெஞ்சரமொ ரேழால்
அறுத்துமுரு கன்பரவை யாழ்கடலின் இட்டான். - 200
2598 - வேறு
தான வர்க்குத் தலைவன் தனிக்கொடி
மீன வேலையில் அற்றுடன் வீழ்ந்துழிப்
பானு கம்பனெ னப்படு பாரிடர்
சேனை காவலன் தெற்றென நோக்கினான். - 201
2599 - கண்டு சிந்தை களித்துப் பெருமிதங்
கொண்டு குப்புற் றிசைத்துக் குனித்திடா
அண்டர் போற்றத்தன் ஆயிரம் வாயினும்
ஒண்தி ரட்சங்கம் ஒல்லைவைத் தூதினான். - 202
2600 - கானு கம்படு கந்துகத் தேருடைப்
பானு கம்பன் பனிமதி ஆயிரம்
மானு கம்பவை வாய்வைத் திசைத்தலுந்
தானு கம்பல தங்கிற்றவ் வோசையே. - 203
2601 - பாய்பெ ரும்புகழ்ப் பானுகம் பன்வளை
ஆயி ரங்களும் ஆர்த்திட அண்டர்தம்
நாய கன்தன் விறல்கண்டு நாரணன்
தூய சங்கு முழங்கிற்றுத் துண்ணென. - 204
2602 - போதம் அங்கிற் புங்கவர் யாவருஞ்
சோதி வேற்படைத் தூயவன் ஏறுதேர்
மீது கேதனம் இல்லை வியன்கொடி
ஆதி நீயென் றழலினை ஏவினார். - 205
2603 - ஏவ லோடும் எரிதழற் பண்ணவன்
வாவு குக்குட மாண்கொடி யாகியே
தேவதேவன் திருநெடுந் தேர்மிசை
மேவி ஆர்த்தனன் அண்டம் வெடிபட. - 206
2604 - படியி லாதமா¢ பண்ணவன் தேர்மிசைக்
கொடிய தாய்நின்று குக்கு டங்கூயது
கடிய தானவர் கங்குல் புலர்ந்திடும்
விடியல் வைகறை வேலையைக் காட்டல்போல். 207 - 207
2605 - சங்க மோடு தபனனும் ஆர்த்தலும்
மங்குல் வண்ணத்து மாயவன் ஆர்த்தனன்
பங்க யாசனப் பண்ணவன் ஆர்த்தனன்
திங்கள் ஆர்த்தது செங்கதிர் ஆர்ப்பவே. - 208
2606 - மறலி ஆர்த்தனன் மாருதங் கட்கெலாம்
இறைவன் ஆர்த்தனன் இந்திரன் ஆர்த்தனன்
அறைக டற்கர சானவன் ஆர்த்தனன்
குறைவில் செல்வக் குபேரனும் ஆர்த்தனன். - 209
2607 - ஆர்த்த ஓசைபோய் அண்டத்தை முட்டியே
சூர்த்த நோக்குடைச் சூரபன் மன்செவிச்
சீர்த்து ளைக்குட் செறிதலுந் தேவரைப்
பார்த்த னன்கடு உண்டன்ன பான்மையான். 0 - 210
2608 - மாறி லென்முன் வருவதற் கஞ்சியே
பாறு போன்று பழுவத்து லைந்துளார்
தேறி வந்து தெழித்தனர் என்முனும்
ஆறு மாமுகன் ஆற்றல்கொண் டேகொலாம். - 211
2609 - நன்று நன்றிது நான்முகன் ஆதியா
நின்ற தேவர் நிலையழித் தொல்லையில்
கொன்று பின்னர்க் குமரனை வெல்வனால்
என்று சீறினன் யாரையும் எண்ணலான். - 212
2610 - இருக்க மைந்தன் இகலிலண் விண்ணிடைச்
செருக்கு தேவர் திறலினைச் சிந்துவான்
அருக்க னோடிய அந்தரத் துய்க்குதி
தருக்கு தேரினைச் சாரதி நீயென்றான். - 213
2611 - மற்றிவ் வாறு வலவனை நோக்கியே
சொற்ற காலைத் தொழுதெந்தை நன்றெனாப்
பொற்றை போலும் பொலன்மணித் தேரினை
வெற்றி யாகென விண்மிசைத் தூண்டினான். - 214
2612 - பாகன் தூண்டிய பாண்டிலந் தேரெழீஇ
மேகங் கீண்டு மிசைப்படு சூறையின்
ஆகங் கீறி அமரர்கள் ஈண்டிய
மாகஞ் சென்றது வானிழிந் தென்னவே. - 215
2613 - சென்ற தேரொடு சேணிடைப் புக்குளான்
குன்ற மன்ன கொடுஞ்சிலை கோட்டியே
துன்று தேவர் தொகைஇரிந் தோடுற
மன்ற வாளி மழைகளை வீசினான். - 216
2614 - வீசு கின்றுழி விண்ணவர் மேற்சரம்
நீசன் விட்டிடு நீர்மையை நோக்கியே
ஈசன் மாமகன் ஈண்டுநின் றெண்ணிலா
ஆசு கங்களுய்த் தங்கவை சிந்தினான். - 217
2615 - வேறு
மற்றவை துணித்தபின் வடிக்கயிறு முட்கோல்
பற்றிய தடக்கையுள பாகுதனை நோக்கிக்
கொற்றஅயில் தூண்டியொரு குன்றைவௌ¤ கண்டோன்
தெற்றெனவிண் மேல்நமது தேர்விடுதி யென்றான். - 218
2616 - என்னலும் இறைஞ்சிஇர லைப்பரியின் மேலோன்
பொன்னுலகு பாருலகு புக்கெழுவ தென்
மின்னின்மிளிர் தேரதனை விண்மிசைக டாவி
நன்னெறி செலாஅவுணர் நாயகன்முன் உய்த்தான். - 219
2617 - வையநெடு வானமிசை வல்லைபுகும் எல்லை
ஐயன்இமை யோர்கள் அயர்ந் தோடுவது நோக்கி
நையலிர் புலம்பலிர் நடுங்கலிர்கள் என்றோர்
செய்யகரம் ஏந்திமுரு கன்கருணை செய்தான். - 220
2618 - கந்தன்மொழி வானவர்க ணத்தவர்கள் கேளா
எந்தையிவண் வந்திடலின் யாமுயிர் படைத்தே
உய்ந்தனம் எனாவிரைவில் ஓடுவது நீங்கிச்
சிந்தைமகிழ் வத்தொடு திகந்தமுற நின்றார். - 221
2619 - நின்றிடலும் வெவ்வவுணன் நீர்மையது நோக்கிப்
பின்றிடுவ ராம்பிரம னேமுதல தேவர்
ஒன்றொர்சிறு வன்கொலெனை உற்றெதிரு நீரான்
நன்றிதென வேவெகுளி கொண்டுநகை செய்தான். - 222
2620 - காய்சின மிகுந்தவுணர் காவலன் அநந்தம்
ஆசுகம் விரைந்துபடர் ஆசுகம தென்ன
வீசுதலும் வாளிபல விட்டவை விலக்கி
ஈசனருள் மாமதலை ஏற்றிகல் புரிந்தான். - 223
2621 - சுறுக்கொள மயிர்ப்பொடி உயிர்ப்புவிடு சூரன்
கறைக்கதிர் அயிற்பொலி கரத்தன்இவர் தம்மில்
செறுத்துடன் வடிக்கணை செலுத்திஅகல் வானம்
மறைப்பது மறுக்குவது மாகிமலை வுற்றார். - 224
2622 - வேறு
விரைந்திரு வோர்களும் வியன்கணை மாரிகள்
சொரிந்தனர் பேரமர் தொடர்ந்துசெய் போழ்தினில்
எரிந்தது மாதிரம் இரங்கினர் பாருளர்
திரிந்தன சாரிகை சிறந்தவர் தேர்களே. - 225
2623 - கறங்கினம் போல்வன கலஞ்செய் குலாலன
திறங்கொளும் ஆழிகள் திரிந்தன மானுவ
மறங்கெழு சூறைகள் மயங்கின போல்வன
துறுங்கணை மாரிகள் சொரிந்தவர் தேர்களே. - 226
2624 - பாதல மூழ்குவ பாரிடை சூழ்குவ
மாதிர மோடுவ வாரிதி சேர்குவ
பூதர மேவுவ பூமல ரோன்நகர்
மீதினும் ஏகுவ மீளுவ தேர்களே. - 227
2625 - எண்டிசை சூழும் இருங்கடல் பாய்வன
விண்டொடு நேமி வியன்கிரி வாவுல
கொண்டலின் ஆரிருள் கொண்டுழி போகுவ
அண்டமுன் ஏகுவ அங்கவர் ஏறுதேர். - 228
2626 - பெயர்ந்திடு தேருறு பிழம்பவை காணுபு
தியங்கினர் நான்முகர் தெரிந்திலர் சீருரு
மயங்கினர் ஆதவர் மருண்டனர் வானவர்
உயங்கினர் பாருளர் உலைந்தனர் நாகரே. - 229
2627 - முதிர்ந்திடு போரினர் முழங்கிய தேர்செல
அதிர்ந்தது பாருல கலைந்தன வேலைகள்
பிதிர்ந்தன மால்வரை பிறந்தது வான்முக
டுதிர்ந்தன தாரகை உகுந்தன கார்களே. - 230
2628 - வேறு
தேரிவை இரண்டு மாகித் திகழுமூ தண்ட மெங்குஞ்
சாரிகை வருத லோடுஞ் சண்முகன் மீது செல்லச்
சூரெனும் அவுணர் கோமான் தொலையுநாள் எழிலி பொங்கி
ஆரழல் மழைகான் றென்ன அடுசர மாரி தூர்த்தான். - 231
2629 - மழுப்படை அநந்த கோடி வச்சிரந் திகழ்முச் சென்னிக்
கழுப்படை அநந்த கோடி கப்பணம் அநந்த கோடி
கொழுப்படை அநந்த கோடி குலிசம்வேல் அநந்த கோடி
எழுப்படை அநந்த கோடி இடையிடை இடிபோல் உய்த்தான். - 232
2630 - கூற்றுயிர் முடிக்குந் துப்பிற் கொடும்படை மாரி தன்னை
ஆற்றலின் அவுணர் கோமான் விடுத்துழி அவற்றை யெல்லாங்
காற்றெனப் பகழி தூண்டி முறைமுறை கடிதிற் சிந்தி
மாற்றினன் திரிந்தான் ஐயன் மூதண்ட வரைப்பு முற்றும். - 233
2631 - இத்திறந் திரிந்த செவ்வேள் இடைதெரிந் தேழொ டேழு
பொத்திரந் தன்னைத் தூண்டிப் புகழுறும் அவுணர் செம்மல்
சித்திரத் தேரும் மாவின் தொகுதியுஞ் சிந்தி நீக்கக்
கைத்தனு வோடுந் தீயோன் கதுமெனப் புவிக்கண் உற்றான். - 234
2632 - நாணுடை வரிவில் வாங்கி நண்ணலன் நஞ்சு பில்கும்
ஏணுடை வயிர வாளி எண்ணில தூண்டி ஏற்பத்
தாணுவின் மதலை கண்டு தன்பெருஞ் சிலையைக் கோட்டித்
தூணிகொள் கணையின் மாரி தொடுத்தவை துணித்து விட்டான். - 235
2633 - துணிப்புறும் எல்லை வல்லே சுடர்க்கணை அநந்த கோடி
தணப்பற விடுத்த லோடுஞ் சண்முகன் அவற்றை யெல்லாங்
கணைப்பெரு மழையால் மாற்றிக் காசிபன் தனது செம்மல்
அணிப்படு தோற்மேற் பின்னும் ஆயிரம் பகழி உய்த்தான். - 236
2634 - றுழியின் முதல்வன் மைந்தன் ஒராயிரங் கணையுஞ் சூரன்
பாழியம் புயத்து மீது படுதலுங் கடிதே இற்றுச்
சூழுறச் சிதறிற் றம்மா தொவிலா வயிரங் கொண்ட
காழ்கிளர் வரைமேல் வீழ்ந்த கன்மழைத் தன்மை யேபோல். - 237
2635 - அந்தமில் வன்மை சான்ற அவுணன்மற் றதனை நோக்கி
முந்துறு வெகுளி தூண்ட முறுவலும் உயி£¢ப்புந் தோன்ற
எந்தைதன் மொய்ம்பிற் செல்ல இராயிரம் பகழி வாங்கிச்
சிந்தையிற் கடிது தூண்டித் தேவரும் மருள ஆர்த்தான். - 238
2636 - உட்டௌ¤ வுற்றோர் காணும் ஒப்பிலா முதல்வன் தோள்மேல்
விட்டிடு பகழி முற்றும் வெந்துவெந் துகள தாகிப்
பட்டன திசைகள் முற்றும் பரந்தன பரத்தின் மேலோன்
கட்டழல் அதனால் மாய்ந்த காமவேள் யாக்கை யேபோல். - 239
2637 - ஆங்கது காலை தன்னில் அறுமுகம் படைத்த ஐயன்
நீங்கரு நெறியால் உய்த்த நெடுஞ்சரம் அனைத்தும் மாற்றிப்
பாங்கமர் வயவர் மீதும் பாரிடப் படைகள் மீதுந்
தீங்கணை அழுத்த லுற்றான் தேவரை இடுக்கண் செய்தான். - 240
2638 - தன்னிணை தானே யாகி நின்றிடுந் தனிவேல் வீரன்
அன்னதோர் தன்மை கண்டோ ராயிரம் பகழி பூட்டித்
துன்னலன் குனித்த சாபந் துணித்தனன் துணியா முன்னம்
பின்னுமோர் சிலையை ஏந்திப் பெருமுகில் இரிய ஆர்த்தான். - 241
2639 - இம்பரின் மலைந்த சூரன் இம்மென வருக்கொண் டேகி
அம்பரத் திடையே தோன்ற அன்னது குமரன் காணா
உம்பரிற் சென்று தாக்க ஓரிறை எதிர்ந்து நின்று
நம்பியொ டாடல் செய்வான் நவிலரும் மாயை சூழ்வான். - 242
2640 - விண்ணிடை நின்ற சூரன் விரைந்துடன் கரந்து சென்று
மண்ணிடை மீட்டுஞ் செல்ல மாநில வரைப்பிற் செவ்வேள்
துண்ணென வந்து வெம்போ£¢ தொடங்கலுந் தோற்ற மாற்றிக்
கண்ணகல் தூய நீத்தக் கனைகடல் நடுவண் ஆனான். - 243
2641 - ஆயிடை முமுக வேள்சென் றடுசமர் இயற்றும் எல்லை
மாயையின் மறைந்து சூரன் மாதிர முடிவில் தோன்ற
ஏயென ஆண்டுஞ் செவ்வேள் ஏகியே நெடும்போர் ஆற்றக்
காய்கனல் உமிழும் வேலான் கரந்துபா தலத்தின் நின்றான். - 244
2642 - ஆறிரு தடந்நதாள் வள்ளல் அதுகண்டு பிலத்து ளேகி
மாறமர் இயற்றும் எல்லை வல்லைதன் னுருவ மாற்றி
வீறுள சிமையச் செம்பொன் மேருவின் குவட்டின் நிற்ப
ஏறுடை முதல்வன் மைந்தன் இம்மென அங்கட் சென்றான். - 245
2643 - மேருவின் சிகரம் நண்ணி வேலுடைத் தடக்கை வீரன்
பேரமர் இயற்றத் தீயோன் பின்னரும் ஆண்டு நீங்கி
நாரணன் உலகில் தோன்ற நம்பியுந் தொடர்ந்து போந்து
சூரெனும் அவுண னோடு தொல்சமர் ஆற்றி நின்றான். - 246
2644 - ஆற்றிடு கின்ற காலத் தவுணர்கோன் அண்ட கோள
மேற்றிகழ் வாயில் செல்ல விமலனும் அங்கண் ஏகி
ஏற்றெதிர் மலையா அன்னான் ஏறிய இவுளித் தேரைக்
கூற்றுறழ் பகழி தன்னால் அட்டனன் கொற்றங் கொண்டான். - 247
2645 - கந்துக விசய மான்தேர் இற்றலுங் கடுங்கோன் மன்னன்
இந்திர ஞாலம் என்னும் எறுழ்மணித் தடந்தேர் தன்னைச்
சிந்தனை செய்த லோடுஞ் சேணகிளர் செலவிற் றாகி
வந்திட அதன்மேல் ஏறி வல்லைபோர் புரிதல் உற்றான். - 248
2646 - மண்டமர் புரியும் எல்லை வள்ளல்தன் பகழி தன்னால்
அண்டம தடைந்த வாயில் அடைத்ததும் அப்பால் உள்ள
தண்டம தெல்லாஞ் செல்லாத் தன்மையுந் தகுவர் கோமான்
கண்டனன் நன்று நன்றென் இறைத்தொழிற் காவ லென்றான். - 249
2647 - இறைத்தொழில் அவுணர் செம்மல் ஏந்துதன் சிலையை வாங்கித்
திறத்தொடும் அநந்த கோடி செஞ்சரந் தூண்டி அண்ட
நெறிப்படு வாயில் பொத்து நெடுங்கணைக் கதவ முற்றும்
அறுத்துநுண் தூளி ஆக்கி அம்பரஞ சுழல விட்டான். - 250
2648 - காவலன் அண்ட வாயிற் கணைகளின் கபாடம் நீக்கி
மாவொடு களிறுந் தேரும் வயவரும் வரம்பின் றாகி
ஓவரு நெறியின் அப்பால் உற்றதன் தானை தன்னைக்
கூவினன் வருக என்று குவவுத்தோள் கொட்டி ஆர்த்தான். - 251
2649 - ஆர்த்திடு கின்ற காலத் தண்டத்தின் அப்பால் நின்ற
தேர்த்தொகை களிற்றின் ஈட்டந் திறல்கெழும் இவுளிப் பந்தி
சூர்த்திடும் அவுண வௌ¢ளந் துண்ணென ஈண்டை ஏகிப்
போர்த்தொழில் முயன்று செவ்வேள் புடையுறத் தெழித்துச் சூழ்ந்த. - 252
2650 - நீணுதல் விழியின் வந்த நிருமலக் கடவுள் தன்னை
ஏணொடும் அண்டத் தப்பால் இருந்திடு தானை சுற்றச்
சேணுறு நெறிக்கண் நின்ற திசைமுகன் முதலாந் தேவர்
காணுத லோடும் உள்ளங் கலங்கிமற் றினைய சொல்வார். - 253
2651 - காலமொ டுலகம் உண்ணக் கனன்றெழு கரிய தீயின்
கோலமோ அண்டத் தப்பாற் குரைபுனல் நீத்தந் தானோ
ஆலமோ அசனிக் கொண்மூ ஆயிர கோடி சூழ்ந்த
சாலமோ யாதோ என்று தலைபனித் திரியல் போனார். - 254
2652 - ஆயின காலை தன்னில் அண்டங்கள் தோறும் நின்ற
மாயிருந் தகுவன் தானை வந்துதன் மருங்கு சுற்றிப்
பாய்புனல் முகில்கான் றென்னப் படைத்தொகை வீசி ஆர்ப்பத்
தீயுரு வான செம்மல் சிறிதுதன் நாட்டம் வைத்தான். - 255
2653 - அடலையின் நலத்தை வீட்டி அரும்பெறல் ஆக்கஞ் சிந்தி
அடலையின் உணர்வின் றாகும் அவுணர்கோன் தானை முற்றும்
அடலையின் நெடுவேல் அண்ணல் அழலெழ விழத்த லோடும்
அடலையின் உருவாய் அண்டத் தொல்லுரு வழித்த மன்னோ. - 256
2654 - முற்படும் அனிக மற்றும் முடிதலும் முடித லின்றி
எற்படும் அண்டத் தப்பால் ஈண்டிய பதாகி னிக்குள்
பிற்பட அளப்பில் சேனை பெயர்ந்துமற் றீண்டை துன்னிச்
சிற்பரன் குமரன் தன்பாற் படைமுறை சிதறிச் சூழ்ந்த. - 257
2655 - பரப்பொடு மிடைந்த தானைப பரவையை நோக்கி ஐயன்
நெருப்புமிழ் தன்மைத் தென்ன நெட்டுயிர்ப் பனில முந்தி
உரப்பினன் சிறிதே அற்றால் உம்பரில் குவிந்த பூளைப்
பொருப்பிடை அழல்புக் கென்னப் பூழியாய் உலகம் போர்த்த. - 258
2656 - மாட்சியின் உலவு சேனை வடிவெலாம் விடுத்துத் தொல்லை
மாட்சியின் உயிரே தாங்கி மலைதுமென் றுன்னிப் பின்னுஞ்
சூட்சியின் வளைந்த வாபோற் சோதிவேற் குமரன் தன்பாற்
சூட்சியின் மேவிற் றம்மா தூயநுண் துகளின் ஈட்டம். - 259
2657 - அந்தமில் தானை முற்றும் அத்தன்ஓர் உங்கா ரத்தால்
வெநதுக ளாகப் பின்னும் மேலையண் டத்துள் நின்ற
தந்தியும் பரியுந் தேருந் தானவப் படையும் ஆர்த்து
வந்துவந் தயலிற் சூழ வரம்பிலா முதல்வன் கண்டான். - 260
2658 - திருத்தமிழ் மதுரை தன்னிற் சிவன்பொருள் நிறுக்கு மாற்றால்
உருத்திர சரும னாகி உற்றிடு நிமலன் வெம்போர்
அருத்திகொள் கணிச்சி சூலம் ஆழிதண் டெழுவ தாகுங்
கரத்தினிற் படைகள் தம்மை நோக்கியே கழற் லுற்றான். - 261
2659 - வென்றியம் படைகாள் கேண்மோ விரைந்துடன் தழுவி நம்பாற்
சென்றிடும் அனிகந் தன்னைச் சென்னெறி பெறாமல் அப்பால்
நின்றிடு படையை எல்லா£ம் நீவிர்பல் லுருக்கொண் டேகிக்
கொன்றிவண் வருதி ரென்று கூறிமற் றிவற்றைத் தொட்டான். - 262
2660 - ஆதிநா யகன்விட் டுள்ள படையெலாம் அநந்த கோடி
சோதியார் கதிருந் தீயும் பணிகளும் போலத் தோன்றி
ஏதிலான் அனிக மாகி இம்பருற் றனவி மைப்பின்
பாதியின் முன்னம் அட்டுப் பெருவிறல் படைத்த மன்னோ. - 263
2661 - தூயதோர் குமரற் சூழ்ந்த படையைமுன் தொலைத்து வீட்டி
ஏயின படையோ ரைந்தும் இம்பரோ ஒழிய நின்ற
ஆயிரத் தோரேழ் அணடத் தகலமுஞ் சென்று சென்றாங்
கோய்வற எழுந்த தானை முழுதுமட் டுலவு கின்ற. - 264
2662 - ஐவகைப் படைகள் முற்றும் அண்டங்கள் தோறும் நின்ற
வெவ்விய அவுணர்த் தேய்த்து விரைவொடு திரித லோடுந்
தெவ்வியல் அவுணர் மன்னன் செயிர்த்துமற் றிதனை நோக்கி
இவ்வொரு கணத்தின் முன்னம் இவனுதிர் உண்பன் என்றான். - 265
2663 - சாற்றியித் தன்மை தன்னைத் தானவர்க் கரசன் முன்னங்
கூற்றுயிர் குடித்த நோன்றாட் பண்ணவன் கொடுப்பக் கொண்ட
மாற்றருந் திகிரி தன்னை வாங்கினன் வழிபட் டேத்திகக்
காற்றினுங் கடிது செல்லக் கந்தவேள் மீது விட்டான். - 266
2664 - விட்டிடு திகிரி யாரும் வெருக்கொள விரைந்து சென்று
கிட்டிய காலைச் செவ்வேள் கிளர்ந்ததோர் பாணி நீட்டி
வட்டணை நேமி தன்னை வருதியால் என்று பற்ற
ஒட்டலன் அதனை நோக்கி உளந்தளர்ந் துயிர்த்து நின்றான். - 267
2665 - உண்ணிலா மாயை வல்ல ஒருதனித் தேர்மேல் நின்றோன்
எண்ணிலா உருவங் கொண்டே இருங்கணை மாரி தூர்ப்பத்
தெண்ணிலா மௌல அண்ணல் உதவிய செம்மல் நோக்கி
நண்ணலான் ஒருவன் மாய நன்றுநன் றென்று நக்கான். - 268
2666 - சிறுநகை செய்து மேலாஞ் தேசனப் பகழி பூட்டி
அறுமுகன் அவுணர் செம்மல் ஆற்றிடு மாய முற்றும்
இறைதனில் முடித்தி யென்றே ஏவலும் விரைவின் ஏகி
முறைநெறி பிழைத்தோன் மாயம் முற்றொருங் கடட தன்றே. - 269
2667 - மாயையின் உருவ நீங்க வலியழந் துள்ளம் மாழ்கித்
தீயவன் ஒருவ னாகிச் சேணுயர் தேரின் நின்றான்
ஆயது தெரிந்து வானோர் அறுமுகத் தவனைப் போற்றிப்
பாய்புனற் கடலின் ஆர்த்துப் பனிமலர் மாரி தூர்த்தார். - 270
2668 - தூர்த்தலுந் தேருந் தானுந் துண்ணெனக் கரந்து சூரன்
பேர்த்திடு மண்ட கூடப் பித்திகை வாயி லெய்தி
ஆர்த்தறை கூவிப் புக்காங் கப்புறத் தண்டஞ செல்லத்
தீர்த்தனும் அதனை நோக்கித் தீயனைத் தொடர்ந்து போனான். - 271
2669 - தொடா¢ந்துதன் மனத்திற் செல்லுந் தொல்லைமால் இரதத் தோடுங்
கடந்தபோ¢ ஆடல் மிக்க காசிபன் தனயன் நின்ற
இடந்தலைப் படலும் அன்னான் எந்தையோ டிகற்போ ராற்றி
அடுந்திறல் மாயை நீரால் அப்புறத் தண்டம் போனான். - 272
2670 - இந்நிலை அவுணர் கோமான் இருநிலத் தண்ட முற்றும்
மின்னெனப் படர்ந்து தோன்றி வெய்யபோர் விளைத்து நின்று
பின்னருங் கரந்து செல்லப் பிரானும்அவ் வண்டந் தோறும்
துன்னலம் தனைவி டாது தொடர்ந்தமர் இயற்றிப் போனான். - 273
2671 - வேறு
ஆய காலை அயன்முதல் தேவர்கள்
நேய மிக்க குரவரை நீங்கிய
சேயி னோர்களில் தேம்பித் திருமகள்
நாய கன்றனை நோக்கி நவிலுவார். - 274
2672 - வலங்கை வாளுடை மாயைதன் மாமகன்
பொலன்கொள் அண்டப் புரைதனுட் போயினான்
இலங்கு வேற்படை யெந்தைதன் போரிடை
விலங்கி னானலன் என்றும் விளிகிலான். - 275
2673 - மாயை ஆற்றவும் வல்லவன் ஈண்டொ£¦இப்
போய தன்மை புணர்ச்சிய தேயலால்
ஆயின் வேறிலை ஆறிரு மொய்ம்புடைத்
தூயன் மற்றது சூழ்ந்திலன் போலுமால். - 276
2674 - வாடி னானென மாற்றல னைத்தொடர்ந்
தோடி னான்எந்தை ஒல்லையிற் சூரனைக்
கூடி னான்கொல் குறுகல னாகியே
நாடி னான்கொல் அறிகிலம் நாமெலாம். - 277
2675 - மாக மேல்நிமிர் மற்றையண் டத்தினுஞ்
சேகு லாவிய சிந்தையன் தன்னுடன்
ஏகி னான்ஐயன் என்னினித் தான்விளை
வாகு மோவென்னும் அஞ்சுதும் ஏழையேம். - 278
2676 - என்ற காலையில் அங்கெழிற் பூவைபோல்
நின்ற மாயவன் நீள்மல ரோன்முதல்
துன்றும வானவர் சூழலை நோக்கியே
ஒன்றும் அன்பொ டுளப்பட ஓதுவான். - 279
2677 - வேறு
வஞ்ச மேதகும் அவுணர்கோன் ஆற்றலை மதித்தீண்
டஞ்சி அஞ்சியே இரங்கலிர் அறுமுகத் தொருவன்
செஞ்சி லைத்தனி வன்மையும் வீரமுந் தெரிந்து
நெஞ்ச கத்திடை ஐயுறு கின்றது நெறியோ. - 280
2678 - ஓதி யாகியும் உணர்ந்தவர்க் குணரவும் ஒண்ணா
நீதி யாகியும் நிமலம தாகியே நிகழுஞ்
சோதி யாகியுந் தொழுதிடும் எம்மனோர்க் கெல்லாம்
ஆதி யாகியும் நின்றவன் அறுமுகன் அன்றோ. - 281
2679 - ஈறி லாதவர் பரமனே குழவியின் இயல்பாய்
ஆறு மாமுகங் கொண்டுவித் தானென்ப தல்லால்
வேறு செப்புதற் கியையுமோ மேலவன் தன்மை
தேறி யுந்தௌ¤ கின்றில உமதுசிந் தையுமே. - 282
2680 - ஐயம் எய்தலிர் ஆயிர கோடி அண்டத்தும்
வெய்ய னேகினுந் தொடர்ந்துபோய் வெஞ்சமர் இயற்றிச்
செய்ய வேலவன் துரந்துவந் திடுந்தினைத் துணையில்
கையில் நெல்லிபோற் காட்டுவன் நீவிருங் காண்டீர். - 283
2681 - என்று மாயவன் கழறலும் அயன்முதல் எவரும்
நன்றெ னத்தௌ¤ வுற்றனர் அவ்வழ நண்ணான்
ஒன்றின் ஆயிர கோடியண் டத்தினும் ஓடி
நின்று நின்றமர் ஆடினன் எந்தையை நேர்ந்து. - 284
2682 - வெந்தி றற்சமர் ஆற்றியே அவுணர்கோன் மீட்டும்
இந்த வண்டத்து மகேந்திர வரைப்பில்வந் திறுத்தான்
முந்து நீழலை விடாதுசெல் வோரென முனிந்து
கந்த னுந்தொடர்ந் தவனொடு போந்தனன் கடிது. - 285
2683 - வேறு
போந்திடு தன்மை நோக்கிப் புராரிதன் புதல்வன நங்கள்
ஏந்தலைத் தொடர்ந்தான் என்ன இம்பரில் அவுணர் தானை
தீந்தழ லென்னப் பொங்கிச் செங்கையிற் படைகள் வீசி
ஆய்ந்திடும் உணர்வின் மேலாம் ஆதிதன் புடைசூழ்ந் தார்த்தார். - 286
2684 - நாதனும் அதனை நோக்கி நன்றிவர் முயற்சி யென்னா
ஓதினன் முறுவல் செய்ய ஒன்னலன் தானை தொன்னாள்
மூதெயில் என்ன நீறாய் வெந்துடன் முடிந்த தம்மா
தாதைதன் செய்கை மைந்தன் செய்வது தக்க தன்றோ. - 287
2685 - ஆனதோர் காலை தன்னில் அறுமுகம் படைத்த அண்ணல்
தூநகை அங்கி செல்லத் துண்ணெனப் பதைத்து வீழ்ந்து
தானவர் அனிகம் வெந்த சாம்பரின் குன்றை நோக்கி
வானவர் மகிழ்ந்து பூத்தூய் வள்ளலை வழுத்தி நின்றார். - 288
2686 - முருகவிழ் தொடைய லான்றன் முறுவலான் அனிக முற்றும்
விரைவின் நுண் துகளதாகி வீழதலும் அவுணர் வேந்தன்
ஒருவனுந் தமியன் நின்றான் ஒண்டமிழ் முனிவன் உண்ணத்
திரைகட லின்றித் தோன்றுந் தீப்பெருங் கடவுள் ஒத்தான். - 289
2687 - முன்படை குமரன் அங்கண் முறுவலித் திட்ட வாறும்
தன்படை அழிந்த வாறும் தமியன்றான் நின்ற வாறும்
கொன்படை வீர ரோடு குறட்படை ஆர்க்கு மாறும்
துன்படை அவுணன் கண்டாங் குளத்தொடுஞ் சொல்ல லுற்றான். - 290
2688 - பின்னறு துணைவர் மைந்தர் பேரியல் அமைச்சர் ஏனோர்
முன்னுற முடிந்தார் இன்று முடிவுறாத் தானை முற்றும்
பன்னிரு கரத்து மைந்தன் படுத்தனன் தமிய னானேன்
என்னிவண் செய்வ தென்னா உயிர்த்தனன் எண்ண மிக்கான். - 291
2689 - மாயவள் தன்னை மன்னன் மனத்திடை நினைத்த லோடும்
ஆயவள் வந்து தோன்றி அரும்பெறல் ஆற்றல் மைந்த
நீயொரு தமிய னாகி நின்றுளந் தளர்ந்தே என்னைக்
கூயினை முன்னிற் றென்னை தெரிவுறக் கூறு கென்றாள். - 292
2690 - அறிந்திடு மாயை இவ்வா றறைதலுங் குமரன் போரின்
மறந்தகு துணைவர் மைந்தர் மந்திரி தானை முற்றும்
இறந்திட எஞ்சி னேன்யா னியாவரும் எழுதற் கொத்த
திறந்தனை அருண்மோ என்ன நகைத்தவள் செப்ப லுற்றாள். - 293
2691 - உறுபடை சுற்றுந் துஞ்ச ஒருவனே யாயும் விண்ணோர்
சிறைவிடுத் துய்யு மாறு சிந்தனை செய்தி லாய்நீ
அறுமுகன் தன்னோ டின்னும் அமர்செயக் குறித்தி யாயின்
நிறைபெருஞ் செல்வ வாழ்க்கை நீங்கினை போலும் அன்றே. - 294
2692 - பன்னிரு தடந்தோள் கொண்ட பகவனைப் பாலன் என்றே
உன்னலை அவன்கை வேலால் ஒல்லையிற் படுதி கண்டாய்
இன்னுயிர் துறக்க நின்றாய் என்மொழி கேட்பாய் அன்றே
சென்னியில் விதியை யாவ ராயினுந் தீர்ந்தார் உண்டோ. - 295
2693 - நின்றிட அனைய தன்மை நின்னுளம் மகிழு மாற்றால்
பொன்றினர் எழுதல் வேண்டில் புறக்கடற் கொருசா ராக
மன்றல்கொள் அமுத சீத மந்தர கூடம் என்றோர்
குன்றுள ததனை ஈண்டே கொணருதி கூடும் என்றாள். - 296
2694 - இவ்வகை உரைத்து மாயை ஏகினான் ஏக லோடும்
மைவரை யென்ன நின்ற மன்னவர் மன்னன் கேளா
அவ்வைதன் சூழச்சி நன்றால் அடுகளத் தவிந்தோர் யாரும்
உய்வகை இதுவே என்னா உன்னினன் உவகை மிக்கான். - 297
2695 - ஆவகை உலவவவ கொள்ளா அமுதமந் தரங்கொண் டேக
ஏவரை விடுத்தும் என்றே இறைப்பொழு தவுணர் தங்கள்
காவலன் முன்னி மாயக் கடுமுரண் தேரின் நீங்கித்
தேவியல் அரிமான் ஏற்றுத் திறலுடை எருத்தம் புக்கான். - 298
2696 - இந்திர ஞாலந் தன்னை இறையவன் விளித்து நீயென்
புந்தியின் விரைந்து சென்று புறக்கடல் மருங்கின் மேவி
அந்தம தடைந்தோர்க் காவி அளித்திடும் அமுதங் கொண்ட
மந்தர கிரியைக் கீண்டு மற்றிவண் கொணர்தி யென்றான். - 299
2697 - விழுமிய மாய மான்தேர் வினவியோர் கணத்தின் முன்னம்
எழுகட லினுக்கும் அப்பால் இருந்திடு கடலின் சார்போய்
அழிவுறா தங்கண் நின்ற அமுதமந் தரத்தைக் கொண்டு
வழிபடர் கதியின் மீண்டு மகேந்திரம் புக்க தன்றே. - 300
2698 - வேறு
அக்காலையில் இரதந்தரும் அமுதத்தனி வரையின்
மெய்க்கால்வர அந்நாள்வரை வெம்பூசல் இயற்றி
மைக்காலன்மெய் யுயிருண்டிட மறியும்படை முழுதும்
தொக்காலம தெழுந்தாலெனத் துண்ணென் றெழுந்தனவே. - 301
2699 - பரியின்தொகை முழுதுய்ந்தன பனைபோலிய நெடுங்கைக்
கரியின்தொகை முழுதுய்ந்தன கடுந்தேர்த்தொகை ஈர்க்கும்
அரியின்தொகை முழுதுய்ந்தன அவுணப்படை யாகி
விரியுந்தொகை முழுதுய்ந்தன மெய்யூறது நீங்கி. - 302
2700 - வடிவற்றுடல் அழிந்திட்டிடும் உயிரானவும் மருமம்
வடிகைத்தலம் முடிதோள்முதல் அங்கங்கள் குறைந்தே
முடிவுற்றிடும் உயிரானவும முளரிக்கனல் உண்ணப்
பொடிபட்டிடும் உயிரானவும் எழுந்திட்டன புவிமேல். - 303
2701 - மிண்டிககடி துயிர்பெற்றெழு வெஞ்சூர்முதல் அனிகம்
எண்டிக்கொடு புவிபாதலம் இருநாற்கடல் எங்கும்
மண்டிக்கக னத்தேழ்வகை உலகங்களும் மல்கி
அண்டத்தனி முடிகாறும் அடைந்திட்டன மிடைந்தே. - 304
2702 - மாதண்டம்எ ழுத்தோமரம் வயிரப்படை வாள்தோல்
கோதண்டமு தற்பல்படை கொடுதானவர் அனிகம்
வேண்டமெ னச்சேணுயர் வேழம்பரி நிரைகள்
மூதண்டம்வெ டிக்கும்படி முழங்குற்றன அன்றே. - 305
2703 - எழுந்தான்வயப் புலிமாமுகன் இரவிப்பகை எழுந்தான்
எழுந்தான்எரி முகவெய்யவன் இளமைந்தனும் எழுந்தான்
எழுந்தான்அறத் தினைக்காய்பவன் இருபாலரும் எழுந்தார்
எழுந்தார்ஒரு மூவாயிரர் ஏனோர்களும் எழுந்தார். - 306
2704 - சூர்க்கின்றதொல் வடிவங்கொடு துண்ணென்றெழு கின்றோர்
பார்க்கின்றனர் அனிகங்களைப் பகுவாய்திறந் திடிபோல்
ஆர்க்கின்றனர் தமதாடலை அறைகின்றனர் நம்மேல்
போர்க்கின்றுவந் தனர்யாரெனப் புகல்கின்றனர் இகலால். - 307
2705 - ஈடுற்றிடு சமரெல்லையில் இடையுற்றி படைகள்
நாடுற்றிவண் எடுத்திட்டனர் நறையுற்றிடு தும்பை
சூடுற்றிடு மணிமாமுடிச் சூரன்புடை தன்னில்
கூடுற்றனர் வெம்போர்செயுங் குறிப்புற்றனர் அன்றே. - 308
2706 - வேறு
உய்ந்திவர் யாவரும் ஒல்லை எழுந்தே
அந்தமில் சேனையொ டார்த்திடு காலை
இந்திர ஞாலம் எனப்படு மான்தேர்
வந்தது தானவர் மன்னவன் முன்னம். - 309
2707 - பொற்றையி அஅ£டு பொலன்கெழு மான்தேர்
உற்றதும் அன்பினர் உய்ந்தெழு மாறும்
இற்றப தாதி இரைத்தெழு மாறுந்
தெற்றென மாயவள் செம்மல் தெரிந்தான். - 310
2708 - மகிழ்ந்தனன் ஆர்த்தனன் வானவர் தம்மை
இகழ்ந்தனன் விம்மிதம் எய்தினன் யாயைப்
புகழ்ந்தனன் மேனி பொடித்தனன் நெஞ்சந்
திகழ்ந்தனன் நன்னகை செய்தனன் அன்றே. - 311
2709 - உந்திநி ரப்புறும் உண்டிய தின்றி
முந்திநி ரப்பிடை மூழ்கினன் வல்லே
வெந்திறல் ஆளி வியன்றவி சேறி
இந்திர நல்வளம் எய்திய தொத்தான். - 312
2710 - ஓங்கிய சென்னி உயர்ந்தன மொய்ம்பு
வீங்கிய தாலுடன் மிக்கு மதர்ப்புத்
தேங்கிய சிந்தை சிலிர்த்த உரோமம்
ஆங்கவன் எய்திய தாரறை கிற்பார். - 313
2711 - வஞ்சன் இதந்திடு மைந்தன்இவ் வாற்றல்
நெஞ்ச மகிழ்ந்தவண் நின்றிடு காலை
நஞ்சம் எழுந்திடு நாள்கொலி தென்றே
அஞ்சி நடுங்கினர் அண்டர்கள் எல்லாம். - 314
2712 - பொன்னகர் வாழ்க்கை புவித்திசை வாழ்க்கை
பின்னுறு கின்ற பெரும்பத வாழ்க்கை
எந்நகர் வாழ்க்கையும் எய்திய இன்னே
ஒன்னலர் கொல்லுமுன் ஓடுதும் என்றார். - 315
2713 - ஊர்ந்திடும் ஊர்திகள் ஓர்புடை தம்பாற்
சார்ந்தவர் ஓ£¢புடை தாமொரு பாலாய்ச்
சேர்ந்திடு கைப்படை சிந்திவிண் ணோர்கள்
பேர்ந்திரி கின்றனர் பின்னது நோக்கார். - 316
2714 - கிள்ளை புறாமயில் கேழ்கிளா¢ அன்னம்
பிள்ளை மணிக்குயில் பேரிசை ஆந்தை
கள்ளுணும் வண்டு கரண்டம தாதிப்
புள்ளுரு வங்கொடு வானவர் போனார். - 317
2715 - அங்கது நோக்கி டற்கண வீரர்
மங்கிய தானையும் மாண்டுளர் யாரும்
இங்கெழு கின்றனர் யாமிவண் வீந்தாஞ்
சங்கையி லென்று தளர்ந்தலை வுற்றா£¢. - 318
2716 - இலக்கரும் எண்மரும் ஏந்தலும் நோக்கி
அலக்கணும் அச்சமும் அற்புத நீருங்
கலக்கமும் வெய்ய கடுஞ்சின முங்கொண்
டுலைக்கனல் அன்ன உயிர்ப்பொடு நின்றார். - 319
2717 - வேறு
வென்றி கொண்டவேற் குமரன்இவ் விளைவெலாம் நோக்கி
நின்ற ஒன்னலன் சூழ்ச்சியும் வலவைசொல் நெறியும்
குன்றின் வன்மையும் உய்ந்தெழு பரிசனர் குழுவும்
நன்று நன்றெனக் கையெறிந் தழலெழ நகைத்தான். - 320
2718 - ஆன காலையில் அரிமுகன் அலரிதன் பகைஞன்
ஏனை மைந்தர்கள் அறத்தினை வெகுண்டிடும் ஏந்தல்
சேனை காவலர் யாவருஞ் சூரன்முன் சென்று
மான வீரமோ டிறைஞ்சிநின் றினையன வகுப்பார். - 321
2719 - எந்தை நீயிவண் நிற்குதி யாமெலாம் ஏகிக்
கந்த வேளுடன் அவன்படை வீரரைக் கடிந்து
சிந்த ராகிய பூதர்தந் தொகையையுஞ் செகுத்து
வந்து நின்னடி வணங்குதும் வல் விரைந் தென்றார். - 322
2720 - கொற்ற வீரர்கள் இவ்வகை உரைத்தலுங் கொடியோன்
மற்றிவ் வாசகம் நன்றெனைப் போற்றுவான் வந்தீர்
பற்ற லன்பெரு வன்மையும் வீரமும் படுத்து
வெற்றி இன்றெனக் கரளுதி ராலென விடுத்தான். - 323
2721 - விடுத்த காலையில் விடாதுசூழ் அனிகங்கள் விரவி
அடுத்து வந்திடப் பொளன ஏகியே ஆர்த்துப்
பிடித்த பல்வகைப் படைகளும் உருமெனப் பெய்து
வடித்த வேற்படை நம்பியை அன்னவர் வளைத்தார். - 324
2722 - தீங்க னற்பெருங் கடவுள்பாற் செறியிருட் டொகைபோல்
வாங்கு விற்கரத் தையனை அவுணர்கள் வளைப்ப
ஏங்கல் உற்றனர் பாரிடர் ஏனையோர் எம்மால்
தாங்கு தற்கரி திப்பெரும் படையெனத் தளர்ந்தார். - 325
2723 - விறலு டைப்ப· றானையும் வெய்யவர் தொகையும்
நொறிது டைக்கதி கொண்டுசூழ் வுற்றது நோக்கி
அறுமு கத்தனிப பண்ணவன் உயிர்த்தொகை அனைத்தும்
இறுதி யைப்புரி கடவுள்மாப் படையினை எடுத்தான். - 326
2724 - அங்கை யிற்கொடு சிந்தையால் வழிபடல் ஆற்றிச்
சிங்க மாமுகன் ஆதியாம் அவுணர்தந் திறத்தைச்
சங்கை இன்றியே நின்றிடு தானைகள் தம்மை
இங்கு வல்லையில் அடுதியால்எனவிடுத் திட்டான். - 327
2725 - விடுத்த காலையில் கட்செவி நிரைகளும் விடமும்
இடிக்கு ழாங்களும் உருத்திரர் உருக்களும் எரியுங்
கடற்பெ ருங்கணத் தொகுதியும் அளவிலாக் கடவுட்
படைக்க லங்களு மாய்விரிந் ததுசிவன் படையே. - 328
2726 - இன்ன தன்மையால் அரன்படை மூதண்டம் எங்குந்
துன்னி யார்த்தெழீஇத் துண்ணெனச் சென்றுசூழ் வுற்று
முன்னர் உய்ந்தெழும் அவுணர்தம் படையெலாம் முருக்கி
ஒன்ன லன்தமர் யாரையும் ஒருங்குகொன் றதுவே. - 329
2727 - முந்து வெய்யசூர்ப் பரிசனத் தொகையெலாம் முருக்கி
இந்திரப்பெரு ஞாலமாந் தேர்மிசை இருந்த
மந்த ரப்பெருங் கிரியினைத் துகளெழ மாய்த்துக்
கந்த வேள்படை மீண்டது சிவன்படைக் கலமே. - 330
2728 - அரிமு கத்தவன் ஆதவன் தனைமுனம் அழன்றோன்
எரிமு கத்தவன் வச்சிர மொய்ம்பன்நூற் றிருவர்
முரண்மி குத்தமூ வாயிரர் அறப்பகை முதலோ£¢
விரிக டற்படை வெற்பொடு முடிந்தவண் வீழ்ந்தார். - 331
2729 - தன்மை அங்கவை யாவையுங் கண்டனன் தளர்ந்தான்
வன்மை நீங்கினன் கவன்றனன் இரங்கிமெய் மறந்தான்
புன்மை யாயினன் உயிர்த்தனன் செயிர்த்தனன் புலர்ந்தான்
தொன்மை போலவே தமித்தனன் துணையிலாச் சூரன். - 332
2730 - கண்ட கன்படை முற்றொருங் கிறந்தது காணா
எண்டொ கைப்படு பூதரும் ஏனைவீ ரர்களும்
முண்ட கந்தனில் இருந்திடு புங்கவன் முதலாம்
அண்டர் யாவருந் துயரொரீஇ உவகைபெற் றா£¢த்தார். - 333
2731 - அழுந்தும் ஆரிருள் ஒருவிவிண் மிசைதனில் அடைவோர்
கழிந்த தோரிடை ஊற்றினான் மீட்டும்அக் கதியில்
விழுந்த தேயெனத் துன்பொடு நின்றனன் விளிவுற்
றெழுந்த தானையை இழந்திடும் அவுணருக் கிறைவன். - 334
2732 - அனைய தன்மையின் நின்றிடும் அவுணர்கோன் ஆற்றச்
சினம தெய்தியென் படையெலாஞ் சிதைத்தபா லனையுந்
தனிமை செய்துபின் வெல்வனென் றுளங்கொடு தழற்கண்
முனைவன் நல்கிய தேரினை நோக்கியே மொழிவான். - 335
2733 - கொச்ச கத்தியற் குதலைவாய் மதலைபாற் குழீஇய
வச்சி ரத்தெயி றுடையவெம் பூதரை வயின்சூழ்
கைச்சி லைத்திறல் வீரரைக் கவர்ந்துபோய் அண்டத்
துச்சி யிற்கொடு வைத்தனை இருத்தியென் றுரைத்தான். - 336
2734 - உரைத்த காலையில் நன்றென வினவியே ஓடித்
திருத்த குந்திறல் வாகுவை முதலினோர் திறத்தைக்
கிருத்தி மப்பெருந் தானையைக் கிளையொடும் வாரிக்
கருத்தை மாமயல் செய்தது வைதவன் கடுந்தேர். - 337
2735 - கையர் தன்மையிற் கடற்படை முழுவதுங் கவர்ந்து
மையல் சிந்தையிற் செய்துதன் வயினிடைத் தாங்கி
ஒய்யெ னச்சென்று மூதண்ட கோளகை யுழிப்போய்
வெய்ய வன்பணி ஆற்றிஆண் டிருந்தது வியன்தேர். - 338
2736 - நிமலன் அவ்வழித் தானையம் பெருங்கடல் நீங்கத்
தமியன் நின்றனன் ஆங்கது தகுவர்கோன் காணா
நமது தேர்வலி நன்றென உவகையால் நகைத்தான்
அமரர் அச்செயல் நோக்கியே பின்னரும் அயர்ந்தார். - 339
2737 - சூரி டத்துறு சூழ்ச்சியுந் துணைவர்கள் தம்மைப்
பாரி டத்தொடு முகந்தெழீஇ மாயையிற் படர்ந்து
தேரி டத்தியல் வன்மையும் ஆங்ஙனந் தெரிந்தான்
நேரி டப்பிறர் இன்றியே தமியனாம் நெடியோன். - 340
2738 - கண்டு சீறியோர் கார்முகம் வாங்கியே கடிதோர்
திண்டி றற்கணை பூட்டிநஞ் சேனையைப் பற்றி
அண்ட கோளகை புக்குறும் அடுமுரண் தேரைக்
கொண்டு வல்லையின் வருகென விடுத்தனன் குமரன். - 341
2739 - விடுந்த னிக்கணை வேலெனச் சென்றுவில் வீசி
இடந்தி கழ்ந்திடும் ஏழ்வகை உலகமும் இமைப்பில்
கடந்து மற்றுள பதங்களும் நீங்கியோர் கணத்தில்
தொடர்ந்து மூதண்ட கோளகை புகுந்தது துன்னி. - 342
2740 - துன்னி வெஞ்சரம் £யமான் தேர்வலி தொலைச்சி
அன்ன தைக்கொணர்ந் தொல்லையின் மீண்டுள தம்மா
மின்னு லாய்நிமிர் எழிலியை விண்ணினும் பற்றி
இந்நி லத்தினிற் கொடுவரும் மாருதத் தியல்போல். - 343
2741 - வேறு
வெந்திறல் நெடுங்கணை மீண்டு ஞாலமேல்
இந்திர ஞாலமாம் இரதத் தைக்கொடு
கொந்தவிழ மாலைவேற் குமரன் தன்முனம்
வந்தது வானவர் வழுத்தி ஆர்ப்பவே. - 344
2742 - முப்புரம் முடித்தவன் ருகன் தன்கணை
இப்புவி வருதலும் இலக்கத் தெண்மரும்
ஒப்பரும் இளவலும் ஒல்லென் பூதருங்
குப்புறல் உற்றனர் கொடியன் தேரினும். - 345
2743 - குதித்தனர் புடவியில் குமர வேண்இரு
பதத்திரு மலர்தனைப் பணிந்து பன்முறை
துதித்தனர் புடையராய்த் துன்னி நின்றனர்
கதித்திடு பேரருட் கடலின் மூழ்கியே. - 346
2744 - ஆவதோர் காலையில் அகிலம் யாவுமாம்
மூவிரு முகனுடை முக்க ணான்மகன்
வாவியல் வனப்புடை மாயத் தேர்தெரீஇத்
தேவர்கள் பரசுற இனைய செப்புவான். - 347
2745 - தொல்லையில் வரம்பெறு சூரன் தன்புடை
செல்லலை ஆங்கவன் முடிகை திண்ணமால்
மல்லலந் திருவுடை மாயத் தேரைநீ
நில்லிவண் என்றனன் நிகரில் ஆணையான். - 348
2746 - ஆண்டது வினவுறா அவுணர் கோன்புடை
மீண்டிடல் அஞ்சியே மேலை வன்மைபோய்
மாண்டிடல் பிறப்பிலான் மதலை மாடுறப்
பாண்டிலந் தேரது பணியின் நின்றதே. - 349
2747 - அண்டம தடைந்ததேர் ஐயன் வாளியால்
மண்டலம் இழிந்து தன்மருங் குறாததும்
எண்டகு பூதரும் யாரும் மீண்டதுங்
கண்டனன் அவுணர்கோன் கனலிற் சீறினான். - 350
2748 - அன்னது காண்டலும் அவுணன் ஆங்கொரு
கொன்னெடுஞ் சிலையினைக் குனித்து வல்லையிற்
பன்னிரு கரமுடைப் பண்ண வன்மிசை
மின்னிகர் பகழிகள் மீட்டும் வீசினான். - 351
2749 - மாசறு கங்கைதன் மதலை அவ்வழிக்
காய்சினங் கொண்டொரு கார்மு கம்வளைஇ
ஆசுக மாரிபெய் தவுணர் கோமகன்
வீசிய கணையெலாம் விலக்கி னானரோ. - 352
2750 - கையனும் அத்துணை காய்சி னங்கொளீஇ
ஒய்யென எந்தைதேர் உய்க்கும் வன்மையோன்
மெய்யிடம் எங்கணும் வௌ¤யு றாவகை
செய்யன பகழிகள் செறித்துப் போர்செய்தான். - 353
2751 - பொருந்தலன் கணைபடப் புலம்பிக் காற்றினோன்
வருந்தினன் மயங்கினன் மாக்கள் தூண்டலன்
இருந்தனன் வறிதவன் இயற்கை யாவையுந்
தெரிந்தனன் குமரவேள் அருளின் செய்கையான். - 354
2752 - கண்டிடு முருகவேள் கணைகள் ஆயிரம்
விண்டொடர் செலவினால் விடுத்து வெய்யசூர்
கொண்டிடு சிலையினைக் குறைத்துப் பல்பெருந்
துண்டம தாக்கினான் அமரர் துள்ளவே. - 355
2753 - வேறு
கைச்சிலை முரியச் சூரன் கண்ணுதற் பெருமான் தந்த
முச்சிகைப் படையொன் றேந்தி முடங்குளை யூர்தி தன்னை
உச்சியின் நீபஞ் சூடும் உலகுடை யொருவ னூர்ந்த
அச்சுறு தடந்தேர் முன்னர் அணுகுறத் தூண்டிச் சென்றான். - 356
2754 - தூண்டிய அரிமான் ஏறு சூரன துளத்திற் போந்து
மாண்டகு தனது தீய வள்ளுகிர்க் கரத்தால் எந்தை
பாண்டிலந் தேரை ஆற்றும் பரித்தொஆஆ பதைப்ப மோதி
ஆண்டயல் நின்ற பூதர் அலமர ஆர்த்த தன்றே. - 357
2755 - அன்னது பொழுது தன்னில் அரிமிசைச் சென்ற சூரன்
தன்னுடை வலங்கை கொண்ட தனிப்பெருஞ் சூலந் தன்னைப்
பன்னிரு தடந்தோள் கொண்ட பகவன்மேற் றிரித்து வீச
மின்னென நிலவு கான்று விண்வழப் படர்ந்த தன்றே. - 358
2756 - நீடிய சூலஞ் செல்ல நிமிர்ந்தன எழுந்து செந்தீக்
கூடின அசனி ஈட்டங் குழீஇயின படையின் கொள்ளை
ஆடியல் கணங்கள் ஈண்டி ஆர்த்தன அதனை நோக்கி
ஓடினர் அமரர் ஆனோர் உலகெலாம் வெருவிற் றம்மா. - 359
2757 - அண்ணலும் அதனை நோக்கி ஆயிர கோடி வாளி
கண்ணகன் சிலையிற் பூட்டிக் கதுமென எதிர்தந் துய்ப்பத்
துண்ணென அவற்றை எல்லாஞ் சூலவேல் துணித்து வீட்டி
நண்ணலன் வெகுளித் தீயின் உருவென நடந்த தன்றே. - 360
2758 - நடத்தலும் முகமா றுள்ளோன் ஞானநா யகன்ஈந் துள்ள
படைத்திறல் வன்மை உன்னிப் பாணியொன் றதனின் மேவி
அடுத்திடு குலிசந் தன்னை அடையலன் உய்த்த சூலம்
பிடித்தனை வருதி யென்று பேசினன் செல்ல விட்டான். - 361
2759 - விட்டிடு கின்ற எல்லை வியன்பெருங் குலிசம் ஏகி
நெட்டழற் சிகைமீக் கான்று நிமிர்ந்திடு சூலந் தன்னைக்
கிட்டுத லொடும் பற்றிக் கிளர்ந்தமுத் தலையுங் கவ்வி
ஒட்டலன் சிந்தை உட்க ஒய்யென மீண்ட தன்றே. - 362
2760 - முத்தலைப் படையைக் கொண்டு முரண்மிகு குலிசஞ் செவ்வேள்
கைத்தலம் உய்த்துத் தானுங் கதுமென இருந்த தம்மா
பைத்தலைப் பாந்தள் போற்றும் பருவரைச் சிகர மூன்றும்
இத்தலப் புணரி தன்னில் இடுமருத் தியற்கை யேபோல். - 363
2761 - ஆண்டது காலை தன்னில் அறுமுகத் தையன் கையில
தூண்டிய குலிசத் தோடு சூலமும் வருத லோடுங்
காண்டகும் அமரர் எல்லாங் கரதலம் உச்சி கூப்பி
ஈண்டிவன் தன்னை அட்டே எமையளித் திடுதி யென்றார். - 364
2762 - என்னலும் எந்தை கேளா இராயிரம் பகழி பூட்டி
ஒன்னலம் ஊர்ந்து செல்லும் ஒருபெரு மடங்கல் ஏற்றின்
சென்னியில் அழுத்த லோடுஞ் சேண்கிளர்ந் தரற்றி வீழ்ந்து
தன்னுயிர் ஒல்லை வீந்து தரையிடைப் பட்ட தன்றே. - 365
2763 - ஊர்திய திறந்து வீழ ஒருதனிச் சூரன் காணாப்
பார்தனிற் பாய்ந்து நின்று பராபரன் செம்மல் கையில்
கூர்தரு சூலம் போன கொள்கையுந் தெரிந்து பின்னான்
சேர்தரு வடவை என்னச் செயிர்த்திவை சிந்தை செய்வான். - 366
2764 - தேரொடு படையை வௌவித் திறலுடை மடங்கல் சிந்தி
நேரலன் வலிய னேபோல் நின்றனன் அனையன் தன்னைச்
சாரதர் தொகையை ஏனைத் தலைவர்கள் தம்மை எல்லாம்
ஓருருக் கொண்டி யானே விழுங்குவன் ஒல்லை என்றான். - 367
2765 - என்றிவை மனத்தி லுன்னி இணையறு மாயை நீரால்
நின்றுள, அவுணர் செம்மல் நேமியம் புள்ளே போல
ஒன்றொரு வடிவ மெய்தி ஒலிதிரைக் கடலின் ஆர்த்துத்
தன்துணைச் சிறகர் பெற்ற தனிப்பெருங் கிரிபோ லுற்றான். - 368
2766 - கறையடித் தந்தி சிந்துங் காய்சின அரிமேல் உய்க்கும்
நறையடிக் கமலத் தையை ஞாட்பிடை ஆடற் கொத்த
பறையடித் திட்ட தேபோல் படிமகள் உடலம் விள்ளச்
சிறையடிக் கொண்டு தீயோன் சேணிடை எழுத லுற்றான். - 369
2767 - மண்ணிடை வரைப்பு முற்றும் மணிச்சிறை யதனான் மூடி
விண்ணிடைப் பரிதி யொள்வாள் விலக்கியே சுழலும் வேலைக்
கண்ணிடைப் பெருமீன் குபபை கவர்ந்திட ஊக்கிற் றென்னத்
துண்ணெனப் பூதர் தானைச் சூழல்புக் கெறியு மாதோ. - 370
2768 - அடுத்திடுஞ் சிறகர் தன்னால் அளவையில் பூதர் தம்மைப்
பிடித்திடும் புலவு நாறும் பெருந்தனி மூக்கிற் குத்தி
மிடற்றிடைச் செறித்து மெல்ல விழுங்கிடும் விறல்வேல் அண்ணல்
கொடித்தடந் தேரைச் சூழுங் கொடியபுள் வடிவக் கூற்றம். - 371
2769 - சுற்றிடுங் குமரன் தேரைத் தூண்டிய வலவன் தன்னை
எற்றிடுங் கொடிஞ்சி எஞ்ச இறுத்திடும் பரிகள் தம்மைக்
குற்றிடு முக்கிற் சென்னி கொய்திடுங் குழீஇய வீரர்ப்
பற்றிடும் படைகள் முற்றும் பறித்திடு முறித்து வீசும். - 372
2770 - இத்திறம் அவுணர் செம்மல் இருஞ்சிறைப் புள்ள தாகி
அத்தலைக் கறங்கி வீழ்வுற் றந்தரந் திரித லோடும்
முத்தியை உதவு நோன்றாள் மூவிரு முகத்தன் காணாக்
கைத்தலம் புடைத்து நக்கு நன்றிவன் கற்பி தென்றான். - 373
2771 - எறித்தரு சுடர்வேல் அண்ணல் இம்மென வெகுண்டு போரில்
நிறுத்திய மேரு வென்ன நிமிர்ந்ததோர் வரிவில் வாங்கி
விறற்கணை அநந்த கோடி மிசைமிசைக் கடிது பூட்டித்
திறத்தியல் புள்ளாய்ச் சூழும் அவுணன்மேற் செல்ல வுய்த்தான். - 374
2772 - நெறித்திகழ் பகழ மாரி நிமலன்விட் டிடலும் வெய்யோன்
சிறைப்புடைக் கொண்டு பாங்கிற் சிந்திட அவற்றை மோதிக்
குறைத்திடுந் துண்டந் தன்னாற் கொய்திடுந் தாளிற் பற்றி
முறித்திடுங் கிளர்ந்து வானம் முழுவதுஞ் சுழன்று செல்லும். - 375
2773 - வேலைகள் எல்லை முற்றும் படர்ந்திடும் விராவி மேவு
ஞாலம தகல முற்றும் படர்ந்திடு நாகர் வைகும்
வாலிய உலக முற்றும் படர்ந்திடும் வந்து பூத
சாலம தெறிந்து கல்வித் தலைத்தலை மயங்கிச் செல்லும். - 376
2774 - சூரன்மற் றினைய வாற்றல் சுலாய்க்கொடு திரித லோடும்
பூரணன் அதனைக் காணாப் புள்ளெனப் பெயர்வான் தன்னைத்
தேரொடுந் தொடர்ந்து கோறல் பழயெனச் சிந்தை செய்து
வாரணம் உயர்த்தோன் தன்னை நோக்கினன் வானோர் தம்முள். - 377
2775 - இந்திரன் அனைய காலை எம்பிரான் குறிப்புந் தன்மேல்
அந்தமில் அருள்வைத் துள்ள தன்மையும் அறிந்து நோக்கிச்
சுந்தர நெடுங்கட் பீலித் தோகைமா மயிலாய்த் தோன்றி
வந்தனன் குமரற் போற்றி மரகத மலைபோல் நின்றான். - 378
2776 - நின்றிடு மஞ்ஞைப் புத்தேள் நெடுநிலங் கிழிய மேருக்
குன்றமும் புறஞ்சூழ வெற்புங் குலைந்திடக் கரிகள் வீழ
வன்றிரை அளக்கர் நீத்தம் வறந்திடப் பணிகள் அஞசத்
தன்றுணைச் சிறகால் மோதி இனையன சாற்ற லுற்றான். - 379
2777 - ஐயகேள் அஅர ரெல்லாம் வழிபட அளியன் தன்பால்
செய்ய பேரருளை வைத்தாய் ஆதலிற் சிறுமை தீர்ந்தேன்
உய்யலாம் நெறியுங் கண்டேன் உன்னடி பரிக்கப் பெற்றேன்
பொய்யுலா மாய வாழக்கைப் புன்மையும் அகல்வன் மன்னோ. - 380
2778 - அல்லல்செய் தெமரை எல்லா மருஞ்சிறைப் படுத்தி வீட்டிப்
பல்வகை உலகை யயண்ட அவுணர்கோன் பறவை யாக்கை
செல்லுழச் சென்று சென்று செருவினை இழைத்து வெல்வான்
ஒல்லையில் அடியேன் தன்மேல் ஏறுதி ஊர்தற் கென்றான். - 381
2779 - என்னலும் உளத்திற் செல்லும் இவுளிமான் தேரின் நீங்கிப்
பன்னிரு நாட்டத் தண்ணல் படர்ச்சிறை மயூரி மாகி
முன்னுறு மகவான் தன்மேல் மொய்ம்புடன் புக்கு வைகி
ஒன்னலன் செலவு நோக்கி உம்பரில் ஊர்த லுற்றான். - 382
2780 - ஆறுமா முகத்தெம் மண்ணல் அசனிபோல் அகவி ஆர்க்கும்
மாறிலா மயூர மென்னும் வயப்பரி தனைந டாத்தி
ஈறுசேர் பொழுதிற் சூழும் எரியினை அடுவான் முன்னிச்
சூறைமா ருதஞ்சென் றென்ன அவுணனைத் தொடா¢ந்து சூழ்ந்தான். - 383
2781 - ஆகிய பொழுது தன்னில் ஆழயம் புள்ளாய்த் தோன்றி
மாகம துலவு கின்ற மாற்றலன் அதனை நோக்கிச்
சீகர அளக்க ரென்னத் தெழித்துமேற் சென்று தாக்கக்
கேகய அரசன் தானுங் கிடைத்தமர் புரித லுற்றான். - 384
2782 - நிறங்கிளர் பசலைத் துண்ட நீட்டியே யாக்கை முற்றும்
மறங்கொடு கீண்டு செந்நீர் வாய்ப்படக் கவ்வி வாங்கிப்
புறங்கிளர் சிறைகள் தம்மாற் புடைத்துவெங் காலில் தாக்கிப்
புறங்குபுள் ளுருவ மானோர் இவ்வகை பெரும்போர் செய்தார். - 385
2783 - இத்திறம் பொருத காலைப் பிணிமுகத் தேந்தல் தன்னைப்
பைத்தலை யுடைய தூவி பறித்திடா வதன முற்றுங்
குத்திவெங் குருதி வீட்டிக் குருமணிக் கலாபம் ஈர்த்து
மெய்த்துயர் புரிந்தான் நேமிப் புள்ளுருக் கொண்ட வெய்யோன். - 386
2784 - அச்செயல் முருகன் காணா ஆரழல் என்ன நக்குக்
கைச்சிலை யதனை வாங்கிக் கடுந்தொழில் அவுணர் மன்னன்
உச்சியின் முகத்திற் காலில் உரத்தினில் சிறைகள் தம்மில்
வச்சிர நெடுங்கண் வாளி வரம்பில தொடுத்து விட்டான். - 387
2785 - விட்டிடு கின்ற வாளி வெய்யவன் அங்க மெங்கும்
பட்டிடு கின்ற காலைப் பதைபதைத துதறிச் சிந்தி
எட்டுள திசையும் வானும் இருங்கடல் உலக மெங்குங்
கட்டழல் சிந்திச் சீறிக் கறங்கெனத் திரியா நின்றான். - 388
2786 - திரிந்திடு கின்ற காலைச் செஞ்சுடர்த் தனிவேல் அண்ணல்
புரந்தரன் உருவாய் நின்ற பொறிமயில நடாத்தி யேகி
அரந்தெறு கணைகள் தூண்டி அகிலமும் அவுணன் தன்னைத்
துரந்தமர் இழைக்க லுற்றான் விண்ணவர் தொழுது போற்ற. - 389
2787 - அத்தகும் எல்லை தன்னின் அவுணர்கள் எவர்க்கும் மேலோன்
எய்த்துளம் மெலிந்து சால இடருழந் திரக்க மெய்தி
மெய்த்தழ லென்னச் சீறி வேற்படை கொண்ட செம்மல்
கைத்தலத் திருந்த வில்லைக் கறிப்பது கருதி வந்தான். - 390
2788 - வருவது நிமலன் காணா மலர்க்கரம் ஒன்றில் வைகும்
ஒருதனி ஔ¢வாள் வீசி ஒன்னலன் பறவை யாக்கை
இருதுணி யாகி வீழ எறிந்தனன் எறித லோடும்
அரியயன் முதலாந் தேவர் அனைவரும் ஆடல் கொண்டார். - 391
2789 - வேறு
தாரார் வாகை சூடிய வேலோன் தன்கையிற்
கூரார் வாளாற் புள்ளுரு வத்தைக் குறைவிக்கச்
சூராம் வெய்யோன் அண்டமு கட்டைத் தொடவோங்கிப்
பாராய் நின்றான் விண்ணவர் யாரும் பரிவெய்த. - 392
2790 - ஏழுட் பட்ட ஆழ்திரை நேமி யிடைதூர்த்துத்
தாழ்விற் செல்லு மாதவர் தேரைத் தடைசெய்து
சூழிக் கால்கள் வானெறி செல்லுந் துறைமாற்றிப்
பாழித் திக்கை மூடினன் நின்றான் படியானோன். - 393
2791 - ஆறார் சென்னிப் பண்ணவன் மைந்த னதுகாணாச்
சீறா நன்றாற் சூர்புரி மாயத் திறன்என்னாக்
கூறா அங்கைச் செஞ்சிலை தன்னைக் குனிவித்தே
ஊறார் வெங்கோல் ஏழு தொடுத்தே யுரைவெய்வான். - 394
2792 - நெடுவா னத்தின் காறும் எழுந்தே நிமிர்வெய்தி
முடிவான் வெய்யோன் பாரக மாய்என் முன்நின்றான்
கடலேழ் என்னுந் தன்மையின் நீவிர் கடிதேகி
அடுவீர் என்றே விட்டனன் யா£¢க்கும் அறிவொண்ணான். - 395
2793 - ஒற்றைச் செவ்வே லோன்விடு வாளி யுலகெல்லாஞ்
சுற்றிக் கொண்டே உண்டிடு நேமித் தொகைபோலாய்ச்
செற்றத் தோடும் ஆர்ப்பொடும் ஏகித் திரைவீசி
மற்றச் சூரன் தன்னுரு வத்தை வளைவுற்ற. - 396
2794 - வளையா வெஞ்சூர் மாயிரு ஞால வடிவத்தைக்
களையா உண்டே இன்மைய தாக்கிக் கணையேழுந்
திளையார் நீத்தத் தொல்லுரு நீங்கிச் செருவின்கண்
விளையா டுற்ற எம்பெரு மானபால் மீண்டுற்ற. - 397
2795 - காணா வெய்யோன் பாருரு நீங்கிக் கடல்எல்லாம்
ஊணா வையம் வானொடும் உண்டற் கெழுமாபோல்
ஏணார் நீத்தத் தோர்வடி வாகி யிறைமுன்னம்
நீணா கத்தின் காறும் நிமிர்ந்தே நின்றிட்டான். - 398
2796 - நேரான் மாயத் தொல்லுரு வத்தின் நிலைநோக்கிக்
கூரார் வாளி நூறு தொடுத்தே கோடியோன்பாற்
சேரா வூழித் தீயியல் பாகிச் செறிவுற்றுப்
பேரா தட்டே வம்மென விட்டான் பெயர்வில்லான். - 399
2797 - அவ்வா றாக வாளிகள் நூறும் அருள்நீரால்
வெவ்வாய் அங்கிப் பேருரு வாகி விரவிப்போய்த்
தெவ்வாய் நின்றோன் நீத்தம தாகுஞ் செயல்நீங்க
வெவ்வா யுஞ்சென் றுண்டன அம்மா இறைதன்னில். - 400
2798 - தண்டா தார்க்கும் நீத்த இயற்சை தனையெல்லாம்
உண்டா லித்தே வாளிகள் மீண்டே யுறுகாலைக்
கண்டான் மாயத் தன்மை படைத்தோன் கனல்மேனி
கொண்டான் அண்டங் காறும் நிமிர்ந்தே குலவுற்றான். - 401
2799 - குலவுங் காலைக் கண்டு நகைத்தே கூற்றென்ன
நிலவுஞ் செங்கோல் ஆயிரம் வாங்கா நீடூழி
சுலவுஞ் சண்டச் சூறையின் ஏகிச் சூர்மாயம்
பலவுஞ் செற்றே வம்மென உய்த்தான் பரமானோன். 2 - 402
2800 - உய்க்குங் காலத் தொய்யென ஏகி யுலகெங்குந்
திக்கும் வானுஞ் சூழு மருத்தின் திறனெய்தி
மைக்குந் தூமம் போல்பவன் மெய்த்தீ வடிவெல்லாம்
பொய்க்கும் வண்ணஞ் சாடின ஐயன் புகர்வாளி. - 403
2801 - வேறு
வண்டு லாவரு வாகைய்ந் தாரினான்
கொண்டே ழுந்த கொழுந்தழல் யாக்கையை
உண்டு வாளிகள் ஒய்யென மீண்டொராய்
அண்டர் நாயகன் பாங்கர் அணைந்தவே. - 404
2802 - ஆங்க வெல்லையில் அவ்வடி வத்தினை
நீங்கு மாற்றலன் நீள்சில மேற்கொளா
ஓங்கு மோதை உருவுகொண் டார்த்தலும்
ஞாங்கர் எந்தை நகையொடு நோக்கினான். - 405
2803 - ஆய்ந்து வாளியொ ராயிர நூற்றினை
வாய்ந்த கைக்கொடு மாற்றலன் வன்மையைப்
பாந்த ளாகிப் படுத்து வம்மோவெனா
ஏந்தல் கூறி இமைப்பினில் தூண்டினான். - 406
2804 - அவ்வ யிற்கணை அந்தரத் திற்செலாச்
செவ்வி திற்கிளர் செந்தழல் போல்எழீஇப்
பைவி ரித்த ப·றலைப் பன்னகம்
வெவ்வு ருக்கொடு சூர்மிசை மேயதே. - 407
2805 - கூற்றம் அன்ன கொடுந்தொழில் மன்னவன்
காற்றின் யாக்கை கரப்ப மிசைந்திடா
ஆற்றல் மேவி அணைந்துடன் மீண்டன
வேற்ற டக்கை விமலன் புடைதனில். - 408
2806 - இன்ன தன்மையில் ஈரிரு நாள்வரைத்
துன்ன லன்தொலை யாதமர் ஆற்றியே
பின்னும் மாயையின் பெற்றியைப் புந்தியுள்
உன்னி யேபல் லுருக்கொடு தோன்றினான். - 409
2807 - வேறு
ஓவாஇயல் புரிமூவரில் ஒருசார்வரு மொழியுந்
தேவாசுரர் பிறராமென ஒருசார்வரும் சேணாள்
கோவாமென ஒருசார்வரும் ஒருசார்வருங் குறள்போல்
ஆவாவெனக் கொடுங்கூற்றென ஒருசார்வரும் அன்றே. - 410
2808 - பேயாமென ஒருபால்வரும் பிறழ்வெம்புகைப் படலைத்
தீயாமென ஒருபால்வரும் திசைஎங்கணும் சுழலும்
ஓயாமருத் தினமாமென ஒருபால்வரும் அகிலம்
பாயாவெழு திரையாழயில் ஒருபால்வரும் பரவி. - 411
2809 - ஒருசார்விட மெனவந்திடும் ஒருசார்வரும் பணிபோல்
ஒருசார்முகி லெனவந்திடும் ஒருசார்வரு மிருள்போல்
ஒருசாருரு மெனவந்திடும் ஒருசார்வரும் வரைபோல்
ஒருசார்தன துருவாய்வரும் ஒருசார்வருங் கதிர்போல். - 412
2810 - தொக்கார்பல படையாமென ஒருசார்வருஞ் சூழுந்
திக்கார்களிற் றினமாமென ஒருசார்வருஞ் சினத்தால்
நக்கர்ர்தரும் அரியேறென ஒருசார்வரும் நலிவான்
அக்கால்வரு தனிப்புள்ளென ஒருசார்வரும் அன்றே. - 413
2811 - கரியின்முகத் துணைவன்னென ஒருசார்வருங் கடுங்கண்
அரியின்முகத் திளையோனென ஒருசார்வரும் அளக்கர்ப்
பரியின்முகத் தினில்வந்திடு பாழிக்கனல் படுக்கும்
எரியின்முகத் தனிமைந்தனில் ஒருசாரிடை யேகும். - 414
2812 - எல்லோன்றனை வெகுண்டோனென ஒருசார்வரும் ஏனைச்
சொல்லோங்கிய திறன்மைந்தரில் ஒருசார்வருஞ் சூழ்ச்சி
வல்லோனென ஒருசார்வரு மானப்படை மள்ளர்
பல்லோர்களுஞ் செறிந்தாலென ஒருசாரிடைப் படரும். - 415
2813 - இத்தன்மையில் அவுணர்க்கிறை யாண்டுஞ்செறி வாகி
அத்தன்தனைப் புடைசூழ்தலும் அவைநோக்கிய இமையோர்
சித்தந்தளர்ந் திரிகுற்றனர் திரிகுற்றனர் அம்மா
கத்துங்கடற் புவிமாய்ந்திடு காலத்துயிர் எனவே. - 416
2814 - வேறு
அங்கதன் நிலைமைநோக்கி ஆயிர கோடி வாளி
செங்கையில் வாங்கி வாங்குந் திருநெடுஞ் சிலையிற் பூட்டி
இங்குள அமரர் தஙகள் இருஞ்சிறை அகற்றது வந்து
பங்கயற் சிறைசெய் திட்ட பகவன்மற் றிதனைச் சொல்வான். - 417
2815 - தெவ்வடு பகழி யென்னும் தேவிகாள் நீவி ரேகி
மெய்வலி படைத்து நின்ற மேவலன் ஒருவன் கொண்ட
அவ்வுரு வனைத்து மெய்தி ஆங்கவன் மாய முற்றும்
இவ்விடை அட்டு நீக்கி ஏகி ரென்று விட்டான். - 418
2816 - விட்டிடு சிலீமு கங்கள் விரைந்துபோய் வெகுளி வீங்கி
ஒட்டலன் கொண்ட ஒவ்வொன் றுருவினுக்* கெழுமை யாகி
எட்டுள புலமும் வானும் இருநில வரைப்பும் ஈண்டி
அட்டடல் பெற்ற அம்மா அனையவன் மாயந் தன்னை.
( * ஒவ்வொன்றுருவினுக்கு என்பதனை உரு ஒவ்வொன்-
றினுக்கு என மாற்றிப் பொருள் கொள்க.) - 419
2817 - உடல்சின மோடு சூரன் ஒருவனாய் அங்கண் நின்றான்
அடல்வலி கொண்ட வாளி அந்தர நெறியான் மீண்டு
புடையுறு சரங்க ளோடு பொள்ளெனத் தூணி புக்க
சுடர்நெடுந் தனிவே லண்ணல் அவன்முகம் நோக்கிக் செல்வான். - 420
2818 - வெம்புய லிடையில் தோன்றி விளிந்திடு மின்னு வென்ன
இம்பரில் எமது முன்னம் எல்லையில் உருவங் கொண்டாய்
அம்பினில் அவற்றை யெல்லாம் அட்டனம் அழிவி லாத
நம்பெரு வடிவங் கொள்வ நன்றுகண் டிடுதி யென்றான். - 421
2819 - கூறிமற் றினைய தன்மை குரைகடல் உலகந் திக்கு
மாறிலாப் புவனம் அண்டம் வானவா¢ உயிர்கள் யாவும்
ஆறுமா முகத்து வள்ளல் மேனியில் அமைந்த தன்றி
வேறிலை என்ன ஆங்கோர் வியன்பெரு வடிவங் கொண்டான். - 422
2820 - உள்ளடி வரைகள் யாவும் ஒண்புற வடியின் நீத்தம்
வள்ளுகிர் விரல்கள் முற்றும் வான்உரு மேறு நாள்கோள்
எள்ளரும் பரடு தன்னில் இரும்புனற் கிறைவன் சோமன்
நள்ளிருள் அனைய மேனி நிருதியோ டரக்கர் நண்ண. - 423
2821 - அடிதிரள் கணைக்கால் தன்னில் ஆரிடர் மணிகள் சானு
வடிவமை முழந்தாள் விஞ்சை வானவ ராதி யானோ£¢
தொடைதனின் மகவான் மைந்தன் தொடைமுதல் நடுவன் காலன்
கடிதடத் தசுரர் பக்கங் கடவுளர் யாரும் நிற்ப. - 424
2822 - இருப்பினில் நாகர் கோச எல்லையில் மருந்தே யுந்திக்
கருப்படும் உயிர்கள் மார்பிற் கலைகள்முந் நூலிற் போதம்
அருப்பயில் உரோமத் தண்டம் அங்கையில் அகில போகந்
திருப்பெருந் தடந்தோள் வைப்பிற் செங்கண்மால் விரிஞ்சன் மேவ. - 425
2823 - மெல்லிதழ் அஆயை செங்கை விரல்மிசை அணங்கின் நல்லார்
ஒல்லொலி அங்கி கண்டம் ஒப்பிலா மணிவாய் வேதம்
பல்லிடை யெழுந்து நாவிற் பரமவா கமத்தின் பேதம்
நல்லிதழ் மனுவின் விஞ்சை நாசியிற் பவனன் மன்ன. - 426
2824 - கருணைகொள் விழியில் சோமன் கதிரவன் செவியில் திக்குத்
திருநுதற் குடிலை வைப்புச் சென்னியில் பரம ஆன்மா
மரபினின் மேவித் தோன்ற மாறிலா திருக்குந் தொல்லை
ஒருதன துருவங் காட்டி நிற்றலும் உம்பர் கண்டார். - 427
2825 - செஞ்சுடர் அநந்த கோடி செறிந்தொருங் குதித்த தென்ன
விஞ்சிய கதிர்கான் றுள்ள வியன்பெரு வடிவை நோக்கி
நெஞ்சகந் துளங்கி விண்ணோர் நின்றனர் நிமல மூர்த்தி
அஞ்சல்மின் அஞ்சல் மின்னென் றருளினன் அமைத்த கையான். - 428
2826 - அண்டர்கள் யாரும் எந்தை அருள்முறை வினவி யுள்ளம்
உண்டிடு விதிர்ப்பு நீங்கி உவகையால் தொழுது நின்றார்
தண்டுளி வரைய தென்னத் தணப்பறச் சிதறும் ஊழிக்
கொண்டலின் தோற்றம் நோக்கிக் குலவுறு மஞ்ஞை யேபோல். - 429
2827 - இறுதியும் முதலும் இல்லா இப்பெரு வடிவந் தன்னைக்
கறைவிட முறழுஞ் சூரன் கண்டுவிம் மிதத்தின் நிற்ப
அறிவரும் உணர்தல் தேற்றா ஆறுமா முகத்து வள்ளல்
சிறிதுநல் லுணர்ச்சி நல்க இனையன செப்ப லுற்றான். - 430
2828 - எண்ணிலா அவுணர் தானை யாவையும் இமைப்பிற் செற்று
விண்ணுலா அண்டந் தோறும் வியன்சமர் ஆற்றி என்பால்
நண்ணினார் தம்மை எல்லாம் நாமறத் தடிந்து வீட்டி
வண்ணமான் தேரும் மீண்டு வராநெறி தடுத்தான் மன்னோ. - 431
2829 - திண்டிறல் உடையேன் தூண்டுந் திறற்படை யாவும் நீக்கிக்
கொண்டவென் மாய முற்றுங் கொடுஞ்சரம் அதனான் மாற்றி
அண்டமும் புவனம் யாவும் அமரரும் பிறவுந் தன்பாற்
கண்டிடும் வடிவ மொன்று காட்டியென் கண்முன் நின்றான். - 432
2830 - கோலமா மஞ்ஞை தன்னிற் குலவிய குமரன் தன்னைப்
பாலனென் றிருந்தேன் அந்நாட் பரிசிவை யுணர்ந்தி லேன்யான்
மாலயன் தனக்கும் ஏனை வானவர் தமக்கும் யார்க்கும்
மூலகா ரணமாய் நின்ற மூர்த்திஇம் மூர்த்தி அன்றோ. - 433
2831 - ஒற்றென முன்னம் வந்தோன் ஒருதனி வேலோன் தன்னைப்
பற்றிக லின்றி நின்ற பராபர முதல்வன் என்றே
சொற்றனன் சொற்ற எல்லாந் துணிபெனக் கொண்டி லேனால்
இற்றையிப் பொழுதில் ஈசன் இவனெனுந் தன்மை கண்டேன். - 434
2832 - மீயுயர் வடிவங் கொண்டு மேவிய தூதன் சொற்ற
வாய்மைகள் சரதம் அம்மா மற்றியான் பெற்ற அண்டம்
ஆயவை முழுது மற்றும் அறுமுகம் படைத்த செம்மல்
தூயபொற் பதரோ மத்தில் தோன்றியே நிற்கும் அன்றே. - 435
2833 - அண்டர்கள் முனிவர் ஏனோர் அகிலமுங் காட்டி அண்ணல்
கொண்டிடு படிவ முற்றுங் குறித்தியார் தெரிதற் பாலார்
எண்டரு விழிகள் யாக்கை எங்கணும் படைத்தோர்க் கேனுங்
கண்டிட அநந்த கோடி கற்பமுங் கடக்கும் அன்றே. - 436
2834 - சீர்க்கும ரேசன் கொண்ட திருப்பெரு வடிவந் தன்னில்
ஏர்க்குறும் ஔ¤யுஞ் சீரும் இளமையும் எழிலும் எல்லாம்
ஆர்க்குள வுலகில் அம்மா அற்புதத் தோடும் பல்காற்
பார்க்கினுந் தெவிட்டிற் றில்லை இன்னுமென் பார்வை தானும். - 437
2835 - நேரில னாகி ஈண்டே நின்றிடும் முதல்வன் நீடும்
பேருரு வதனை நோக்கிப் பெரிதுமச் சுறுவ தல்லால்
ஆரிது நின்று காண்பார் அமரரில் அழிவி லாத
சீரிய வரங்கொண் டுள்ளேன் ஆதலில் தெரிகின் றேனால். - 438
2836 - ஆயிர கோடி காமர் அழகெலாந் திரண்டொன் றாகி
மேயின எனினுஞ் செவ்வேள் விமலமாஞ் சரணந் தன்னில்
தூயநல் லெழிலுக் காற்றா தென்றிடின் இனைய தொல்லோன்
மாயிரு வடிவிற் கெல்லாம் உவமையார் வகுக்க வல்லார். - 439
2837 - இங்கென துயிர்போல் உற்ற இளவலும் இளைய சேயுஞ்
செங்கையில் வேலோன் றன்னைச் சிறுவனென் றெண்ணல் கண்டாய்
பங்கயன் முதலோர் காணாப் பரமனே யாகும் என்றார்
அங்கவர் மொழந்த வாறுஞ் சரதமே ஆன தன்றே. - 440
2838 - அண்ணலார் குமரன் மேனி அடிமுதல் முடியின் காறும்
எண்ணிலா வூழி காலம் எத்திறம் நோக்கி னாலுங்
கண்ணினால் அடங்கா துன்னிற் கருத்தினால் அடங்கா தென்பால்
நண்ணினான் அமருக் கென்கை அருளென நாட்ட லாமே. - 441
2839 - திருகிய வெகுளி முற்றுந் தீர்ந்தன செருவின் ஊக்கம்
அருகிய துரோமம புள்ளி ஆயின விழியில தூநீ£¢
பெருகிய திவன்பால் அன்பு பிறந்தன தமியேற் குள்ளம்
உருகிய தென்பு தானும் உலைமெழு காகும் அன்றே. - 442
2840 - போயின அகந்தை போதம் புகுந்தன வலத்த தான
தூயதோர் தோளுங் கண்ணுந் துடித்தன புவன மெங்கும்
மேயின பொருள்கள் முற்றும் வௌ¤ப்படு கின்ற விண்ணோர்
நாயகன் வடிவங் கண்டேன் நற்றவப் பயனீ தன்றோ. - 443
2841 - சூழுதல் வேண்டுந் தாள்கள் தொழுதிடல் வேண்டும் அங்கை
தாழுதல் வேண்டுஞ் சென்னி துதித்திடல் வேண்டுந் தாலு
ஆழுதல் வேண்டுந் தீமை அகன்றுநான் இவற்கா ளாகி
வாழுதல் வேண்டும் நெஞ்சம் தடுத்தது மானம் ஒன்றே. - 444
2842 - ஒன்னலர் பொருட்ட லேகி உறுசமர் இழைத்த செம்மல்
தன்னுரு வதனைக் காண்கின் முனிவதே தகுதி யாகும்
வன்னிகொள் வெண்ணெ யேபோல் வலியழிந் துருகிற் றென்றால்
என்னுடைய வயத்த வன்றோ உணர்ச்சியு மியாக்கை முற்றும். - 445
2843 - ஏடவிழ் அலங்கல் மார்பன் என்னுடன் இந்நாள் காறும்
நீடிய இகற்போர் ஆற்றி நீங்கலான் நின்ற தெல்லாம்
ஆடலின் இயற்கை யென்றே அறிந்தனன் அ·தான் றன்னான்
சாடிய வேண்டு மென்னின் யாரது தாங்கற் பாலார். - 446
2844 - ஏதமில் அமரர் தம்மை யான்சிறை செய்த தெல்லாந்
தீதென உரைத்தார் பல்லோர் அன்னதன் செயற்கை யாலே
வேதமும் அயனும் ஏனை விண்ணவர் பலருங் காணா
நாதனிங் கணுகப் பெற்றேன் நன்றதே யான தன்றே. - 447
2845 - ஒன்றொரு முதல்வ னனகி உரைதரு மூர்த்தி முன்னம்
நின்றமர் செய்தேன் இந்நாள் நெஞ்சினித் தளரேன் அம்மா
நன்றிதோர் பெருமை பெற்றேன் வீரனும் நானே யானேன்
என்றுமிப் புகழே நிற்கும் இவ்வுடல் நிற்ப துண்டோ. - 448
2846 - வானுளோர் சிஆறையை நீக்கி வள்ளலை வணங்கி இந்த
ஊனுலாம் உயிரைப் போற்றி அளியர்போல் உறுவன் என்னின்
ஆனதோ எனக்கி தம்மா ஆயிர கோடி யண்டம்
போனதோர் புகழும் வீரத் தன்மையும் பொன்றி டாவோ. - 449
2847 - என்னஇத தகைய பன்னி நிற்றலும் எவர்க்கும் மேலோன்
உன்னருந் தகைத்தாய் நின்ற ஒருபெருந் தோற்றம் நீத்து
மின்னிவர் கலாபம் ஊர்ந்த வியனுருக் கொண்டு நண்ணித்
துன்னலன் போத மாற்றித் தொன்மைபோ லாகச் செய்தான். - 450
2848 - காரண னாகித் தானே கருணையால் எவையும் நல்கி
ஆருயிர் முழுது மேவி அனைத்தையும் இயற்றி நிற்கும்
பூரண முதல்வன் மைந்தன் போதகம் அளித்து மாற்றிச்
சூரனை மயக்கஞ் செய்யுஞ் சூழச்சியோ அரிய தன்றே. - 451
2849 - அத்தகு காலை தானே அவுணர்கோன் உணர்ச்சி நீங்கிச்
சித்தம திடையே தொல்லைச் சீற்றமும் இகலும் உற்ற
மெய்த்தகு குழவித் திங்கள் விண்ணெறி செல்லச் செல்லும்
எத்திசை இருளும் அன்ன தகன்றுழி எழுந்த தேபோல். - 452
2850 - பிணிமுகம் உயர்த்து நின்ற பெருந்தகை தோற்றங் காணூஉத்
தணிவருஞ் சினமேற் கொண்டு சமரின் மேல் ஊக்கஞ் சேர்த்தி
அணியதென் றிண்மை என்னா அங்கையோ டங்கை தாக்கி
மணிமுடி துளக்கி நக்கு மற்றிவை புகலல் உற்றான். - 453
2851 - சேயுரு வமைந்த கள்வன் செருவிஙூஎ இழைக்க லாற்றான்
மாயையி னொன்று காட்டி எனையிவண் மையல் செய்தான்
ஆயது துடைத்தேன் என்றால் ஆரெனக் கொப்புண் டென்றுங்
காயம தழிவி லாதேன் கருத்தழி கின்ற துண்டோ. - 454
2852 - குன்றினை எறிந்த வேற்கைக் குமரனோ டமர தாற்றி
வென்றிடு கின்றேன் மெல்ல மேலது நிற்க இந்த
வன்றிறற் சமரை மூட்டி நின்றவா னவரை யெல்லாம்
தின்றுயிர் குடித்து முன்னென் சினஞ்சிறி தகல்வன் என்றான். - 455
2853 - ஆயது துணிவாக் கொண்ட அவுணர்கள் மன்னன் பின்னும்
தீயதோர் தொல்லை மாயச் சீர்கொள்மந் திரத்தைப் பன்னி
ஞாயிறு மருட்கை கொள்ள ஞாலமுங் ககன முற்றும்
மாயிருள் உருவங் கொண்டு மறைந்துநின் றார்க்க லுற்றான். - 456
2854 - தெண்டிரை நேமி தன்னில் தீவிடம் எழுந்த தென்ன
எண்டிசை எல்லை முற்றும் இருநில வரைப்பும் எல்லா
அண்டமு மாகி ஈண்டும் ஆரிருள் வடிவை வானோர்
கண்டனர் அவுணன் மாய மீதெனக் கலக்க முற்றா£¢. - 457
2855 - அத்துணை அவுணர் மன்னன் அவ்விருள் இடையே பாய்ந்து
பத்திகொள் சிகர மன்ன ப·றலை அளவை தீர்ந்த
கைத்தல முளதோர் யாக்கை கதுமெனக் கொண்டு விண்ணோர்
மெய்த்தொகை நுகர்வான் உன்னி விண்ணிடைக் கிளர்ந்து சென்றான். - 458
2856 - ஆடியல் கொண்ட சூரன் அந்தரத் தெழலும் வானோர்
கூடிய ஓதி தன்னால் குறிப்பினால் தெரிந்து நம்மைச்
சாடிய வருவன் என்னாத் தலைத்தலை சிதறி நில்லா
தோடினர் கூற்றை நேர்ந்த உயிரென இரங்க லுற்றார். - 459
2857 - நணணினர்க் கினியாய் ஓலம் ஞானநா யகனே ஓலம்
பண்ணவர்க் கிறையே ஓலம் பரஞ்சுடர் முதலே ஓலம்
எண்ணுதற் கா¤யாய் ஓலம் யாவையும் படைத்தாய் ஓலம்
கண்ணுதற் பெருமான் நல்குங் கடவுளே ஓலம் ஓலம். - 460
2858 - தேவர்கள் தேவே ஓலம் சிறந்தசிற் பரனே ஓலம்
மேவலர்க் கிடியே ஓலம் வேற்படை விமலா ஓலம்
பாவலர்க் கௌ¤யாய் ஓலம் பன்னிரு புயத்தாய் ஓலம்
மூவரு மாகி நின்ற மூர்த்தியே ஓலம் ஓலம். - 461
2859 - கங்குலின் எழுந்த கா£¢போல் கனையிருள் மறைவின் ஏகி
நுங்கிய செல்வான் சூரன் ஓடவும் நோன்மை யில்லேம்
எங்கினி உய்வம் ஐய இறையுநீ தாழ்க்கல் கண்டாய்
அங்கவன் உயிரை உண்டெம் மாவியை யருளு கென்றார். - 462
2860 - தேற்றலை போலு மீது சிறிதுநீ பாணிப் பாயேல்
ஆற்றலின் மறைந்து நின்றே அகிலமுந் தானே யுண்ணும்
மாற்றலன் ஆவி தன்னை வாங்குதி வல்லை யென்னாப்
போற்றினன் முதல்வன் தன்னை மயூரமாய்க் கொண்ட புத்தேள். - 463
2861 - அங்கவர் மொழியும் வெய்யோன் ஆற்றலுந் தெரிந்து செவ்வேள்
செங்கைய தொன்றில் வைகுந் திருநெடு வேலை நோக்கி
இங்கிவன் ஆகம் போழ்ந்தே ஏகுதி இமைப்பின் என்னாத்
துங்கம துடைய சீர்த்திச் சூரன்மேற் செல்லத் தொட்டான். - 464
2862 - ஏயென முருகன் தொட்ட இருதலை படைத்த ஞாங்கர்
ஆயிர கோடி என்னும் அருக்கரில் கிகழ்ந்து தோன்றித்
தீயழற் சிகழி கான்று சென்றிட அவுணன் கொண்ட
மாயிருள் உருவ முற்றும் வல்விரைந் தகன்ற தன்றே. - 465
2863 - அன்னவன் தனது மாயம் அழிந்ததும் ஐயன் வைவேல்
முன்னுறு மாறு நோக்கி முடிவிலா வரத்தி னேனை
என்னிவட் செய்யும் அம்மா இவன்விடும் எ·க மென்னா
உன்னினன் முறுவல் எய்தி உருகெழு சீற்றங் கொண்டான். - 466
2864 - வாரிதி வளாகந் தன்னை மாதிர வரைப்பை மீக்கீழ்ச்
சேருறு நிலயந் தன்னைத் திசைமுகன் முதலா வுள்ள
ஆருயி ரோடும் வீட்டி அடுவன்மே லிதனை என்னாச்
சூரெனும் அவுணன் மற்றைத் தொடுகடல் நடுவண் ஆனான். - 467
2865 - வன்னியின் அலங்கல் கான்று வான்தழை புகையின் நல்கிப்
பொன்னென இணர்கள் ஈன்று மரகதம் புரையக் காய்த்துச்
செந்நிற மணிகள் என்னத் தீம்பழங் கொண்டு கார்போல்
துன்னுபல் கவடு போக்கிச் சூதமாய் அவுணன் நின்றான். - 468
2866 - மாசறு ககன கூட வரம்பதன் அளவு மேல்போய்
ஆசையின் எல்லை காறும் அளவைதீ ருலவை ஓச்சிக்
காசினி அகலந் தாங்குங் கச்சபத் துணைத்தூ ரோட்டிப்
பாசடை பொதுளி வெஞ்சூர் பராரைமால வரையின் நின்றான். - 469
2867 - ஒராயிர நூற தென்னும் ஓசனை அளவை யான்ற
பராரைமா வுருவ மாகிப் பலவுடைச் சினைமாண் கொம்பர்
விராவிய சூழ்ச்சி தன்னால் வேலைகள் முழுதும் விண்ணும்
தராதல வரைப்பும் எல்லாந் தண்ணிழல் பரப்பி நின்றான். - 470
2868 - நெடுங்கலை முயல்மான் கொண்டு நிலவும்அம் புலியும் நீத்தம்
அடுங்கதிர் படைத்த கோவும் அளகையை யாளி தானுங்
கடங்கலுழ் கின்ற ஆசைக் கரிகளுங் கடாவிற் செல்லும்
மடங்கலும் வெருவச் சூரன் மாவுருக் கொண்டு நின்றான். - 471
2869 - மிக்குயர் உவணம் அன்ன மிசைப்படும் எகினப் புள்ளும்
மைக்குயில் சேவ லாகிய மயூரமாம் வலியன் தானும்
புக்கமர் தெரிக்கும் ஆடற் பூவையுங் கொடிய தான
குக்குட முதலும் அஞ்சக் கொக்குரு வாகி நின்றான். - 472
2870 - காலெனு மொய்ம்பன் உட்கக் கட்செவி கவிழ்ந்து சோர
வாலிய வசுக்கள் ஏங்கி மலர்க்கரம் மறிக்க வெய்யோன்
பாலர்மெய் வியரா நிற்பப் பணைமுலை அரிவை மார்கள்
சேலெனும் விழிகள் பொத்தச் சேகர மாகி நின்றான். 3 - 473
2871 - அத்தியின் அரசு பேர ஆலமும் தெரிக்கில் ஏங்க
மெய்த்திறல் வாகை வன்னி மெலிவுற வீரை யாவுந்
தத்தம திருப்பை நீங்கத் தாதவிழ் நீபத் தாரோன்
உய்த்திடு தனிவேல் முன்னர் ஒருதனி மாவாய் நின்றான். - 474
2872 - நிலமிசை இனைய வாறோர் நெடும்பெருஞ் சூத மாகி
உலவையின் செறிவு தன்னால் உம்பருந் திசையும் எற்றித்
தலைமுதல் அடியின் காறுஞ் சாலவுந் தளர்ந்து தள்ளுற்
றலமரு வாரிற் றானே அசைந்தனன் அசைவி லாதான். - 475
2873 - பைவிரி பாந்தட் புத்தேள் பரம்பொறா தழுங்கப் பாரின்
மைவிரி வடிவச் சூறை மாருதம் எறிய மாழை
மெய்விரி குடுமிக் கோட்டு மேருவெற் பசைந்தா லென்ன
மொய்விரி அவுணன் யாக்கை அலைத்தனன் முடிவ தோரான். - 476
2874 - இடிந்தன சரிந்த ஞாலம் ஏழ்வகைப் பிலங்கள் முற்றும்
பொடிந்தன கமட நாகம் புரண்டன புழைக்க மாக்கள்
முடிந்தன மறிந்த வேலை முழுவதும் ஒன்றா குற்ற
மடிந்தன உயிரின் பொம்மல் வரைக்குலம் அறிந்த அன்றே. - 477
2875 - தாரகை உதிர்ந்த கோளுந் தலைபனித் திரிந்த வெய்யோன்
தேரொடு மாவுந் தானுந் தியங்கினன் திங்கட் புத்தேள்
பேருறு மானம் நீங்கிப் பெயர்ந்தனன் ஏனை வானோர்
மேருவுங் கயிலை வெற்பும் புக்கனர் வெருவு நீரார். - 478
2876 - ஏற்றமில் சுவர்க்க முற்றும் இற்றன அதற்கும் அப்பால்
மேற்றிகழ் முனிவர் வைகும் உலகமும் பகிர்ந்து வீழ்ந்த
நாற்றிசை முகத்தன் மாயோன் நண்ணிய உலகும் அற்றே
சாற்றுவ தென்கொல் அண்டச் சூழலுந் தகர்ந்த தன்றே. - 479
2877 - தெண்டிரை நடுவண் நின்ற தீயவன் செயலும் அன்னான்
கொண்டிடும் உருவும் உள்ளக் கொள்கையும் வலியுஞ் சீரும்
அண்டர்கள் எவர்க்கும் மேலாம் ஆதியம் பகவன் தொட்ட
விண்டொடர் தனிவேல் காணா வெஞ்சினம் விளைத்த தன்றே. - 480
2878 - தேயுவின் எடுத்த அண்டத் திறங்களும் பிறங்கு ஞாலத்
தாயிர கோடி அண்டத் தங்கியும் ஒன்றிற் றென்ன
மீயுயர்ந் தொழுகி ஆன்றோர் வெருவருந் தோற்றங் கொண்டு
நாயகன் தனது தெய்வப் படைக்கலம் நடந்த தன்றே. - 481
2879 - வயிர்த்திடு நிலைமை சான்ற வன்கணான் உயிரை வௌவச்
செயிர்த்திடுந் தெய்வச் செவ்வேல் திணிநில வரைப்பில் அண்டம்
மயிர்த்தொகை யாக ஏனைப் பூதமும் அழிய அங்கண்
உயிர்த்தொகை முருக்கத் தோன்றும் ஒருவனிற் சென்ற தன்றே. - 482
2880 - மாறமர் உழந்து பன்னாள் வரம்பறு பிரம மாவார்
வேறிலை யாமே என்ற இருவரும் வெருவி நீங்க
ஈறொடு முதலும் இன்றி எழுகிரி விலக்கி விண்மேற்
சேறலின் நிலைமை காட்டிப் படர்ந்தது கடவுட் செவ்வேல். - 483
2881 - வேதனை அகத்த ராகும் விண்ணவர் படைகள் தம்முள்
யாதனை இதற்கு நேரா இயம்புவ தெரியில் தோன்றிப்
பூதனை உயிருண் கள்வன் புண்டரீ கத்தன் வன்மை
சோதனை புரிந்த மேலோன் சூலமே என்ப தல்லால். - 484
2882 - மண்டல நிலத்தின் வைப்பும் வாரிதி ஏழு மற்றைத்
தெண்டிரைக் கடலும் வானுஞ் சேணுயர் பிறங்கல் முற்றும்
எண்டிசைப் புறமும் அண்டத் தேணியின் பரப்பும் ஈண்ட
ஒண்டழற் சிகையின் கற்றை உமிழ்ந்ததால் ஒருங்கு ஞாங்கர். - 485
2883 - பற்றிய ஞெகிழி பாரில் படர்ந்தன பௌவம் யாவுஞ்
சுற்றி திசையும் வானுஞ் சூழ்ந்தன சோதி வைகும்
பொற்றைய தொன்றே அல்லாப் பொருப்பெலாஞ் செறிந்த பொன்றோய்
கற்றையங் கதிரின் அண்டச் சூழலுங் கதுவ லுற்ற. - 486
2884 - விடம்பிடித்த தமலன் செங்கண் வெங்கனல் உறுத்திப் பாணி
இடம்பிடித் திட்ட தீயில் தோய்த்துமுன் இயற்றி யன்ன
உடம்பிடித் தெய்வம் இவ்வா றுருகெழு செலவின் ஏகி
மடம்பிடித் திட்ட வெஞ்சூர் மாமுதல் தடிந்த தன்றே. - 487
2885 - ஆடல்வேல் எறித லோடும் ஆமிர வடிவாய் அண்ட
கூடமும் அலைத்த கள்வன் அரற்றொடு குறைந்து வீழ்ந்தும்
வீடிலன் என்ப மன்னோ மேலைநாள் வரத்தின் என்றால்
பீடுறு தவமே அன்றி வலியது பிறிதொன் றுண்டோ. - 488
2886 - கிள்ளையின் வதனம் அன்ன கேழ்கிளர் பசுங்காய் தூங்கித்
தள்ளரும் நிலைத்தாய் நின்ற மாவுருச் சாய்த லோடும்
உள்ளுறு சினமீக் கொள்ள ஒல்லைதொல் லுருவம் எய்தி
வள்ளுறை யுடைவாள் வாங்கி மலைவது கருதி ஆர்த்தான். - 489
2887 - செங்கதிர் அயில்வாள் கொண்டு செருமுயன் றுருமின் ஆர்த்துத்
துங்கமொ டெதிர்ந்து சீறுஞ் சூருரங் கிழித்துப் பின்னும
அங்கம திருகூ றாக்கி அலைகடல் வரைப்பில் வீட்டி
எங்கணும் மறைகள் ஆர்ப்ப எ·கம்வான் போயிற் றம்மா. - 490
2888 - புங்கவர் வழுத்திச் சிந்தும் பூமழை யிடையின் ஏகி
அங்கியின் வடிவம் நீங்கி அருளுருக் கொண்டு வான்றோய்
கங்கையிற் படிந்து மீண்டு கடவுளர் இடுக்கண் தீர்த்த
எங்கள்தம் பெருமான் செங்கை எய்திவீற் றிருந்த தவ்வேல். - 491
2889 - தாவடி நெடுவேல் மீளத் தற்பரன் வரத்தால் வீடா
மேவலன் எழுந்து மீட்டும் மெய்பகிர் இரண்டு கூறுஞ்
சேவலும் மயிலு மாகிச் சினங்கொடு தேவர் சேனை
காவலன் தன்னை நாடி அமர்த்தொழில் கருதி வந்தான். 2 - 492
2890 - மணிகிளர் வரைய தொன்றும் மரகதப் பிறங்க லொன்றுந்
துணையடி சிறகர் பெற்றுச் சூற்புயல் அழிய ஆர்த்துத்
திணிநில விசும்பின் மாட்டே சென்றெனச் சேவ லோடு
பிணிமுக வுருவாய் வந்து பெருந்தகை முன்னம் புக்கான். - 493
2891 - ஆட்படு நெறியிற் சேர்த்தும் ஆதியின் ஊழ்தந் துய்க்கத்
தாட்படை மயூர மாகித் தன்னிகர் இல்லாச் சூரன்
காட்படை யுளத்த னாகிக் கடவுளர் இரியல் போக
ஞாட்பியல் செருக்கில் வந்தான் ஞானநா யகன்றன் முன்னம். - 494
2892 - மருள்கெழு புள்ளே போல வந்திடு சூரன் எந்தை
அருள்கெழு நாட்டாஞ் சேர்த்த ஆங்கவன் இகலை நீங்கித்
தெருள்கெழு மனத்த னாகி நின்றனன் சிறந்தார் நோக்கால்
இருள்கெழு கரும்பொன் செம்பொன் னாகிய இயற்கை யேபோல். - 495
2893 - தீயவை புரிந்தா ரேனுங் குமரவேள் திருமுன் உற்றால்
தூயவ ராகி மேலைத் தொல்கதி யடையவர் என்கை
ஆயவும் வேண்டுங் கொல்லோ அடுசமர் இந்நாட் செய்த
மாயையின் மகனும் அன்றோ வரம்பிலா அருள்பெற் றுய்ந்தான் - 496
2894 - அக்கணம் எம்பிரான்தன் அருளினால் உணர்வு சான்ற
குக்குட வுருவை நோக்கிக் கடிதில்நீ கொடியே ஆகி
மிக்குயர் நமது தேரின் மேவினை ஆர்த்தி என்னத்
தக்கதே பணியி தென்னா எழுந்தது தமித்து விண்மேல். - 497
2895 - செந்நிறங் கெழீஇய சூட்டுச் சேவலங் கொடியொன் றாகி
முன்னுறு மனத்திற் செல்லும் முரண்டகு தடந்தேர் மீப்போய்
இந்நில வரைப்பின் அண்டம் இடிபட உருமே றுட்க
வன்னியும் வெருவ ஆர்த்து மற்றவண் உற்ற தன்றே. - 498
2896 - சீர்திகழ் குமர மூர்த்தி செறிவிழி கொண்ட தொல்லை
ஊர்தியின் இருக்கை நீங்கி உணர்வுகொண் டொழுகி நின்ற
சூர்திகழ் மஞ்ஞை யேறிச் சுமக்குதி எம்மை என்னாப்
பார்திசை வானம் முற்றும் பரியென நடாத்த லுற்றான். - 499
2897 - தடக்கடல் உடைய மேருத் தடவரை இடிய மற்றைப்
படித்தலம் வெடிப்பச் செந்தீப் பதைபதைத் தொடுங்கச் சூறை
துடித்திட அண்ட கூடந் துளக்குறக் கலாபம் வீசி
இடித்தொகை புரள ஆர்த்திட் டேகிற்றுத் தோகை மஞ்ஞை. - 500
2898 - படத்தினின் உலகம் போற்றும் பணிக்கிறை பதைப்பப் பாங்கர்
அடுத்திடு புயங்கம் முற்றும் அலமர அவனி கேள்வன்
இடத்தமர் கின்ற பாம்பும் ஏங்குற விசும்பிற் செல்லும்
உடற்குறை அரவும் உட்க உலாயது கலாப மஞ்ஞை. - 501
2899 - பாரொடு விரிஞ்சன் தன்னைப் படைத்திட பன்னாள் மாயன்
காரென வந்து முக்கட் கடவுளைப் பரித்த தேபோல்
வீரருள் வீரனாகும் வேலுடைக் குமரன் தன்னைச்
சூருரு வாகி நின்ற தோகைமேல் கொண்ட தம்மா. - 502
2900 - வெயில்விடும் அநந்த கோடி வெய்யவர் திரண்டொன் றாகிப்
புயல்தவழ் கடவுள் வானில் போந்திடு தன்மை யேபோல்
அயிலினை யுடைய செவ்வேள் மரகதத் தழகு சான்ற
மயிலிடை வைகி ஊர்ந்தான் மாமுகந் திசைகள் முற்றும். - 503
2901 - நேமிகள் ஏழும் ஒன்றாய் நிமிர்ந்தெழும் வடவை முற்றுந்
தாமொரு வடிவாய் அங்கட் சார்ந்திடு நிலைமை யென்ன
மாமயில் உய்த்துச் சென்ற வாகைவேல் வீரன் மீண்டு
தீமைகொள் அவுணன் மூதூர்ச் செருநிலத் தெல்லை புக்கான். - 504
2902 - புக்குள குமர மூர்த்தி பொறிமயில் உருவ மாயுங்
குக்குட மாயும் நின்ற அமரரைக் குறித்து நோக்கி
மிக்கநும் மியற்கை யாகி மேவுதிர் விரைவின் என்ன
அக்கணம் அவருந்தொல்லை வடிவுகொண் டடியில் வீழ்ந்தார். - 505
2903 - வள்ளலை வணங்கிப் பல்கால் வழுத்தியே தொழுது தத்தம்
உள்ளமும் புறத்தில் என்பும் உருகிட விழியில் தூநீர்
தள்ளுற வுரைகள் முற்றுந் தவறிடப் பொடிப்ப யாக்கை
கள்ளுண வுற்ற வண்டின் களிமகிழ் சிறந்து நின்றா£¢. - 506
2904 - வீசுறு சுடர்வேல் ஐயன் வெய்யசூர் முதலைச் சாடித்
தேசுறு மஞ்ஞை ஊர்ந்து வந்தது தொந்து போர்செய்
காசினி யிடையே நின்ற கணங்களும் வீரர் யாரும்
ஆசறும் இளவ லுஞ்சென் றடிதொழு தார்த்துச் சூழ்ந்தார். - 507
ஆகத் திருவிருத்தம் - 2904
----------
14. தேவர்கள் போற்று படலம் (2905 - 2914)
2905 - நேரொரு சிறிதும் இல்லா நின்மலன் தனது வேலால்
சூருடல் பிளந்தி யாணர் மஞ்ஞையில் தோன்று காலைப்
பாருல கயின்ற கண்ணன் பங்கயன் அமரர் கட்கோர்
ஆரமிர் தெய்திற் றென்ன அன்னது கண்டே ஆர்த்தார். 1 - 1
2906 - ஆ£¢த்தனர் எழுந்து துள்ளி ஆடினர் பாடா நின்றார்
போர்த்தனர் பொடிப்பின் போ£¢வை பொலங்கெழு பூவின்மாரி
தூர்த்தனர் அருளை முன்னித் தொழுதனர் சுடர்வேல் கொண்ட
தீர்த்தனை எய்திச் சூழ்ந்து சிறந்துவாழ்த் தெடுக்க லுற்றார். - 2
2907 - வேறு
கார்தடிந்து துய்க்குங் கனைகடலின் நீர்வறப்பப்
போ£¢ தடிந்து செல்லும் புகர்வேல் தனைவிடுத்துச்
சூர்தடிந்தாய் அன்றே தொழுமடியேம் வல்வினையின்
வேர்தடிந்தாய் மற்றெமக்கு வேறோர் குறையுண்டோ. - 3
2908 - மாறுமுகங் கொண்டுபொரு வல்லவுணர் மாளாமல்
நூறு முகமெட்டு நோதக் கனபுரியத்
தேறு முகமின்றித் திரிந்தேமை ஆளவன்றோ
ஆறு முகங்கொண்டே அவதரித்தாய் எம்பெருமான். - 4
2909 - நீதி முறையதனில் நில்லா அசுரர்புரி
தீது பலவுளவுந் தீர்ந்தோம் பழியகன்றோம்
வேத நெறிதொல்லை வெறுக்கையொடு பெற்றனமால்
ஏதும் இலையால் எமக்கோர் குறையெந்தாய். - 5
2910 - மன்ற அவுணர் வருத்திடஇந் நாள்வரையும்
பொன்றி னவரென்னப் புலம்பித் திரிந்தனமால்
இன்று பகைமாற்றி எமக்கருள்நீ செய்கையினால்
சென்றஉயிர் மீண்ட திறம்பெற்ற னம்ஐயா. - 6
2911 - செய்யும்அவ னும்புலனுஞ் செய்வித்து நிற்போனும்
எய்த வரும்பொருளும் யாவையுநீ யேயென்கை
ஐய அடியேங்கள் அறிந்தனமால் அன்னதனால்
வெய்ய பவமகன்று வீடுமினிக் கூடுதுமால். - 7
2912 - ஈண்டே எமருக் கிடர்செய் அவுணரெலாம்
மாண்டே விளியும் வகைபுரிந்து காத்தனையால்
வேண்டேம் இனியாதும் மேலாய நின்கழற்கே
பூண்டேந் தொழும்பு புகழேம் பிறர்தமையே. - 8
2913 - என்னா இயம்பி எவருமினி தேத்துதலுங்
கொன்னார் அயில்வேற் குமர னதுகேளா
அந்நா ரணன்விரிஞ்சன் ஆதியாம் வானோர்க்குத்
தன்னா ரருளின் தலைமை புரிந்தனனே. - 9
ஆகத் திருவிருத்தம் - 2913
-----
15. இரணியன் புலம்புறு படலம் (2914 - 2934)
2914 - அதுநிகழ்ந் துழியகன்பதி அவுணர் கள்ஒரு சில்லோர்
கதுமெனச் சென்று காவலன் கந்தவேள் உய்த்திட்ட
நுதிகொள் வேலினான் மாய்ந்தனன் என்பதை நுவலுற்றா£¢
பதுமை அம்மொழி கேட்டனள் துணைவியர் பலரோடும். - 1
2915 - காவல் மன்னவன் இறந்தனன் எனுமுரை கன்னத்துள்
மேவு மெல்லை யில்அசனி ஏறுண்ட வெம்பணியேபோல்
தேவி யாகிய பதுமகோ மளையெனுந் திருமங்கை
ஆவி நீங்கினள் தலையளி ஆகிய ததுவன்றோ. - 2
2916 - எவ்வெ வர்க்கும்மே லாகிய அவுணர்கோற் கில்லாகி
அவ்வி டத்துறை துணைவியர் வயிறலைத் தழுங்குற்று
வெவ்வ ழற்பெருங் குண்டமொன் றாக்கியே விளிவுற்ற
தெய்வ தப்புனை வன்மகள் யாக்கைமுன் செலஉய்த்தார். - 3
2917 - * மான்கி ளர்ந்தன அரிமதர் மழைக்கண்மெல் லியரெல்லாம்
வான்கி ளர்ந்தெழு கின்றதோர் மாபெருங் கனலூடே
கான்கி ளர்ந்திட மலர்தருந் தாமரைக் கானத்திற்
தேன்கி ளர்ந்துதம் மினத்தொடும் புகுந்தெனச் செல்லுற்றார்.
(பா-ம் - *மீன்கிளர்ந்தன.) - 4
2918 - செல்லல் போதுமென் றொழிந்திட அரற்றினோர் செந்தீயில்
செல்லல் போதுநாள் மாலையும் அங்கியிற் சேர்ந்தோங்கும்
அல்லல் போதுமுன் நின்றிடு நிசியெலாம் அகன்றென்ன
அல்லல் போதுமா நகர்ந்திரு ஏகினள் அதுகாலை. - 5
2919 - இந்த வாறிவர் அங்கியுள் மாண்டனர் இதுநிற்கத்
தந்தை பட்டதுஞ் சேவலும் மஞ்ஞையுந் தானாகிக்
கந்த வேள்புடை வந்ததுங் கண்டனன் கலங்குற்றுப்
புந்தி நொந்துநின் றிரணியன் வானிடைப் புலம்புற்றான். - 6
2920 - வேறு
நன்றென் பதைஉணராய் நானுரைத்த வாசகங்கள்
ஒன்றுஞ் சிறிதும் உறுதியெனக் கொண்டிலையே
பொன்றும் படிக்கோ பொருதாய் புரவலனே
என்றுன்னை முன்போல இருந்திடநான் காண்பதுவே. - 7
2921 - அன்புடையன் கொல்லென் றயலா ரெடுத்துரைப்பத்
துன்புடையேன் போலத் துயரா அயா¢கின்றேன்
என்புடையே முன்னர் எனதுயிர்கொண் டேகினனால்
நின்புடையே நின்று நெடும்பழியின் நீங்காதேன். - 8
2922 - மாற்றார் வலிகண்டு மற்றுன்னை வன்செருவில்
போற்றா தொளித்த பொறியிலியேன் தன்முன்னந்
தோற்றாமல் எங்கொளித்தாய் சொல்லாய் சுதன்போலக்
கூற்றான வனைஇன்னுங் கூடமனங் கொள்ளுதியோ. - 9
2923 - கையார் அழலேந்துங் கண்ணுதலோன் தந்தவரம்
மெய்யாம் ஒருகாலும் வீடாய்அ· தெல்லாம்
பொய்யாகும் வண்ணம் புதல்வனென வந்துதித்தோன்
ஐயா உனகோர் அருங்கூற்றம் ஆயினனே. - 10
2924 - நில்லா உடலை நிலையா மெனக்கருதிப்
பல்லா ருங்கண்டு பழிக்கும் படிஉனக்குஞ்
சொல்லா தகன்றேன்நீ துஞ்சியபின் வந்தனனால்
நல்லார் களில்தேரின் நானே தலைஅன்றோர். - 11
2925 - அத்திர நேர்கூறும் அவுணர் தமக்குள் மிகக்
குத்திர னேயாகுங் கொடியேன்நீ துஞ்சியபின்
மித்திரனே போன்றிரங்கி மீண்டேன் உனக்கென்னைப்
புத்திர னேயெனகை புவிக்குப் பொறையன்றோ. - 12
2926 - ஆழியான் வேதன் அமரர்க் கிறைமுதலோர்
வாழியா யென்று வழுத்தியிட வைகியநீ
பூயார் மேனிப் புராரிசிறு வன்தேரில்
கோழியாய் நின்று விலாவொடியக் கூவுதியோ. - 13
2927 - ஓகையால் அண்டத் துயிர்களெலாம் வந்திறைஞ்சச்
சேகையாய் மல்குந் திருத்தாள்கொண் டுற்றிடுநீ
வாகையார் கின்ற வடிவேற் கரத்தோனைத்
தோகையாய் நின்று சுமக்குதியோ தோன்றாலோ. - 14
2928 - மேற்றான் விளையும் இ·தென்றே வினயமுடன்
ஆற்றான் மொழிந்தேன் அதுசிறிதுங் கேட்டிலையே
மாற்றான் எனவந்த மைந்தனுடன் போர்செய்தே
தோற்றாயே அற்றால் மயிலாய்ச் சுமக்குதியோ. - 15
2929 - மாறுற்றி டாத்தொல் வடிவந்தனை இழந்து
வேறுற்ற புள்வடிவாய் மேவினாய் ஆங்கதனால்
ஈறுற் றனைஅன்றே என்செய்கை செய்வதற்கும்
பேறுற் றிலன்வாளா பேணினேன் இவ்வுயிரே. - 16
2930 - பிள்ளைப் பிறைபுனைந்த பிஞ்ஞகன்றன் காதலனைப்
புள்ளிக் கலாபப் பொறிமயிலாய்ப் போற்றுமெல்லை
எள்ளற் பொருட்டா லியான்முன்னு ரைத்தவற்றை
உள்ளத் திடைஎந்தாய் உன்னுதியோ உன்னாயோ. - 17
2931 - பொங்குற்ற சீற்றம் பொரும்போர் இகலுள்ளந்
தங்குற்ற மானஞ் சயமகந்தை வன்மையெலாம்
அங்குற்ற நின்னை அடைந்ததிலை அவ்வனைத்தும்
எங்குற்ற தையா இயம்பாய் எனக்கதுவே. - 18
2932 - என்று கனகன் இரங்கி நெடுஞ்சேணில்
நின்று தளர்ந்து நெடிதுயிர்த்துப் பூதரெனைத்
தின்று சினந்தீர்வர் தெரியினெனச் சிந்தைசெய்து
துன்றுதிரை வேலையிடைத் தொன்மைபோற் புக்கனனே. - 19
2933 - புக்க கனகன் புலர்ந்து புகரோன்பால்
அக்கணமே எய்தி அழிவுற்ற தந்தையர்க்குந்
தக்க துணைவர்க்குந் தாயர்க்கும் ஏனையர்க்கும்
மிக்க கடன்கள் விதிமுறையே செய்தனனே. - 20
2934 - தாக்கிச் சமர்மலைந்த தானவர்க்குச் செய்பரிசே
தூக்கிப் புரிந்து துயரினுக்கோர் வித்தென்றே
ஆக்கத் தினைவெறுத்தே ஆதிப் பிரானையுள்ளே
நோக்கிக் கதியடைவான் நோற்றொருசா£¢ உற்றனனே. - 21
ஆகத் திருவிருத்தம் - 2934
------
16. மீட்சிப் படலம் (2935 - 2967)
2935 - மற்றது காலத்து மணிதூங் கியபசும்பொற்
பொற்றை புரையும் பொறிமஞ்ஞை மீதுவைகும்
வெற்றி நெடுவேற்ஆ விமலன் விறலோனைப்
பற்றி னொடுநோக்கி இனைய பகர்கின்றான். - 1
2936 - கேட்டி இதுவீர கெடலுற்ற வெஞ்சூரன்
ஈட்டு திருவென்ன இருஞ்சிறையின்
வாட்டமுறு சயந்தன் வானோர் தமையெல்லாம்
மீட்டு வருதி எனவே விளம்பினனால். - 2
2937 - குன்றம் எறிந்த குமரன்இது கூறுதலும்
நன்றி தெனவே தொழுது நனிமகிழ்ந்து
வென்றி விடலை விடைபெற்றுப் போர்க்களத்தின்
நின்றும் அவுணன் நெடுநகரத் தேகினனால். - 3
2938 - மீது படுதிண்டோன் விடலை அறந்திறம்புங்
கோது படுதீயோர் குழீஇயநக ருட்புக்குத்
தாது படுதண்டார்ச் சயந்தன் அமரருடன்
தீது படுவெயய சிறைக்களத்துச் சென்றனனே. - 4
2939 - செல்லும் விறலோன் திறத்தை நனிநோக்கி
அல்லல் அகலும் அரிசுதனும் வானோர்கள்
எல்லவரும் அற்புதநீர் எய்திப் பதம்பூட்டும்
வல்லி பரிய மலர்க்கை குவித்தனரே. - 5
2940 - செங்கை குவித்தே திறலோய் சிறைப்பட்ட
நங்கள் துயர் அகற்ற நண்ணினையோ நீயென்றே
அங்கவர்கள் எல்லோரும் ஆர்த்தெழுந்து கூறுதலும்
எங்கள் பெருமான் இளவல் இதுபுகன்றான். - 6
2941 - வம்மின்கள் வம்மின்கள் வானத்தீர் எல்லீரும்
நும்மை அயர்வித்த நொறில்பரித்தேர் வெஞ்சூரை
அம்ம அவுணர் அனிகத் துடன்எங்கோன்
இம்மெனவே வேலால் இதுபோழ் தெறிந்தனனே. - 7
2942 - என்றாங் கிசைப்ப இமையோர் அதுகேளாப்
பொன்றாது முத்தி புகுந்ததோர் எனமகிழ்ந்து
வன்றாள் மிசைப்பிணித்த வல்லிகளின் மூட்டறுத்துச்
சென்றார் அவுணன் திருநகரம் நீங்கினரே. - 8
2943 - வேறு
நுணங்கு நூலுடை இளையன் முன்செல நொய்தென்ன
அணங்கி னோருடன் சயந்தனுந் தேவரும் அவண்நீங்கிக்
குணங்கர் ஈண்டிய களத்திடை நணுகியே குமரன்தாள்
வணங்கி மும்முறை புகழ்ந்தனர் திகழ்ந்தனர் மகிழ்வுற்றார். - 9
2944 - குன்றெ றிந்தவன் அமரர்பாற் பேரருள் கொடுநோக்கி
நன்றி யில்லவன் சிறையிடைப் பலபகல் நணுகுற்றீர்
துன்று பேரிடர் மூழ்கினீர் ஈங்கினித் துரின்றி
என்றும் வாழ்குதிர் துறக்கமேல் வெறுக்கையில் இருந்தென்றான். 10 - 10
2945 - கந்தன் இம்மொழி வழங்கலுங் கடவுளர் களிப்பெய்தி
உய்ந்த னம்மெனப் பின்னரும் வணங்கினர் உதுகாணா
முந்து தொல்லிடர் நீங்கியே புந்தியில் *முதமெய்தி
இந்தி ரன்திருப் பெற்ற ஞான்றினும் இனிதுற்றான்.
( * முதம் - மகிழ்ச்சி.) - 11
2946 - கண்ட னன்தொழு மைந்தனைப் புல்லினன் களிப்புள்ளங்
கொண்ட னன்புறம் நீவினன் பல்லுகங் கொடியோன்செய்
ஒண்ட ளைப்புகுந் தெய்த்தனை போலும்என் றுரைசெய்யா
அண்டர் யாரையும் முறைமுறை தழீஇயினன் அமரேசன். - 12
2947 - செற்ற மேதகு மவுணர் தங்காவலன் செருவத்தில்
அற்றை காறுமா விளிந்திடு பூதர்தம் அனிகங்கள்
முற்று மாயிடை வரும்வகை முருகவேள் முன்னுற்றான்
மற்ற வெல்லையில் துஞ்சிய கணமெலாம் வந்துற்ற. - 13
2948 - முஞ்சு தானைக ளார்ப்பொடு குழீஇக்குழீஇ முருகேசன்
செஞ்ச ரண்முனம் பணிந்துதம் மினத்தொடுஞ் செறிகின்ற
எஞ்ச லில்லதோ ரெல்லைநீர்ப் புணரியில் எண்ணில்லா
மஞ்சு கான்றிடு நீத்தம்வந் தீண்டிய மரபென்ன. - 14
2949 - கருணை யங்கட லாகியோன் கனைகடற் கிறையாகும்
வருணன் மாமுக நோக்கியே வெய்யசூர் வைகுற்ற
முரணு றுந்திறல் மகேந்திர நகரினை முடிவெல்லைத்
தரணி யாமென உண்குதி ஒல்லையில் தடிந்தென்றான். - 15
2950 - என்ற மாத்திரைச் சலபதி விழுமிதென் றிசைவுற்றுத்
துன்று பல்லுயிர் தம்மொடு மகேந்திரத் தொல்லூரை
அன்று வன்மைசேர் புணரியுள் அழுத்தினன் அவனிக்கீழ்
நின்று மாயவன் அடுவுல குண்டிடு நெறியேபோல். - 16
2951 - ஆன காலையில் அறுமுகன் முகுந்தனும் மலரோனும்
வானு ளோர்களும் இறைவனும் வழுத்தினர் மருங்காக
ஏனை வீரர்கள் யாவரும் புடைவர இகற்பூதத்
தானை ஆர்த்துடன் சென்றிடச் செருநிலந் தணப்புற்றான். - 17
2952 - கலங்கல் கொண்டிடு மகேந்திர வரைப்பினைக் கடந்தேபின்
இலங்கை மாநகர் ஒருவியே அளக்கரை இகந்தேகி
நலங்கொள் சீருடைச்செந்தியில் தொல்லைமா நகரெய்தி
அலங்கல் அஞ்சுடர் மஞ்ஞைநின் றிழிந்தனன் அயில்வேலோன். - 18
2953 - கேக யத்தின்நின் றிழிந்துதொல் சினகரங் கிடைத்திட்டுப்
பாக சாதன னாதியாம் அமரர்கள் பணிந்தேத்த
வாகை சேர்அரித் தவிசின்மேல் வதனமூ விரண்டுள்ள
ஏக நாயகன் உலகருள் கருணையோ டினிதுற்றான். - 19
2954 - வேறு
ஈண்டிது நிகழ்ந்த எல்லை இப்பகல் அவுண ராகி
மாண்டவர் நமர்கள் அன்றே மற்றவர் படிவ முற்றுந்
தீண்டினங் கதிர்க்கை யாலுந் தீர்விதற் கிதுவென் பான்போல்
பூண்டகு தடந்தேர் வெய்யோன் புனற்பெருங் கடலுட் புக்கான்.20 - 20
2955 - வேலையின் நடுவு புக்கு மேவரும் வடவைச் செந்தீக்
காலம திறுதி யாகக் கடிதெழீஇக் ககன நக்கிப்
பாலுற விரிந்தி யாண்டும் படர்ந்துகொண் டென்ன வந்தி
மாலையம் பொழுதில் செக்கர் வான்முழு தீண்டிற் றன்றே. - 21
2956 - வேறு
அன்னதொரு போழ்துதனில் ஆறிரு தடந்தோள்
முன்னவனை நான்முகவ னேமுதல தேவர்
சென்னிகொடு தாழ்ந்துசிறி யேங்கள்இவ ணுன்றன்
பொன்னடி அருச்சனை புரிந்திடுதும் என்றா£¢. - 22
2957 - என்றுரைசெய் காலைஎமை யாளுடைய வண்ணல்
நன்றென இசைந்திட நறைக்கொள்புனல் சாந்தத்
துன்றுமலர் தீபம்அவி தூப முதலெல்லாம்
அன்றொரு கணத்தின்முன் அழைத்தனர் கள்அங்ஙன். - 23
2958 - எந்தையுமை தேர்ந்திட இயம்பிய குமார
தந்திர நெறிப்படி தவாதறு முகற்கு
முந்திய* குடங்கர்முதல் மூவகை யிடத்தும்
புந்திமகிழ் பூசனை புரிந்தனர் பரிந்தே.
( * குடங்கர் முதல் மூவகை இடம் - கும்பம், அக்கினி,
உருவமாகிய திருமேனி என்னும் மூன்று இடங்களில்.) - 24
2959 - எஞ்சலில் அருச்சனை இயற்றி இணைஇல்லோன்
செஞ்சரணி னைத்தமது சென்னிகொடு தாழா
அஞ்சலிசெய் தேத்திடலும் ஆங்க வரைநோக்கி
நெஞ்சுறு மகிழ்ச்சியொடு நீட ருள்புரிந்தான். - 25
2960 - நீண்டவருள் செய்திடு நெடுந்தகை நுமக்கு
வேண்டுகுறை யுண்டனெ¤ன் விளம்புதிர்கள் என்னக்
காண்டகைய சூர்முதல் களைந்தெமை அளித்தாய்
ஈண்டுனருள் பெற்றன மியாதுகுறை மாதோ. - 26
2961 - ஒன்றினி அளிப்பதுள துன்னடியம் யாக்கை
நின்றிடு பகற்றுணையும் நின்னிரு கழற்கண்
மன்றதலை யன்புற வரந்தருதி எந்தாய்
என்றிடலும் நன்றென இரங்கியருள் செய்தான். - 27
2962 - வேறு
மலரய னாதியாம் வரம்பி லோரெலாம்
பலர்புகழ குமரனைப் பரவி வைகினார்
உலகினில் யாரையும் ஒறுத்த தானவர்
குலமென மாய்ந்தது கொடிய கங்குலே. - 28
2963 - கங்குலுந் தாரகா கணமும் மாய்ந்திடப்
பொங்கொளி வீசியே பொருவில் ஆதவன்
இங்குள வுலகெலாம் ஈறு செய்திடுஞ்
சங்கர னாமெனத் தமியன் தோன்றினான். - 29
2964 - குணதிசை அமர்புரி கொடியர் உய்த்திடுங்
கணையென விரிகதிர் காட்டி அங்கவை
அணைதலுங் குருதிநீர் அடைந்த தன்மைபோல்
இணையறு செக்கர்பெற் றிரவி தோன்றினான். - 30
2965 - அப்பொழுது தவ்விடை அமரா¢ கம்மியன்
கைப்படு செய்கையாற் கந்த வேள்ஒரு
செப்பரு நிகேதனஞ் செய்வித் தீசனை
வைப்புறு தாணுவில் வருவித் தானரோ. - 31
2966 - ஆமயம் முதலிய ஐந்து கந்திகள்
மாமலர் மஞ்சனம் அமிர்தம் வான்துகில்
தூமணி விளக்கொடு தூபங் கண்ணடி
சாமரை ஆதிகள் அமரர் தந்திட. - 32
2967 - முழுதொருங் குணர்ந்திடு முருகன் யாவருந்
தொழுதகும இறைவனுல் தொடர்பு நாடியே
விழுமிய கண்ணுதல் விமலன் தாள்மலர்
வழிபடல் புரிந்தனன் மனங்கொள் காதலால். - 33
ஆகத் திருவிருத்தம் - 2967
--------
யுத்தகாண்டம் முற்றுப் பெற்றது
ஆகக் காண்டம் நான்குக்கு திருவிருத்தம் - 7857***
This file was last revised on 14 February 2008